இடையன் இடைச்சி கதை

இடையன் இடைச்சி கதை என்பது,ஆடு மேய்க்கும் இடையர் சாதியினர் செய்யும் தொழில் தொடர்பான செய்திகளை ஆணும், பெண்ணுமாக இருவர் நடித்துக் காட்டுவதே இடையன் இடைச்சி கதை நிகழ்ச்சியாகும்.[1]இருவர் மட்டுமே நடிக்கும் இக்கலையில் கரகாட்டக் கோமாளிக்கும், பெண் வேடமிட்ட ஆணுக்கும் இடையில் கதை நகைச்சுவையில் தொடங்கி, பின்னர் மோதலாகி, அதுவே இறுதியில் காதலாவதாகவும் நடந்து முடியும். இந்நிகழ்ச்சியானது, தற்போது வழக்கத்தில் இல்லை. கரகாட்டத்தின் துணை ஆட்டமாக திகழ்ந்தது.இக்கலை மதுரை மாவட்டப் பகுதியில் மட்டுமே நிகழ்த்தப்பட்டது.

வெளி இணைப்புகள் தொகு

  1. "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடையன்_இடைச்சி_கதை&oldid=3543458" இலிருந்து மீள்விக்கப்பட்டது