இலங்கை மீயுயர் நீதிமன்றம்

(இலங்கை உச்சநீதிமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலங்கை மீயுயர் நீதிமன்றம் (Supreme Court of Sri Lanka) என்பது இலங்கையின் உச்ச நீதிமன்றம் ஆகும். இலங்கையின் அரசியலமைப்பு விவகாரங்களுக்கு இந்த நீதிமன்றமே இறுதி மேன்முறையீட்டு அதிகாரவரம்பைக் கொண்டுள்ளது.

இலங்கை மீயுயர் நீதிமன்றம்
Supreme Court of Sri Lanka
நீதிமன்ற வளாகம்
நிறுவப்பட்டது1801
அமைவிடம்புதுக்கடை, கொழும்பு
குறிக்கோளுரை"பொது மக்களின் நம்பிக்கைக்கும் பற்றுறுதிக்கும் ஊக்கமூட்டல்"
"Inspire public trust and confidence"
நியமன முறைஅரசியலமைப்புப் பேரவையின் ஒப்புதலின் பிரகாரம் இலங்கை சனாதிபதியினால் நியமனம்
அதிகாரமளிப்புஇலங்கையின் அரசியலமைப்பு
நீதியரசர் பதவிக்காலம்அகவை 65 வரை
இருக்கைகள் எண்ணிக்கைபிரதம நீதியரசர் உட்பட 6 - 10
வலைத்தளம்இலங்கையின் மீயுயர் நீதிமன்றம்
இலங்கையின் பிரதம நீதியரசர்
தற்போதையகனகசபாபதி சிறீபவன்
பதவியில்30 சனவரி 2015

வரலாறு தொகு

இலங்கை மீயுயர் நீதிமன்றம் 1801 ஏப்ரல் 18 ஆம் நாள் பிரித்தானியரால் "மூன்றாம் ஜோர்ஜ் மன்னரின் அரச கட்டளை 1801" இற்கிணங்க நிறுவப்பட்டது.[1][2]

அமைப்பு தொகு

மீயுயர் நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர், மற்றும் ஆறு முதல் 10 வரையிலான நீதியரசர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் இலங்கை சனாதிபதியின் (அரசுத்தலைவர்) பரிந்துரையின் பேரில் அரசியலமைப்புப் பேரவையின் ஒப்புதலின் பிரகாரம் இலங்கை சனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Chapter X". Transition To British Administration 1796-1805. Lakdiva Books. பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2011.
  2. இலங்கை மீயுயர் நீதிமன்றம்

வெளி இணைப்புகள் தொகு