அந்துவன் கரூவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சேர அரசன். இவரே பதிற்றுப்பத்து 7-ஆம் பத்தின் பாட்டுடைத் தலைவனான செல்வக்கடுங்கோ வாழியாதனின்[1] தந்தை அந்துவன் பொறையன். இவர் மனைவி 'பொறையன் பெருந்தேவி'. இவள் 'ஒருதந்தை' என்பவனின் மகள்.[2]

பதிற்றுப்பத்து பதிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தக் குறிப்புகளை ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது அந்துவன் என்பவனும், அந்துவன் சேரல் இரும்பொறை என்பவனும் ஒருவனே என்று தெளிவாகிறது.

இவனது செவிலித்தாய் அந்துவன் செள்ளை. மையூர் கிழானின் மகளாகிய இவள்[3] குட்டுவன் இரும்பொறையை மணந்து பெற்ற மகனே பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்தின் தலைவனான இளஞ்சேரல் இரும்பொறை[4].

"மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த நெடுநுண் கேள்வி அந்துவன்" எனப் பதிகத்தில் வரும் குறிப்பால் இவன் அரசன் என்பதும், நன்கு கற்றவன் என்பதும் தெளிவாகிறது.

ஒப்பிட்டுக்கொள்க தொகு

  1. 'நும்நுகம் கொண்டினும் வென்றோய் அதனால் செல்வக் கோவே சேரலர் மருக' - பதிற்றுப்பத்து - ஏழாம் பத்து பாடல் எண் 63, வரி 15-16
  2. 'மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த நெடுநுண் கேள்வி அந்துவற்(கு) ஒருதந்தை ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி ஈன்றமகன்' - பதிற்றுப்பத்து ஏழாம் பத்து - பதிகம் (கபிலர்)
  3. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 பக்கம் 102. http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=294&pno=102
  4. 'குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன் வேண்மாள் அந்துவஞ் செள்ளை ஈன்றமகன்' பதிற்றுப்பத்து - ஒப்பதாம் பத்து, பதிகம் - பெருங்குன்றூர்கிழார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்துவன்&oldid=3849541" இலிருந்து மீள்விக்கப்பட்டது