ஆரணி அரிசி
இந்தக் கட்டுரையின் தலைப்பு கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். (அக்டோபர் 2020 நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள், எவரும் இதன் குறிப்பிடத்தகுநிலையினை நிறுவாத நிலையில், இக்கட்டுரைப் பக்கம் அழிக்கப்படும்) |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆரணி அரிசி (Arni Rice) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்த்த ஆரணியில் தயாரிக்கப்படும் தரமான அரிசி ஆகும். இந்நகரில் நூற்றுக்கணக்கான ஆலைகள் உள்ளன. மேலும் இந்நகரில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மற்றும் அண்டை நாடுகளுக்கும் இவ்வரிசி விற்பனைக்கு செல்கிறது. இவை தவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நெல் வகைகள் இங்கிருக்கும் அரிசி ஆலைகளில் அரைக்கப்படுகிறது.
ஆரணி அரிசி | |
---|---|
![]() ஆரணி அரிசி | |
குறிப்பு | அரிசி பொன்னி அரிசிவகைகள் |
வகை | கைத்தொழில் |
இடம் | ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு |
நாடு | இந்தியா |
பதிவுசெய்யப்பட்டது | மே 02, 2008 |
பொருள் | அரிசி |
ஆரணி பகுதியில் விளையும் நெல்லுக்கு நீராதாரமாக விளங்குவது செய்யாறு ஆறும், கமண்டல நாகநதி ஆறும் ஆகும். இவ்விருநதிகளும் ஜவ்வாது மலையில் உற்பத்தி ஆகி ஆரணி அருகே செல்கிறது. இந்த ஆற்றுப்படுகையில் விளைவிக்கப்படும் நெல்லுக்கு கிடைக்கும் நீர் ஜவ்வாது மலையிலுள்ள காடுகளிலும், கனிமவளங்களிலிருந்தும் நுண் ஊட்டச் சத்துகள் கொண்டு வருவதும் ஒரு காரணமாக குறிப்பிடப்படுகிறது. இந்தப் பகுதியில் கிடைக்கும் நன்னீரில் அரிசி வேகவைக்கப்படுவதால் தமிழகத்தில் எங்கிருந்து நெல்லைப் பெற்றாலும் சுவை கூடி விடுகிறது என்பது தான் ஆரணி அரிசியின் சிறப்பாகும்.[சான்று தேவை] எனவேதான் சென்னை போன்ற பெருநகரங்களில் எங்கு கிடைக்கும் ஆரணி அரிசி என்று விளம்பரப்படுத்துகின்றன.[சான்று தேவை]
தற்போது தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டம் தான் முன்னனியில் உள்ளது. அரிசி உற்பத்தியில் முன்னணி பெற்றதால் ஆரணி அரிசிக்கு ஜிம் விருதும் மற்றும் தேசிய அளவில் தேசிய விருதும் 2018 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்பட்டது.[சான்று தேவை]