எச். முஜீப் ரஹ்மான்

தமிழ் எழுத்தாளர்

எச்.முஜீப் ரஹ்மான் (செப்டம்பர் 28,1971) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவர் கதை, நாவல், விமர்சனம், ஆய்வு, குறும்படம், சூபித்துவம் போன்ற பல தளங்களில் இயங்கிவருகிறார்.

எச்.முஜீப் ரஹ்மான்
எச். முஜீப் ரஹ்மான்
பிறப்புஎச்.முஜீப் ரஹ்மான்
(1971-09-28)செப்டம்பர் 28, 1971
தக்கலை, தமிழ்நாடு, இந்தியா
புனைபெயர்நட்சத்திரவாசி
தொழில்பேராசிரியர், எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
துணைவர்மிசிரியா
பிள்ளைகள்ஆதில்,ஆதிரா
இணையதளம்
http://www.mujeebu.in

வாழ்க்கை தொகு

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மனாப்புரத்தில் குடியேறி வாழ்ந்த வித்வான் ஹசன் சாஹிப், கதிஜா பீவி இணையர் இவரது பெற்றோராவர். இவருடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள் ஆவர். கோட்டைக்ககம் வடக்கு தெருவில் வலியவீட்டில் 25 வயது வரைவாழ்ந்து பின்னர் தக்கலைக்கு இவரது குடும்பம் குடிபெயர்ந்தது. பள்ளிப்படிப்பை கல்குளத்திலும் பின்னர் தக்கலையிலும் முடித்து பின்னர் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் காலேஜில் இளநிலை, முதுநிலை பட்டங்களை பெற்றார். பின்னர் குஜராத்திலும், பம்பாயிலும் சிலவருடங்கள் பணிபுரிந்து பின்னர் சவூதியிலும் பின்னர் அபுதாபியிலும் பதிநான்கு வருடங்கள் பணிபுரிந்து விட்டு 2008 காலகட்டத்தில் நேசணல் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவருக்கு மிசிரியா என்ற மனைவியும் ஆதில், ஆதிரா என்ற குழந்தைகளும் உள்ளனர்.

படைப்புப் பணிகள் தொகு

இவர் 1990களில் இருந்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் இணைந்து செயல்பட்டுவருகிறார். இவரது முதல்கதை காலச்சுவடு இதழும் கதா அமைப்பும் இணைந்து நடத்திய போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டது. புதியகாற்று, தாமரை, செம்மலர், உயிர்மை, உயிர் எழுத்து, தீராநதி போன்ற பல இலக்கிய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். சுந்தர ராமசாமி, பொன்னீலன், தோப்பில் முகமது மீரான் , ஹெச்.ஜி.ரசூல், ஜெயமோகன் போன்ற எழுத்தாளார்களின் ஊக்கத்தின் பேரில் இவர் கதை எழுத துவங்கினார். இவரது முதல் சிறுகதை தொகுப்பு தேவதைகளின் சொந்தக்குழந்தை புதுப்புனல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எம்.ஜி.சுரேஷ் இந்த தொகுப்பை பின்நவீனகதைகள் என்றே குறிப்பிட்டார். 2005க்கு பின்னர் 2007இல் இவரது முதல் புதினமான தேவதூதர்களின் கவிதைகள் வெளிவந்தது. தமிழின் முதல் பின்னை நாவல் இது என கருதப்படுகிறது. அதன் பின்னர் 2014 ல் புதுஎழுத்து பதிப்பகத்தால் மகாகிரந்தம் புதினம் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 2015ல் ஒரு சூபியின் சுயசரிதை என்ற சிறுகதை தொகுப்பு வெளியானது. 2016ல் நான் ஏன் வஹாபி அல்ல?[1] என்ற ஆய்வு நூல் 800 பக்கங்களில் கீற்று வெளியீட்டகத்தால் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது. பின் நவீனத்துவம், மார்க்சியம், பின்காலனியம், நாட்டாரியல் போன்ற கோட்பாடுகளில் தேர்ச்சியுடைய இவர் பல்வேறு கருத்தரங்குகளில் உரையாற்றியுள்ளார். மேலும் விஷயம் என்ற குறும்படத்தை வெளியிட்டுள்ளார். ஏலாதி, கரிசிலாங்கண்ணி உள்ளிட்ட சிற்றிதழ்களில் ஆசிரியராக இருந்துள்ளார். தற்போது திணை என்ற காலாண்டிதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிவருகிறார். கறுத்தவாவு என்ற இலக்கிய கூடுகை நிகழ்வை சில வருடங்கள் நடத்தினார். ஏலாதி இலக்கிய விருது படைப்பிலக்கியத்துக்காக அளிக்கப்பட்டது. அதில் அறக்கட்டளை உறுப்பினராக இருந்து வருகிறார். ஏலாதி சிந்தனை பள்ளியின் ஸ்தாபகராகவும் சூஃபி பள்ளியின் நிர்வாக இயக்குநராகவும் இருக்கிறார்.

