இந்திய மெய்யியல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
|
இந்தியாவின் நீண்ட கால வரலாற்றில், அது பல்வேறுபட்ட தத்துவஞான மரபுகளுக்கு நிலைக்களனாகத் திகழ்ந்துள்ளது. இந்திய தத்துவஞானம் அதன் வேறுபட்ட பிரிவுகள், வேதம் தொடர்பாகக் கொண்டுள்ள நிலைப்பாடுகளின் அடிப்படையில் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம். அவை,
- வேதத்தை ஏற்கும் பிரிவுகள்
- வேத மறுப்புப் பிரிவுகள்
என்பனவாகும். முதல் வகைப்பிரிவுகள் ஆத்திகப் பிரிவுகள் என்றும், மற்றவை நாத்திகப் பிரிவுகள் என்றும் அழைக்கப்படுவதுண்டு. வேதத்தை ஏற்கும் தத்துவப் பிரிவுகளில் ஆறு வகையான பிரிவுகள் முக்கியமானவை இவை,
வேதத்தை ஏற்கும் பிரிவுகள்தொகு
பிரம்ம சூத்திரத்தை அடிப்படையாக கொண்ட பிரிவுகள்தொகு
பிரம்ம சூத்திரத்துக்கு எழுதப்பட்ட வெவ்வேறு விரிவுரைகளை அடிப்படையாகக் கொண்டவை:
வேத மறுப்பு பிரிவுகள்தொகு
வேதத்தை மற்றும் இறைவனை ஏற்காத பிரிவுகள்
என்பன வேதங்களை மறுக்கும் தத்துவங்களாகும்.
பௌத்தப் பிரிவுகள்தொகு
பௌத்தம் நான்கு உட்பிரிவுகளைக் கொண்டது.
வைபாசிகம்தொகு
உலகமாகிய பொருள், உலகின் இருப்பைப் பற்றிய அறிவு இரண்டும் உண்மை. இதில் உலகின் இருப்பைப் பற்றிய அறிவை நாம் நேரடியாக (பிரத்யட்சம்) அறிகிறோம்.
சௌத்திராந்திகம்தொகு
உலகமாகிய பொருள், உலகின் இருப்பைப் பற்றிய அறிவு இரண்டும் உண்மை. இதில் உலகின் இருப்பைப் பற்றிய அறிவை நாம் ஊகித்து (அனுமானம்) அறியலாம்.
யோகாசாரம்தொகு
உலகமாகிய பொருள் உண்மையில் கிடையாது. ஆனால் உலகின் இருப்பைப் பற்றிய அறிவு உண்மை.
மாத்திமியகம்தொகு
உலகமாகிய பொருள், உலகின் இருப்பைப் பற்றிய அறிவு இரண்டும் பொய்.