பேச்சு:தற்பிழையாகும் வருவதுரைத்தல்

தலைப்பு குறித்து தொகு

"தன்னையே பொய்யாக்கும் அருள்வாக்கு" எனுந்தலைப்பு பொருந்துவதாகத்தோன்றவில்லை. தற்பிழையாகும் வருவதுரை என்பதுபோல மாற்றலாமா? -- சுந்தர் \பேச்சு 07:31, 8 அக்டோபர் 2014 (UTC)Reply

ஆம். ”தற்பிழையாகும் வருவதுரை” நன்கு பொருந்துகிறது. மாற்றி விடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 13:19, 8 அக்டோபர் 2014 (UTC)Reply
நன்றி சோடாபாட்டில். நாளைவரை மாற்றுப்பரிந்துரைகள் எதுவும் வரவில்லையெனில் மாற்றிவிடலாம். -- சுந்தர் \பேச்சு 12:04, 9 அக்டோபர் 2014 (UTC)Reply
"வருவதுரை" என்பது வினைச்சொல் போல உள்ளது. அதற்குப் பதில் "தற்பிழையாகும் வருவதுரைத்தல்" என இருக்கலாம்.--Booradleyp1 (பேச்சு) 13:30, 9 அக்டோபர் 2014 (UTC)Reply
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 14:13, 9 அக்டோபர் 2014 (UTC)Reply
எனக்கும் அதே தயக்கம் இருந்தது, பூ. உங்கள் பரிந்துரை நன்றாகவுள்ளது. -- சுந்தர் \பேச்சு 06:53, 10 அக்டோபர் 2014 (UTC)Reply
தற்பிழையாகும் வருவதுரைத்தல் எளிமையாக இருக்கிறது. இன்னும் துல்லியம்காட்டவேண்டுமானால் தற்பிழைவகுக்கும் வருவதுரைத்தல் எனலாமா? -- சுந்தர் \பேச்சு 07:01, 10 அக்டோபர் 2014 (UTC)Reply
சுந்தர், முன்னதே (தற்பிழையாகும் வருவதுரைத்தல்) பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 13:12, 11 அக்டோபர் 2014 (UTC)Reply
நன்றி பூ. அப்படியே மாற்றிவிட்டேன். -- சுந்தர் \பேச்சு 04:12, 12 அக்டோபர் 2014 (UTC)Reply
Return to "தற்பிழையாகும் வருவதுரைத்தல்" page.