பெரியாளூர்
பெரியாளூர் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வருவாய் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஊராட்சி அமைப்பாகும். இது அறந்தாங்கி தலைமை இடத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ளது
Periyalur (தமிழ்: பெரியாளூர்) | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°14′N 79°04′E / 10.24°N 79.07°Eஆள்கூறுகள்: 10°14′N 79°04′E / 10.24°N 79.07°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
பகுதி | தொண்டைமான் |
தாலுக்கா | அறந்தாங்கி |
மாவட்டம் | புதுக்கோட்டை |
பரப்பளவு | |
• மொத்தம் | 12.58 km2 (4.86 sq mi) |
ஏற்றம் | 24 m (79 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,937 |
• அடர்த்தி | 150/km2 (400/sq mi) |
மொழிகள் | |
• Official | தமிழ் |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
PIN | 614624 |
தொலைபேசி குறியீடு | (91) 4371 |
வாகனப் பதிவு | TN 55 |
இணையதளம் | www.myperiyalur.clan.su |
புள்ளிவிபரங்கள்தொகு
2001 ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி பெரியாளூரின் மொத்த மக்கள்தொகை 1937. அதில் ஆண்கள் 1011 பெண்கள் 926 என கண்க்கிடப்பட்டுள்ளது. மொத்த மக்கள்தொகையில் 1283 பேர் எழுத்தறிவு உள்ளவர்களாக கணக்கிடப்பட்டுள்ளனர்.
கல்விதொகு
அறந்தாங்கி தாலுகாவில், பெரியாளூர், கல்வியில் மிகவும் வளர்ந்த கிராமமாகும். கிராமத்தில் 90% மக்கள் நன்கு கல்வியறிவு பெற்றுள்ளனர்.ஒரு குடும்பத்தில் ஒன்று முதல் மூன்று உறுப்பினர்கள் புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் கல்வி பெற்றவர்களாக உள்ளனர்.[சான்று தேவை] இந்தப் பகுதியின் மாணவர்கள் பல துறைகளில் கல்வி பெற்றவர். 30% பெரியாளூர் மாணவர்கள் பொறியியல் படிப்பு படிக்கின்றனர். பெரியாளூரில் உள்ள திரு. அரசப்பன் நல்லாசிரியர் விருதும், பி.எஸ். யுவராஜ், இந்திய அரசாங்கத்தின் யூகவேந்திரா மற்றும் திருச்சி ஜெயம் சமூக இளைஞர் சங்கம் வழங்கும் விருதுகளைப் பெற்றுள்ளனர்.[சான்று தேவை] .இங்கு 10 ஆம் வகுப்பு வரை உள்ள உயர்நிலைப் பள்ளி உள்ளது.
பொருளாதாரம்தொகு
விவசாயம் முதன்மை தொழில் ஆகும். அருகிலுள்ள ஆற்றின் உதவியால், கிராமமானது பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்துள்ளது.
கோவில்கள்தொகு
ஸ்ரீ காளியம்மன் கோவில், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், ஸ்ரீ விநாயகர் கோவில், ஸ்ரீ முத்துலிங்க அய்யனார் சுவாமி கோவில், ஸ்ரீ கரும்பர் சுவாமி கோவில், ஸ்ரீ வீரபத்திரர் சுவாமி கோவில், ஸ்ரீ அய்யனார் சுவாமி கோவில் மற்றும் ஸ்ரீ குலவதி அம்மன் கோவில் முதலிய கோவில்கள் இங்குள்ளன. ஒவ்வொரு வருடமும், சித்திரை மாதத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது.
போக்குவரத்துதொகு
பேருந்து வசதிகள் உள்ளன. அறந்தாங்கியில் இருந்து கீரமங்கலம் வழியாக பட்டுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் பெரியாளூர் உள்ளது.