வல்லிக்கண்ணன்

திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள்

வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 12, 1920 - நவம்பர் 9, 2006) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். 1930களிலும், 40களின் துவக்க ஆண்டுகளிலில் லோகசக்தி, பாரதசக்தி போன்ற பத்திரிகைகளில் வல்லிக்கண்ணன் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளும் பாடல்கள் என ரா. சு. கிருஷ்ணஸ்வாமி என்றும், ராசுகி என்ற பெயர்களில் எழுதத்துவங்கினார். அந்தச் சமயத்தில் தனக்கு ஒரு புனைபெயர் தேவை என எண்ணினார். இதையடுத்து அவரது சொந்த ஊரான ராஜவல்லிபுரத்தில் உள்ள வல்லியையும் கிருஷ்ணஸ்வாமி என்ற தன்பெயரை கண்ணன் என மாற்றி இரண்டையும் இணைத்து, வல்லிக்கண்ணன் என்ற பெயரில் எழுதத்தொடங்கியவர்.[1] எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய "வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ரா. சு. கிருஷ்ணசாமி
பிறப்புரா. சு. கிருஷ்ணசாமி
(1920-11-12)நவம்பர் 12, 1920
ராஜவல்லிபுரம், தமிழ்நாடு
இறப்பு9 நவம்பர் 2006(2006-11-09) (அகவை 85)
புனைபெயர்வல்லிக்கண்ணன்
தொழில்எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
வகைசிறுகதை, மொழிபெயர்ப்பு கதைகள்
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்திய அகாதமி விருது (1978)
கையொப்பம்

சில நூல்கள் தொகு

அ.நா.பாலகிருஷ்ணன் தொகுத்த “சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன்” எனும் நூலில் வல்லிக்கண்ணன் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நூல்களின் பட்டியல் இது.[2]

