மர்மத் திரைப்படம்

மர்மத் திரைப்படம் (Mystery film) என்பது திரைப்படத்தில் உள்ள வகையாகும். இந்த திரைப்படத்தின் வகை குற்றத்தின் தீர்வைச் சுற்றியே எடுக்கப்படுகின்றது. இது தடயங்களை, ஆய்வுகள், துப்பறிவு அல்லது தனியார் புலனாய்வு முயற்சிகள் குறித்து கவனம் செலுத்துகிறது. துப்பறியும் நபரின் துப்பறியும் திறன், வலிமை, நம்பிக்கை அல்லது விடாமுயற்சி கொண்டவராக சித்தரிக்கப்படுகின்றது. இது உளவுத் திரைப்படத்தின் துணை வகை ஆகும்.[1] நேயர்களை பரப்பூட்டுவதற்காக ஒலிப்பதிவு, நிகழ்ப்பட கோணங்கள், கனமான நிழல்கள் மற்றும் ஆச்சரியப்படுத்தும் திருப்பங்கள் மூலம் கவரப்படுகின்றது.

தமிழ் தொலைக்காட்சி ஆரம்பித்த காலம் முதலே மர்மதேசம், விடாது கருப்பு, புதையல் பூமி, ருத்திரவீனை (2002-2004), சித்தமபர ரகசியம் (2004-2006) போன்ற பல மர்மத் தொடர்கள் வெளியானது. 1997 ஆம் ஆண்டு மர்மதேசம் என்ற தொடர் தமிழர் மத்தியில் மிகபெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த தொடரை நாகா என்பவர் இயக்கியுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்மத்_திரைப்படம்&oldid=2980736" இலிருந்து மீள்விக்கப்பட்டது