லாலு பிரசாத் யாதவ்

பீகாரின் 20ஆவது முதலமைச்சர்

லாலு பிரசாத் யாதவ் (இந்தி: लालू प्रसाद यादव, பி. ஜூன் 11, 1948) இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஒரு அரசியல்வாதி ஆவார். 4ஆம் மக்களவையில் இந்திய நடுவண் அரசு தொடருந்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். லாலு பிரசாத் யாதவ் இராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். 14ஆம் மக்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 15ஆம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இவர் சரன் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.லாலு பிரசாத் யாதவ் வழக்கின் மூலம் தன் முதல்வர் பதவியை இழக்க நேரிட்ட போது அவரின் மனைவியான ரப்பரி தேவியை முதல்வர் நாற்காலியில் அமரவைத்து ஆட்சி செய்தார். இந்திய வரலாற்றில் நஷ்டத்தில் இருந்த ரயில்வே துறையை லாபத்தில் இயக்கியது இவர் ரயில்வே அமைச்சராக இருந்த போது தான்.

லாலு பிரசாத் யாதவ்
Lalu Prasad Yadav addressing the EEC - 2006 (cropped).jpg
இந்திய இரயில்வே அமைச்சர்
பதவியில்
24 மே 2004 – 23 மே 2009
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் நிதிஷ் குமார்
பின்வந்தவர் மம்தா பானர்ஜி
தொகுதி சாரண்
20வது பீகார் முதல்வர்
பதவியில்
4 ஏப்ரல் 1995 – 25 ஜூலை 1997
முன்னவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்வந்தவர் ராப்ரி தேவி
பதவியில்
10 மார்ச் 1990 – 28 மார்ச் 1995
முன்னவர் ஜகந்நாத் மிஸ்ரா
பின்வந்தவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
சாப்ரா தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
24 மே 2004 – 22 மே 2009
முன்னவர் ராஜீவ் பிரதாப் ரூடி
பின்வந்தவர் தொகுதி பிரிக்கப்பட்டது
பதவியில்
2 டிசம்பர் 1989 – 13 மார்ச்1991
முன்னவர் ரம்பஹதூர் சிங்
பின்வந்தவர் லால் பாபு ராய்
பதவியில்
23 மார்ச் 1977 – 22 ஆகஸ்ட் 1979
முன்னவர் ராம்சேகர் பிரசாத் சிங்
பின்வந்தவர் ஸ்டாயா தியோ சிங்
தனிநபர் தகவல்
பிறப்பு 11 சூன் 1948 (1948-06-11) (அகவை 74)
கோபால்கஞ்ச், பீகார், இந்தியா[1]
அரசியல் கட்சி இராச்டிரிய ஜனதா தளம்
வாழ்க்கை துணைவர்(கள்) ராப்ரி தேவி
பிள்ளைகள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ், மிசா பாரதி உட்பட 9 குழந்தைகள்
பெற்றோர் குண்டன் ரே (தந்தை)
மராச்சியா தேவி (தாய்)
படித்த கல்வி நிறுவனங்கள் வணிகவியலில் இளங்கலை, பாட்னா பல்கலைக்கழகம்
இணையம் http://rjd.co.in/shri-lalu-prasad-yadav.html

வழக்குதொகு

1990 ஆம் ஆண்டு லாலு பிரசாத் முதல்வராக இருந்தபோது, போலி ரசீதுகள் தாக்கல் செய்து 37 கோடியே 70 லட்சம் ரூபாய் அளவிற்கு கால்நடைத் தீவன ஊழல் செய்ததாக லாலு பிரசாத் மீது வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 30 செப்டம்பர் 2013 அன்று லாலு குற்றவாளி என அறிவித்து தீர்ப்பு வழங்கியது[2] இவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்துள்ளது, இதனால் இவர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பதவியை இழந்தார்.[3][4]

தேர்தலில் போட்டியிடும் தகுதிதொகு

லாலு பிரசாத் யாதவ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டாலும், தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி என்ற அடிப்படையில் அவர் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.[5]

மேற்குறிப்புகள்தொகு

  1. "Profile: Lalu Prasad Yadav". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 22 October 2013. https://web.archive.org/web/20131022023958/http://timesofindia.indiatimes.com/home/specials/Profile-Lalu-Prasad-Yadav/articleshow/2015298.cms. 
  2. "சிறையில் அடைக்கப்பட்டார் லாலு பிரசாத்!". 2013-10-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-09-30 அன்று பார்க்கப்பட்டது.
  3. Lalu Prasad gets 5-year jail term in fodder scam case, loses Lok Sabha seat
  4. "எம்.பி.க்களான லாலு பிரசாத் யாதவ், ஜகதீஷ் ஷர்மா பதவி நீக்கம்". பி பி சி. 17 சனவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.
  5. "கால்நடை தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்". தினமணி. 17 சனவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாலு_பிரசாத்_யாதவ்&oldid=3676769" இருந்து மீள்விக்கப்பட்டது