போர்பந்தர்
போர்பந்தர் (Porbandar-குஜராத்தி: પોરબંદર-உச்சரிப்பை கேளுங்கள் (உதவி·தகவல்)) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரம் மற்றும் துறைமுக நகரமாகும். இது இந்தியாவின் தேசத் தந்தையாக போற்றப்படும் மகாத்மா காந்தி பிறந்த நகரம் (ஊர்) இதுவென அனைவராலும் அறியப்படுகின்ற நகரமாகும்[1]. குஜராத் மாநிலத்தின் முக்கிய மாவட்டமான போர்பந்தர் மாவட்டத்தின் முக்கிய நகரமாகும்.
போர்பந்தர் | |
— நகரம் — | |
அமைவிடம் | 21°38′N 69°36′E / 21.63°N 69.6°E |
நாடு | ![]() |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | போர்பந்தர் |
[[குஜராத் ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |
[[குஜராத் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |
மக்களவைத் தொகுதி | போர்பந்தர் |
மக்கள் தொகை | 133,083 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 0 மீட்டர்கள் (0 அடி) |
நகரம் தொகு
போர்பந்தர் எனும் பெயர் இரு வாரத்தைகளின் கூட்டு சொல்லாக வந்தது. போரை என்னும் சொல் தேவதையையும் மற்றும் பந்தர் என்னும் சொல் துறைமுகம் என்று பொருளைக்குறிக்கும் சொற்களை கொண்டு உருவானது ஆகும். மேற்கு இந்தியாவில் அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்றவாறு அமைந்திருக்கும் துறைமுக நகரமான இந்நகரம் 1,50,000 மக்கள் தொகையை 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கொண்டாதாகும். காந்தி பிறந்த நகராமான இந்நகரம் அவரின் நினைவைப் போற்றும் வகையில் விளங்குகின்றது. விமானத் தளம் மற்றும் தொடர்வண்டி நிலையத்துடன் கூடிய மிகச்சிறந்த சுற்றுலாத் தளமாக தற்பொழுது இந்நகரம் தோற்றமளிக்கின்றது. ஆழமான துறைமுக கட்டுமானம் 20 நூற்றாண்டின் கால் இறுதியில் கட்டி முடிக்கப்பட்டது.
முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தொகு
கீதா ஆலயம் (மந்திர்), போர்பந்தர்
- கீர்த்தி ஆலயம் (கீர்த்தி மந்திர்- மகாத்மா கந்தியின் பிறப்பிடம்)
- சுதாமா ஆலயம் (சுதாமா மந்திர்)
- பாரத் ஆலயம்
- கீதா ஆலயம்
- காயத்ரி ஆலயம்
- ராம் தூன் ஆலயம்
- ரொகாதியா அனுமன் கோவில்
- சண்டிபாணி வித்யாநிக்கேதன்
- பறவைகள் சரணாலயம்
- ரானா பாபுவின் மாளிகை (மகால்)
- சௌபதி
- சத்யநாரயணனின் ஆலயம்
- கமலா நேரு பூங்கா
- சாய் பாபா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தத் சாய் ஆலயம் ஒவ்வொரு வியாழன் அன்றும் மக்கள கூட்டம் அலைமோதும் இடமாக, அவ்விடத்தில் வழங்கும் பிரசாதமாக வழங்கப்படும் கிச்சடி ம்ற்றும் காய்கறிகளுக்காக மக்கள் காத்திருந்து பெறுகின்றனர்.
- ஸ்ரீ அரி ஆலயம்
- மேனி வண்டிஸ் (சமூக நல மையம்)
- நேரு கோளரங்கம்
- தாரா ஆலயம் - தாரா குஜராத் மக்களின் விண்மீன். இவ்விடத்தில் இரண்டு கோளரங்கங்கள் ஜவஹர்லால் நேருவால் துவக்கி வைக்கப்பட்டது ஆகும். நுழைவு கட்ணமாக 10 நிமிட நேரத்திற்கு பெரியவர்களுக்கு 5 ரூபாயும் சிறிவர்களுக்கு 2 ரூபாயும் வசூலிக்கப்படுகின்றது.
- சுவாமிநாராயண் ஆலயம்
வெளி இணைப்புகள் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "Porbandar". The Official Website of Gujarat Tourism. http://www.gujarattourism.com/destination/details/7/273. பார்த்த நாள்: 18 சூலை 2015.