இந்தியாவில் உள்ள பௌத்தக் குடைவரைகள்

இந்தியக் குடைவரைக் கட்டிடக்கலையில் பௌத்தக் குடைவரைகள் முக்கியமானவை. உலகளவிலும் இக்குடைவரைகள் இவற்றின் சிறப்பான கட்டிடக்கலைக்காக அறியப்படுகின்றன. இந்தியாவில் ஏறத்தாழ 1,500 குடைவரைக் கோவில்கள் உள்ளன. இவற்றில் 1000 குடைவரைகள் பௌத்தர்களாலும், 300 இந்துக்களாலும் 200 சமணர்களாலும் உருவாக்கப்பட்டவை.

இந்தியாவில் உள்ள பௌத்தக் குடைவரைகள்
செய்பொருள்பாறை
உருவாக்கம்கிமு 3ஆம் நூற்றாண்டு~
தற்போதைய இடம்இந்தியா

இந்தியாவில் உள்ள குடைவரைக் கோவில்களுள் பழமையானது பொது ஊழிக்கு 3 நூற்றாண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட பீகாரின் பராபர் குகைகள் ஆகும். இது பேரரசர் அசோகராலும், அவரது பேரனாலும் கட்டப்பட்டது. இதைத் தவிர அதிகமான பௌத்தக் குகைகள் இந்தியாவின் மேற்குப் பகுதியில் தக்காண மேட்டுநிலத்தைச் சுற்றியுள்ளன. கர்லா குகைகள், பாஜா குகைகள், பேட்சே குகைகள் போன்ற முற்காலத்தில் கட்டப்பட்ட கோவில்களுக்குச் சான்றாக விளங்குகின்றன. எல்லோரா மற்றும் அஜந்தா குடைவரைகள் பிற்காலத்தில் கட்டப்பட்டது. நுட்பமான வேலைப்பாடுகளைக் கொண்டது.[1]

தொடக்ககாலத்தில் இயற்கையாக அமைந்த குடைவரைகளில் தூபிகள் கட்டப்பட்டன. பிற்காலத்தில் செயற்கையாக மலைகளைக் குடைந்து கோவில்கள் கட்டப்பட்டன.

மேற்கோள்கள் தொகு