ரவிதாசன் (கதைமாந்தர்)

ரவிதாசர், ரவிதாசன் என்ற பெயர்களில் உள்ள கட்டுரைகளையும் பார்க்கவும்.

ரவிதாசன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற பாண்டிய ஆபத்துதவிகளில் ஒருவராவார். மேலும் பழுவூர் இளயராணி நந்தினி தேவியின் துணையுடன் வீரபாண்டியனின் மரணத்திற்காக சுந்தர சோழரின் குடும்பத்தை பழிவாங்க முயற்சிக்கும் நபராக வருகிறார். வரலாற்றில் இடம்பெற்ற ரவிதாசனைச் சற்று புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.

ரவிதாசன்
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
முதல் தோற்றம் பொன்னியின் செல்வன்
உருவாக்கியவர் கல்கி
தகவல்
பிற பெயர்பாண்டிய ஆபத்துதவிகள், மந்திரவாதி ரவிதாசன்
தொழில்வீரபாண்டியனைக் கொன்றமைக்காக சோழ குடும்பத்தினை பழிவாங்குதல்.
தேசிய இனம்பாண்டிய நாடு

கதாப்பாத்திரத்தின் இயல்பு தொகு

இவரை மந்திரவாதி ரவிதாசன் என்று அழைக்கின்றார்கள். ஆந்தைபோல குரல் எழுப்பி நந்தினியையும், ராக்கம்மாளையும் சந்தித்து பேசுகிறார். நந்தினியிடம் பனை இலச்சினை மோதிரங்களையும், தங்க காசுகளையும் பெற்றுக் கொள்கிறார். அருள்மொழி வர்மரைக் கொல்ல ஈழத்திற்கு தன் நண்பனுடன் புறப்படுகிறார். ஆதித்த கரிகாலனைக் கொன்றவராக இருக்கலாம் என்று சந்தேகம் கொள்கின்றார்கள்.

நூல்கள் தொகு

ரவிதாசனை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

இவற்றையும் பார்க்கவும் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவிதாசன்_(கதைமாந்தர்)&oldid=3596347" இலிருந்து மீள்விக்கப்பட்டது