மானசு தேசியப் பூங்கா

மானசு தேசியப் பூங்கா (Manas National Park) அல்லது மானசு வனவிலங்கு காப்பாகம் (Manas Wildlife Sanctuary) அசாம் மாநிலத்தில் கவுகாத்தியிலிருந்து 167 கிலோமீட்டர் தொலைவில் பூடான் நாட்டு எல்லையை ஒட்டி தர்ரங் மாவட்டத்தில் அமைந்துள்ளது . இந்த வனப்பகுதியில் மானசு நதி பாய்கிறது. இதன் மொத்தப் பரப்பளவு 391 சதுர கிலோமீட்டர் ஆகும். இது 1928 - ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இந்த சரணாலயத்தில் புலி, யானை, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் போன்ற பலவகை விலங்குகளும், பலவகைப் பறவைகளும் இருக்கின்றன.[1] இமயமலை அடிவாரத்தில் உள்ள இந்தக் காட்டுப்பகுதியில் உள்ள விலங்குகளை, முக்கியமாக, புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஐ.நா.வின் கலாச்சாரம், கல்வி, மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கான யுனெசுகோ (UNESCO) அமைப்பு, 1992 ஆம் ஆண்டு இப்பகுதியை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.[2][3]

மானசு வனவிலங்கு காப்பகம்
மானசு வனவிலங்கு காப்பகம் நுழைவு வாயில்
அமைவிடம்தர்ரங் மாவட்டம், அசாம், இந்தியா
அருகாமை நகரம்பார்பெட்டா ரோடு
பரப்பளவு950 km².
நிறுவப்பட்டது1990
வருகையாளர்கள்NA (in NA)
வலைத்தளம்http://www.manasassam.org
வகைNatural
வரன்முறைvii, ix, x
தெரியப்பட்டது1985
உசாவு எண்338
State Party இந்தியா
RegionList of World Heritage Sites in Asia and Australasia
List of World Heritage in Danger1992–2011

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மானசு_தேசியப்_பூங்கா&oldid=3701868" இலிருந்து மீள்விக்கப்பட்டது