  1. கல்யாணி முதலிய சிறுகதைகள் - 1944
  2. நாட்டியக்காரி - 1944
  3. உவமை நயம் (கட்டுரை) - 1945
  4. குஞ்சலாடு (நையாண்டி பாரதி ) - 1946
  5. கோயில்களை மூடுங்கள்! (கோர நாதன்) கட்டுரை - 1946
  6. பாரதிதாசனின் உவமை நயம் - 1946
  7. ஓடிப் போனவள் கதை (சொக்கலிங்கம்) - கதை - 1948
  8. அடியுங்கள் சாவுமணி (மிவாஸ்கி) கட்டுரை - 1947
  9. சினிமாவில் கடவுள்கள் (கோரநாதன்) கட்டுரை -1948
  10. மத்தாப்பு சுந்தரி (கதை) - 1948
  11. நாசகாரக் கும்பல் (நையாண்டி பாரதி) நாடகம் - 1948
  12. ராதை சிரித்தாள் - 1948
  13. கொடு கல்தா (கோரநாதன்) கட்டுரை - 1948
  14. எப்படி உருப்படும்? (கோரநாதன்) கட்டுரை - 1948
  15. விடியுமா? நாடகம் - 1948
  16. ஒய்யாரி (குறுநாவல்) - 1949
  17. அவள் ஒரு எக்ஸ்ட்ரா (குறுநாவல்)- 1949
  18. கேட்பாரில்லை (கோரநாதன்) கட்டுரை - 1949
  19. அறிவின் கேள்வி (கோரநாதன்) - கட்டுரை - 1949
  20. விவாகரத்து தேவைதானா ( கட்டுரை) - 1950
  21. நல்ல மனைவியை அடைவது எப்படி? (கட்டுரை) - 1950
  22. கல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா ? (கட்டுரை) - 1950
  23. கல்யாணம் இன்பம் கொடுப்பதா? இன்பத்தைக் கெடுப்பதா? - 1950
  24. அத்தை மகள் (குறுநாவல்) - 1950
  25. முத்தம் (குறுநாவல்) - 1951
  26. செவ்வானம் (கோரநாதன்) நாவல் - 1951
  27. கடலில் நடந்தது ( கார்க்கி கதைகள் (மொழியாக்கம் )- 1951
  28. இருளடைந்த பங்களா (கதை) - 1952
  29. வல்லிக் கண்ணன் கதைகள் (கயிலைப் பதிப்பகம்)
  30. நம் நேரு (வரலாறு) - 1954
  31. விஜயலட்சுமி பண்டிட் (வரலாறு) - 1954
  32. லால்ஸ்டாய் கதைகள் (மொழியாக்கம்)- 1957
  33. சகுந்தலா (நாவல்) - 1957
  34. கார்க்கி கட்டுரைகள் (மொழியாக்கம்) - 1957
  35. சின்னஞ்சிறு பெண் (மொழியாக்கம்) - 1957
  36. தாத்தாவும் பேரனும் (மொழியாக்கம் ) - 1959
  37. விடிவெள்ளி (குறுநாவல்) - 1962
  38. அன்னக்கிளி (நூல்) - 1962
  39. ஆண் சிங்கம் (சிறுகதைகள்) - 1964
  40. முத்துக் குளிப்பு (கட்டுரைகள் ) - 1965
  41. வசந்தம் மலர்ந்தது (நாவல்) - 1966
  42. வீடும் வெளியும் (நாவல்) - 1967
  43. அமர வேதனை (கவிதை) - 1974
  44. வாழ விரும்பியவன் (சிறுகதை)- 1975
  45. புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (கட்டுரை) - 1977
  46. ஒரு வீட்டின் கதை (நாவல்) - 1979
  47. காலத்தின் குரல் (60 கேள்வி பதில்) - 1980
  48. சரச்வதி காலம் கட்டுரை) - 1980
  49. நினைவுச் சரம் (நாவல்)- 1980
  50. அலைமோதும் கடல் ஓரத்தில் (நாவல்) - 1980
  51. பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை (கட்டுரை) - 1981
  52. இருட்டு ராஜா (நாவல்) - 1985
  53. எழுத்தாளர்கள்-பத்திரிககள்- அன்றும் இன்றும் (கட்டுரை) - 1986
  54. ராகுல் சாங்கிருத்யாயன் (சாகித்ய அகாடமி B.B.சிற்பி) -1986
  55. சரஸ்வதி காலம் - 1986
  56. புதுமைப்பித்தன் (சாகித்ய அகாடமி B.B.சிற்பி) - 1987
  57. வாசகர்கள் விமர்சகர்கள் (கட்டுரை) - 1987
  58. மக்கள் கலாசாரத்த மண்ணாக்கும் சக்திகள் - 1987
  59. வல்லிக் கண்ணனின் போராட்டங்கள் (கட்டுரை) - 1988
  60. அருமையான துணை (சிறுகதைகள்) - 1991
  61. மன்னிக்கத் தெரியாதவர் (குறுநாவல் தொகுப்பு) - 1991
  62. தமிழில் சிறு பத்திரிகைகள் (கட்டுரை) - 1991
  63. வல்லிக் கண்ணனின் கதைகள் (மணியன் பதிப்பகம்) - 1991
  64. மனிதர்கள் சிறுகதைகள் - 1991
  65. ஆர்மீனியன் சிறுகதைகள் (மொ.பெ) - 1991
  66. சுதந்திரப் பறவைகள் (சிறுகதைகள்)- 1994
  67. சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொ. பெ.)-995
  68. சமீபத்திய தமிழ் சிறு கதைகள் ( N. B. T.தொகுப்பு )
  69. பெரிய மனுஷி (சிறு கதை N.B.T.(பால புத்தக வரிசை ).
  70. வல்லிக் கண்ணன் கடிதங்கள் (கடிதங்கள் ) - 1999
  71. தீபம் யுகம் (கட்டுரை) - 1999
  72. வல்லிக்கண்ணன் கதைகள் (சிறுகதைகள் - இராஜராஜன் பிரசுரம்)- 2000
  73. ஒரு வீட்டின் கதை; கல்பனா இதழ்
  • அ.நா.பாலகிருஷ்ணன் தொகுப்பில் இடம் பெறாத மேலும் சில நூல்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
  1. தமிழில் சிறு பத்திரிகைகள் - 1991

சான்றாவணங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. நூல் : தமிழ்ச் சொல்லாக்கம், சுரதா, பக்கம் 144
  2. அ.நா.பாலகிருஷ்ணன் தொகுத்த “சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன்” - ஞானியாரடிகள் தமிழ் மன்றம், சென்னை வெளியீடு. முதற்பதிப்பு 2000.

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லிக்கண்ணன்&oldid=3712774" இலிருந்து மீள்விக்கப்பட்டது