விந்தியப் பிரதேசம்

விந்தியப் பிரதேசம் (Vindhya Pradesh) (1948 - 1956) மத்திய இந்தியாவில் தற்கால மத்தியப் பிரதேச பகுதிகளில், 1948 முதல் 1956 முடிய செயல்பட்ட முன்னாள் மாநிலம் ஆகும். இதன் தலைநகரம் ரேவா ஆகும். இம்மாநிலம் 23,603 சதுர மைல் பரப்பளவு கொண்டிருந்தது.[1] இந்தியப் பிரிவினைக்குப் பின் 4 ஏப்ரல் 1948ல், மத்திய இந்தியாவின் விந்திய மலைத்தொடர் நிலப்பரப்புகளில் ஆட்சி செய்து கொண்டிருந்த 35 சுதேச சமஸ்தானப் பகுதிகளைக் கொண்டு விந்தியப் பிரதேசம் நிறுவப்பட்டது. இதன் தலைநகரம் ரேவா ஆகும். இதன் வடக்கில் உத்தரப் பிரதேசம், தெற்கில் மத்தியப் பிரதேசம் இருந்தது.

விந்தியா
இந்திய மாநிலம்

1948–1956

Coat of arms of விந்தியப் பிரதேசம்

சின்னம்

Location of விந்தியப் பிரதேசம்
Location of விந்தியப் பிரதேசம்
1951 இந்தியாவின் வரைபடத்தில் விந்தியப் பிரதேசம் நடுவில் காட்டப்பட்டுள்ளது.
தலைநகரம் ரேவா
வரலாறு
 •  விந்தியப் பிரதேச மாநிலம் நிறுவுதல் 1948
 •  மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1956
பரப்பு 61,131.5 km2 (23,603 sq mi)
Population
 •  36,00,000 
மக்கள்தொகை அடர்த்தி 58.9 /km2  (152.5 /sq mi)
Pranab Kumar Bhattacharyya (1977). Historical Geography of Madhya Pradesh from Early Records. Delhi: Motilal Banarsidass. பக். 54–5. 
விந்திய பிரதேசத்தின் வரைபடம்

மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956ன் படி, விந்தியப் பிரதேசம், மற்றும் மத்திய பாரதம் மாநிலங்கள் மத்தியப் பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.[2]

ஆட்சி நிர்வாகம் தொகு

விந்திய பிரதேசம் புந்தேல்கண்ட், பகேல்கண்ட் என இரண்டு கோட்டங்களும், 10 மாவட்டங்களுடன் இருந்தது.

கோட்டங்களும் மாவட்டங்களும் தொகு

நவ்கோன் நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட புந்தேல்கண்ட் கோட்டத்தின் 6 மாவட்டங்கள்[1]

  1. டிக்கம்கர் மாவட்டம்
  2. சத்தர்பூர் மாவட்டம்‎
  3. தமோ மாவட்டம்
  4. பன்னா மாவட்டம்
  5. சாகர் மாவட்டம்
  6. ததியா மாவட்டம்
  7. சிந்த்வாரா மாவட்டம்
  8. ஓர்ச்சா மாவட்டம்

ரேவாவை தலைமையிடமாகக் கொண்ட பகேல்கண்ட் கோட்டத்தின் நான்கு மாவட்டங்கள்;[1]

  1. ரேவா மாவட்டம்
  2. சத்னா மாவட்டம்
  3. சித்தி மாவட்டம்
  4. சிங்கரௌலி மாவட்டம்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=விந்தியப்_பிரதேசம்&oldid=3702925" இருந்து மீள்விக்கப்பட்டது