விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகத்து 11, 2024

ஒளி மாசு என்பது தேவையற்ற அல்லது அதிகப்படியான செயற்கை விளக்குகளில் இருந்து வெளிப்படும் ஒளியாகும். விளக்கமாக கூறுவதானால் ஒளி மாசுபாடு என்பது பகல் அல்லது இரவின் போது, ​​மோசமாக பயன்படுத்தப்படும் ஒளி மூலங்களின் விளைவுகளைக் குறிக்கிறது. இந்த வகை மாசுபாடு பகல் முழுவதும் இருக்கக்கூடும் என்றாலும், இரவு வானத்தின் இருளில் தாக்கம் செலுத்துகின்றன. உலகின் 83 விழுக்காடு மக்கள் ஒளி மாசுபட்ட வானத்தின் கீழ் வாழ்கிறார்கள் என்றும், உலகின் 23 சதவிகித நிலப்பரப்பு ஒளிரும் வானத்தால் பாதிக்கப்படுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும்...


தில்லி சுல்தானகம் என்பது ஓர் இசுலாமியப் பேரரசு ஆகும். இது தில்லியை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டது. இப்பேரரசு 320 ஆண்டுகளுக்கு (1206–1526) நீடித்தது. தெற்கு ஆசியா மீது கோரி அரசமரபின் படையெடுப்பைத் தொடர்ந்து தில்லி சுல்தானகத்தை ஐந்து தொடர்பற்ற, பல்வேறு வகைப்பட்ட அரச மரபுகள் வரிசையாக ஆட்சி செய்தன. நவீனகால இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம், தெற்கு நேபாளத்தின் சில பகுதிகள் உள்ளிட்ட பெரும் அளவிலான நிலப்பரப்பை இது உள்ளடக்கியிருந்தது. மேலும்...