முல்லை (திணை)

முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும்.[1] காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. " மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் தொல்காப்பியம் முல்லை பற்றிக் கூறுகிறது.

முல்லை நிலத்தின் பொழுதுகள் தொகு

கார் என்னும் பெரும் பொழுதும், மாலை என்னும் சிறுபொழுதும் முல்லை நிலத்திற்குரிய பொழுதுகளாகும்.

முல்லை நிலத்தின் கருப்பொருட்கள் தொகு

  • தெய்வம்: திருமால் (பெருமாள்)
  • மக்கள்: ஆயர், ஆய்ச்சியர், இடையர் , இடைச்சியர்
  • விலங்கு: மான், முயல்
  • உணவு: தினை, சாமை, நெய், பால்.
  • பறவைகள்:காட்டு கோழி, கருடன்
  • தொழில்: கால்நடை வளர்ப்பு , உழவுத்தொழில் செய்தல்
  • விளையாட்டு: ஏறுதழுவுதல்
  • புலவர்: பேயனார்

முல்லை நிலத்தின் உரிப்பொருட்கள் தொகு

  • அக ஒழுக்கம் : இருத்தல்
  • புற ஒழுக்கம் : வஞ்சி

மேற்கோள்கள் தொகு

  1. "ஐந்திணை".
தமிழர் நிலத்திணைகள்
குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்லை_(திணை)&oldid=3820043" இலிருந்து மீள்விக்கப்பட்டது