வாசுதேவன் (சகமான வம்சம்)

சகமான வம்ச ஆட்சியாளர்

வாசுதேவன் (Vasudeva) (கி.பி. 6 ஆம் நூற்றாண்டு) சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். இவர், வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை ஆட்சி செய்தார்.

வாசுதேவன்
சபடலக்ச நாட்டின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்பொது ஊழி 551 - 684
பின்னையவர்சமந்தராஜன்
அரசமரபுசாகம்பரியின் சௌகான்கள்

வம்சத்தின் நிறுவனர் சகமானன் என அறியப்பட்டாலும், வாசுதேவன் வம்சத்தின் ஆரம்பகால ஆட்சியாளராக அறியப்படுகிறார். 14 ஆம் நூற்றாண்டின் சமண அறிஞரான இராஜசேகர சூரியின் பிரபந்த கோஷம் என்ற நூலின்படி, வாசுதேவன் கிபி 551 இல் (608 விக்ரம் நாட்காட்டி ) அரியணை ஏறினார். இந்த அறிக்கையின் வரலாற்று துல்லியம் உறுதியாக இல்லை. [1]

பிருத்விராஜ விஜயம் என்ற நூலில் உள்ள ஒரு புராணக் கணக்கு, ஒரு வித்யாதரிடமிருந்து (ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட உயிரினம்) பரிசாக சாம்பர் உப்பு ஏரியை வாசுதேவன் பெற்றதாகக் கூறுகிறது.[2] இவரது வழித்தோன்றலான சோமேசுவரரின் பிஜோலியா கல்வெட்டு, ஏரி வாசுதேவனால் உருவானது என்று கூறுகிறது. [1]

அடுத்த அறியப்பட்ட சகாமான அரசர் சமந்தராஜன் என்பவராவார். அவருக்கும் வாசுதேவனுக்கும் உள்ள தொடர்பு கிடைக்கக்கூடிய வரலாற்றுப் பதிவுகளில் இருந்து தெளிவாகத் தெரியவில்லை. [3]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 Dasharatha Sharma 1959, ப. 23.
  2. R. B. Singh 1964, ப. 84.
  3. R. B. Singh 1964, ப. 85.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசுதேவன்_(சகமான_வம்சம்)&oldid=3453140" இலிருந்து மீள்விக்கப்பட்டது