வாணியம்பாடி வட்டம்

இந்தியாவில் உள்ள மனித குடியிருப்பு

வாணியம்பாடி வட்டம் , தமிழ்நாட்டில் 28 நவம்பர் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தின் 4 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக வாணியம்பாடி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் வாணியம்பாடி, ஆண்டியப்பனூர், ஆம்பலூர் என 3 உள்வட்டங்களும், 48 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]இவ்வட்டத்தில் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 336,548 ஆகும். அதில் 168,996 ஆண்களும், 167,552 பெண்களும் உள்ளனர். 77,178 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 59.4% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 75.59% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 991 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 40821 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 919 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 60,711 மற்றும் 3,659 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 79.36%, இசுலாமியர்கள் 19.31%, கிறித்தவர்கள் 1.02% மற்றும் பிறர் 0.32% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணியம்பாடி_வட்டம்&oldid=3853062" இலிருந்து மீள்விக்கப்பட்டது