இடைகால் (IDAIKAL) தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[3][4] இந்த ஊர் மதுரை-தென்காசி நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த ஊரிலிருந்து வடக்கே 5 கிலோமீட்டர் தூரத்தில் கடையநல்லூரும், தெற்கே 8 கிலோமீட்டர் தூரத்தில் தென்காசியும் உள்ளது.

இடைகால்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் கடையநல்லூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன், இ. ஆ. ப
சட்டமன்றத் தொகுதி கடையநல்லூர்
சட்டமன்ற உறுப்பினர்

சி. கிருஷ்ணமுரளி (அதிமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இவ்வூரில் மீனாட்சி சுந்தரம் ஞாபகார்த்த மேல்நிலைப் பள்ளி என்ற பள்ளிக்கூடம் மிக முக்கிய கல்வி நிறுவனம் ஆகும். முப்பிடாதி அம்மன் கோவிலில் சித்திரை மாத திருவிழா பிரசித்தி பெற்றது. இவ்வூரில் தேவர், சேனைத்தலைவர், இடையர், விஸ்வகர்மா, படையாச்சி உள்ளிட்ட பல்வேறு சமுகத்தினரும், இந்து, முஸ்லீம், கிறித்துவ மதத்தை சார்ந்தவரும் வாழ்கின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-03-24.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. பார்க்கப்பட்ட நாள் 2015-03-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைகால்&oldid=3872272" இலிருந்து மீள்விக்கப்பட்டது