விவியன் நமசிவாயம்

விவியன் நமசிவாயம் (மார்ச் 1, 1921 - ஜனவரி 30, 1998) இலங்கை வானொலியில் புகழ் பெற்ற ஒலிபரப்பாளராக இருந்தவர். நாளிதழ்களில் பல அறிவியல் தொடர் கட்டுரைகளை எழுதி வந்தவர்.

விவியன் நமசிவாயம்

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

யாழ்ப்பாணம் காரைநகர், வலந்தலை என்ற ஊரைச் சேர்ந்தவர். திருநெல்வேலி காவிய பாடசாலையில் கல்வி கற்றுப் பின்னர் ஆசிரியப் பயிற்சி பெற்றார்.

ஊடகத் துறையில் ஆர்வம் கொண்டவாராய் ஈழகேசரி நாளிதழில் துணை ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் கொழும்பு வந்து சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியப் பிரிவில் சேர்ந்தார். இந்தியாவில் மும்பாய், நாக்பூர் ஆகிய இடங்களில் ஆசிரியராகப் பணி புரிந்தார். அதன் பின்னர் நாடு திரும்பி நுவரேலியாவில் உள்ள புனித திரித்துவக் கல்லூரியின் ஆசிரியராக இணைந்தார்.

வானொலியில் இணைவு தொகு

இளவயதில் இருந்தே தொடர்புத் துறையில் இருந்த நாட்டம் குறையாததால், 1951 ஆம் ஆண்டில் இலங்கை வானொலியில் உதவி எழுதுநராக சேவையில் அமர்ந்தார். அதன் பின்னர் நிகழ்ச்சி உதவியாளராகவும், நிகழ்ச்சி அமைப்பாளராகவும் பதவி வகித்தார். ஒலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அக்காலத்தில் பிரபலமாக இருந்த விவேகச் சக்கரம், விண்வேளி விநோதம், விவசாய நேயர் விருப்பம் போன்ற நிகழ்ச்சிகளை இவர் அறிமுகப்படுத்தினார்.

1977 பெப்ரவரியில் ஓய்வு பெற்றாலும் "இளஞ்சுடர்" என்ற வாராந்தர நிகழ்ச்சியை 1990 வரை நடத்தி வந்தார். நாளிதழ்களில் அறிவியல் தொடர் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்தார். விவியன் நமசிவாயம் 1998 ஜனவரி 30ந் திகதி காலமானார்.

உசாத்துணை தொகு

  • வானொலி மஞ்சரி, பெப்ரவரி 1999, கொழும்பு, இலங்கை
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவியன்_நமசிவாயம்&oldid=843667" இலிருந்து மீள்விக்கப்பட்டது