அசாம் மாகாணம்

பிரித்தானிய இந்திய மாகாணம்

அசாம் மாகாணம் (Assam Province) பிரித்தானிய இந்தியாவின் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்தை 1912-இல் பிரித்ததன் மூலம் அசாம் மாகாணம் நிறுவப்பட்டது. இம்மாகாணத்தில் தலைநகரம் சில்லாங் ஆகும். முதன்முதலில் 1874-இல் வங்காள மாகாணத்திலிருந்து, அசாம் பகுதிகளை, பிரித்து வடகிழக்கு எல்லைப்புற முகமை பிரதேசம் நிறுவப்பட்டது. பின்னர் 1905-இல் வங்காளப் பிரிவினையின் போது, இம்முகமையை கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1912-இல் மீண்டும் அசாம் மாகாணம் நிறுவப்பட்டது.

அசாம் மாகாணம் (1912 - 1947)
வடகிழக்கு எல்லைப்புற முகமை (1874 - 1905)
மாகாணம் பிரித்தானிய இந்தியா

21 மார்ச் 1912–15 ஆகஸ்டு 1947
 

Flag of அசாம்

கொடி

Location of அசாம்
Location of அசாம்
1936-இல் அசாம் மாகாணம் (சிவப்பு) மற்றும் அதன் கீழிருந்த மணிப்பூர் இராச்சியம் (பச்சை) மற்றும் காசி இராச்சியம் (மஞ்சள்)
வரலாறு
 •  கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணப் பிரிவினை 21 மார்ச் 1912
 •  இந்திய விடுதலை 15 ஆகஸ்டு 1947
பரப்பு 2,40,118 km2 (92,710 sq mi)

வரலாறு தொகு

1824 - 1826-இல் நடைபெற்ற முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரின் முடிவில், பிரித்தானிய இந்தியப் படைகள், பர்மிய இராச்சியம் கைப்பற்றிருந்த வடகிழக்கு இந்தியப் பகுதிகளை கைப்பற்றி பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்தனர்.[1] 1826 முதல் 1832 முடிய அசாம் பகுதிகள் வங்காள மாகாணத்துடன் இருந்தது. மேல் அசாம் பகுதிகளை சுதேசி சமஸ்தான மன்னர்கள் ஆண்டனர். ஆனால் கீழ் அசாம் பகுதிகளை பிரித்தானியர்கள் ஆண்டனர். 16 அக்டோபர் 1905-இல் அசாம் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்தின் கீழ் சென்றது. 1 ஏப்ரல் 1912-இல் மீண்டும் கிழக்கு மற்றும் மேற்கு வங்காளப் பகுதிகளை ஒன்றிணைத்து வங்காள மாகாணம் மீண்டும் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, பிகார் மற்றும் ஒரிசா மாகாணம் மற்றும் அசாம் மாகாணம் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, 1944-ஆம் ஆண்டு மார்ச்-சூலையில் பர்மாவைக் கைப்பற்றிய ஜப்பானியப் படைகள் அசாம் மாகாணம் மற்றும் மணிப்பூர் இராச்சியத்தின் கிழக்குப் பகுதிகளைக் கைப்பற்றினர். இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான் தோல்வியுற்றதைத் தொடர்ந்து, ஜப்பான் கைப்பற்றிய பிரித்தானிய இந்தியப் பகுதிகள் மீண்டும் அசாம் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1947-இல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் அசாம் மாகாணம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[2] 1972-இல் அசாம் மாகாணத்தை ஏழு மாநிலங்களாகப் பிரித்தனர்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Aitchison, C. U. ed (1931), The Treaty of Yandaboo, (A Collection of Treaties, Engagements and Sanads: Relating to India and Neighbouring Countries. Vol. XII.), Calcutta: Projectsouthasia.sdstate.edu, pp. 230–233, archived from the original on 2 December 2008 {{citation}}: |first= has generic name (help)
  2. Provinces of British India

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாம்_மாகாணம்&oldid=3387387" இலிருந்து மீள்விக்கப்பட்டது