மெருதுங்கா

குசராத்தைச் சேர்ந்த ஒரு இடைக்கால அறிஞர்

மெருதுங்கா (Merutunga) இந்தியாவின் இன்றைய குசராத்தைச் சேர்ந்த ஒரு இடைக்கால அறிஞரும் அஞ்சலா கச்சாவின் சுவேதாம்பர சைனத் துறவியும் ஆவார். பொ.ஊ.1306 - இயற்றப்பட்ட இவரது பிரபந்த சிந்தாமணி என்ற சமசுகிருத உரைக்காக இவர் தற்போது மிகவும் பிரபலமானவர்.[1][2] இவர் 1350-இல் சாவ்தா, சோலாங்கி மற்றும் வகேலா வம்சங்களின் காலவரிசையை விவரிக்கும் விசாரஸ்ரேணி என்ற நூலையும் எழுதினார். [3][4]

மெருதுங்கா
பிறப்பு14ஆம் நூற்றாண்டு
இறப்பு14ஆம் நூற்றாண்டு

ஒரு வரலாற்றாசிரியராக, இவரது சமகாலத்தவர்களுடனும் நவீன வரலாற்றாசிரியர்களுடனும் ஒப்பிடுகையில், மெருதுங்காவின் படைப்புகள் பொதுவாக தரம் குறைந்ததாகக் கருதப்படுகிறது. [5][6] "மெருதுங்காவின் கதைகளில் தேதிகள் மிகவும் பலவீனமானவையாக உள்ளதாக" குசராத்தி வரலாற்றாசிரியர் கே. எம். முன்ஷி கூறுகிறார்.[7] மேலும், பிரித்தானிய இந்தியவியலாளர் ஏ.கே. வார்டர் மெருதுங்காவின் வரலாறுகளை "முற்றிலும் நம்பமுடியாதவை" என்றும் அவரது கதைகள் "அடிப்படையில் புனைகதை" என்றும் நிராகரிக்கிறார். [8]

சான்றுகள் தொகு

  1. Cort 2001, ப. 35.
  2. Sen 1999, ப. 79.
  3. Kailash Chand Jain 1991, ப. 85.
  4. Rajyagor, S. B.; Chopra, Pran Nath (1982). "Chapter II: Source Materials of History of Gujarat". History of Gujarat. New Delhi: S. Chand & Company Ltd. பக். 17. இணையக் கணினி நூலக மையம்:12215325. https://books.google.com/books?id=-0pAAAAAMAAJ. 
  5. Crouzet 1965, ப. 237.
  6. Arai 1978.
  7. Mahesh Singh 1984, ப. 30.
  8. A. K. Warder 1992, ப. 151.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெருதுங்கா&oldid=3453183" இலிருந்து மீள்விக்கப்பட்டது