விளந்தை (அரியலூர் மாவட்டம்)

அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

விளந்தை (Vilandhai) இந்தியாவின் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்[1][2]. வடக்கு விளந்தை, தெற்கு விளந்தை என்ற இரண்டு பகுதிகளாக இக்கிராமம் பிரிக்கப்பட்டுள்ளது. நெசவுத் தொழில் இங்கு முக்கியமான வணிகமாகும். சிறீ அகத்தீசுவரர் கோயில்-ஆண்டிமடம்[தொடர்பிழந்த இணைப்பு], கங்கைகொண்ட சோழபுரம், (யுனெசுகோ), சிதம்பரம் நடராசர் கோயில், பிச்சாவரம் மாங்குரோவ் காடு படகுவீடு, சிதம்பரம், விருதாச்சலம் பழமலைநாதர் சிவன் கோயில் போன்றவை அருகிலுள்ள சில முக்கிய இடங்களாகும்.

விளந்தை
Vilandhai
கிராமம்
விளந்தை Vilandhai is located in தமிழ் நாடு
விளந்தை Vilandhai
விளந்தை
Vilandhai
இந்தியா, தமிழ்நாட்டில் அமைவிடம்
விளந்தை Vilandhai is located in இந்தியா
விளந்தை Vilandhai
விளந்தை
Vilandhai
விளந்தை
Vilandhai (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°19′36.22″N 79°23′8.07″E / 11.3267278°N 79.3855750°E / 11.3267278; 79.3855750
நாடு India
Stateதமிழ்நாடு
DistrictAriyalur
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்11,675
மொழிகள்
 • அலுவல்பூர்வமானதுதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அருகிலுள்ள நகரம்ஆண்டிமடம்
பாலின விகிதம்1.009 /

மக்கள் தொகை தொகு

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தெற்கு விளந்தையின் மொத்த மக்கள் தொகை 9663 ஆகும். இதில் 4855 ஆண்களும், 4808 பெண்களும் இருந்தனர். வடக்கு விளந்தையின் மொத்த மக்கள் தொகை 2012 ஆகும். இதில் 1009 ஆண்களும், 1003 பெண்களும் இருந்தனர்.

பெயர்க்காரணம் தொகு

வில்வ மரங்கள் அடர்ந்து காணப்பட்ட காரணத்தால் ஊரின் பெயர் விளந்தை என்று அழைக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "ஆண்டிமடம் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.


 
அகதீசுவரர் ஆலயம், ஆண்டிமடம்-621801