மேகலா சித்ரவேல்
மேகலா சித்ரவேல் (Megala chitravel) இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார்.[1] [2]தமிழில் 62 நாவல்களையும் இதர தலைப்புகளில் 32 நூல்களையும் இவர் எழுதியுள்ளார். மேகலா சித்ரவேலின் நாவல்களை மூன்று மாணவர்கள் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக ஆய்வு செய்துள்ளனர். குமுதம் சினேகிதி இதழின் துணை ஆசிரியாகவும் பணிபுரிந்துள்ள இவரின் சிறுகதைகள் அனைத்திந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளன.
மேகலா சித்ரவேல் Megala chitravel | |
---|---|
பிறப்பு | மேகலா கடலூர், தமிழ்நாடு, ![]() |
இருப்பிடம் | சென்னை |
தேசியம் | இந்தியர், |
கல்வி | எம்.ஏ. பி.எட்., |
அறியப்படுவது | எழுத்தாளர், பேச்சாளர் |
சமயம் | இந்து |
பெற்றோர்(கள்) | இரெ. இளம்வழுதி (தந்தை) விசாலாட்சி இளம்வழுதி (தாய்) |
வாழ்க்கைத் துணை | மருத்துவர் சித்ரவேல் |
பிள்ளைகள் | இயக்குநர் வெற்றிமாறன், மருத்துவர் வந்தனா |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுதென்னாற்காடு மாவட்டமாக இருந்த கடலூரில் விசாலாட்சி - இரெ. இளம்வழுதி இணையருக்கு மேகலா பிறந்தார்.[3] இவர் தந்தை, பகுத்தறிவுச் சிங்கம் என்று அறிஞர் அண்ணாவால் அழைக்கப்பட்டவர்.
புகழேந்தி, பன்னீர் செல்வம் என்ற இரண்டு சகோதரர்களும் உதயராணி, கலையரசி, மாலதி என்று மூன்று சகோதரிகளும் இவருக்கு உடன்பிறந்தவர்களாவர்.
தூத்துக்குடி மாவட்டம் அக்காசாலை என்ற கிராமத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் சித்ரவேலை மேகலா திருமணம் செய்து கொண்டார். ஆடுகளம் திரைப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன்[4] மற்றும் வந்தனா இருவரும் மேகலா சித்ரவேல் தம்பதியரின் குழந்தைகளாவர்.[5]
எழுதிய புதினங்கள்
தொகு- மதுரா
- காதலடி நீ எனக்கு
- நான் நப்பின்னை பேசுகிறேன்
- ஈரமான ரோஜாவே
- ஆற்றோட்டத்துப் பூக்கள்
- காதல் ஒருவனைக் கைப்பிடித்தே
- கனாக் கண்டேன் தோழி
- எல்லே ... இளங்கிளியே!
- கங்கா[6]
- வாடாமல்லி
- ரதிதேவி வந்தாள்
- சொர்ணப் புறா
- ஒரு பூ மலர்ந்தபோது
- மழைவில்
- கைத்தலம் பற்ற
- சித்ர சலபம்
- கண்ணாடி நிலவு
- பளிங்கு பூக்களின் ஊர்வலம்
- ஆனந்தப் பூத்தூறல்
- காதல் தாமரை
- மஞ்சள் மத்தாப்பு
- நகுலனின் மாதங்கி
- அப்பா குருவிகள்
- விக்ரம துளசி
- வசந்தமே வருக[7]
- முத்தழகி
- ஜெகதா[8]
- நதியே பெண் நதியே[9]
- மழை மேக மயில்கள்
- கமலி அண்ணி
- ஜரிகை பட்டாம் பூச்சிகள்
- செவ்வரளிப் பூ
- வரலாறு படைத்த வள்ளல் எம்.ஜி.ஆர்
- சௌகந்தி
- பூவே வெண்பூவே,
- வாலைக் குமரியடி
- போய்வா சினேகிதி
- மதுர நிலவே மதுரா
- ஒரு பூ மலர்ந்த போது
- அவளோடு வானவில்
- நெஞ்சத்தில் நீ
- தென்றல் வரும் நேரம்
- வா பொன்மயிலே!
- பொன்மலர்
- சந்தன மலர் சிரித்தது
- பூவே நீயும் பெண்தானே
- செவ்வந்திப் பூவும் வெள்ளி நிலவும்
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.hindutamil.in/news/others/141659-2018-1.html
- ↑ "'திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.' சைதை துரைசாமி பேச்சு". Dailythanthi.com. 2018-08-20. Retrieved 2022-02-01.
- ↑ "Welcome to Tamil Movie Data Base of Tamilstar.com". profile.tamilstar.com. Retrieved 2022-01-30.
- ↑ https://www.thehindu.com/features/cinema/journey-of-the-mind/article2302077.ece
- ↑ "எங்க அப்பா M.A., B.L.,ஆனா பொண்ணுங்க யாருமே 4 வது தாண்டலை, நான் அந்த தடையை உடைச்சேன்.". தினமணி. https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/oct/25/director-vijayamarans-mother-shared-some-interesting-facts-about-her-son-3262980.html. பார்த்த நாள்: 23 January 2022.
- ↑ "Novel Discussion - 5". Penmai Community Forum (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-01-30.
- ↑ "வசந்தமே வருக /மேகலா சித்ரவேல். Vacantamē varuka /Mēkalā Citravēl. – National Library". www.nlb.gov.sg. Retrieved 2022-01-30.
- ↑ "ஜெகதா". INDIAN CULTURE (in ஆங்கிலம்). Retrieved 2022-01-30.
- ↑ "நதியே பெண் நதியே... /மேகலா சித்ரவேல். Natiyē peṇ natiyē... /Mēkalā Citravēl. – National Library". www.nlb.gov.sg. Retrieved 2022-01-30.