சூபியிசம், இஸ்லாமிய ஆய்வுகள் தொகு

இலங்கையில் காத்தான்குடியில் விசேட பிரதிநிதியாக சூபிச மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். தக்கலை பீர் முகம்மது அப்பா ஆண்டுவிழா மேடையில் இவர் உரைநிகழ்த்தியுள்ளார். ஞானப்புகழ்ச்சிக்கு உரை எழுதி வருகிறார். இலங்கை, தமிழ்நாட்டு பல்கலைகழகங்களில் சூபியிசம் குறித்து இவர் சொற்பொழிவு ஆற்றி வருகிறார். இஸ்லாமிய மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் இவரது பேச்சுகள் முக்கிய இடம் வகிக்கிறது. நூற்றுக்கும் அதிகமான இஸ்லாமிய, சூபியிச கட்டுரைகளை எழுதியுள்ளார். வஹ்தத்துல் உஜூத் என்ற சூபியிச கொள்கையும் கலிமா குறித்தும் அதிகம் பேசுகிறார்.இவரது உரைகள் பல யூடூபில் காணக்கிடக்கிறது.

எழுதிய நூல்கள்[2] தொகு

  • தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதைத் தொகுப்பு)
  • தேவதூதர்களின் கவிதைகள் (புதினம்)
  • மகாகிரந்தம் (புதினம்)
  • நான் ஏன் வஹாபி அல்ல? (ஆய்வு நூல்)
  • மறுவாசிப்பு,மறுசிந்தனை,மறுவிளக்கம்[3] (கட்டுரை)
  • தியரி (ஆய்வு நூல்)
  • ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை
  • மற்றமைகளை பேசுவது[4] (கட்டுரை)
  • வெறுமொரு சலனம் ( கவிதை)
  • பின் நவீன கவிதைகள்
  • ஜலாலுதீன் ரூமி கவிதைகள்
  • ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)
  • நவீன தமிழ் அகராதி
  • ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )
  • பின்னை தலித்தியம் ( ஆய்வு)
  • பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)
  • எதிர் வஹாபியம்[5] (ஆய்வு)
  • பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)
  • பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)
  • சூபி நூற்களில் சூபித்துவம்[6] (மதிப்புரை)
  • சூபி பேரகராதி
  • ஹமவோஸ்த் (ஆன்மீகம்)
  • தீர்க்கதரிசி[7] (புதினம்) 2017
  • நாட்டார் இசுலாம்[8] (ஆய்வு)
  • உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)

அங்கீகாரங்கள் தொகு

  • தேவதைகளின் சொந்தக்குழந்தை[9] சிறுகதைத் தொகுதியானது தமிழ்நாடுகலை இலக்கிய பெருமன்றத்தால் சிறந்த சிறுகதையாக தேர்வு செய்யப்பட்டது.
  • மதுரை புதியகாற்று இவரது சிறுகதைக்கு விருது வழங்கியது.
  • மகாகிரந்தம் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதை பெற்றுள்ளார்.
  • இவரது படைப்பு திருவனந்தபுரம் பல்கலைகழகத்தில் முனைவர் பட்ட ஆய்வேட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இலங்கையில் இவரது படைப்புகளுக்காக கவுரவ விழா எடுக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/32191-2017-01-11-06-44-47
  2. ஜெயமோகன். "முஜிபுர் ரஹ்மான் நூல்கள்". கட்டுரை. jeyamohan.in. பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2018.
  3. "மறுவாசிப்பு,மறுசிந்தனை,மறுவிளக்கம்". books.google.co. பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2018.
  4. "மற்றமைகளை பேசுவது". books.google.co. பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2018.
  5. "எதிர் வஹாபியம்". books.google.co. பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2018.
  6. "சூபி நூற்களில் சூபித்துவம்". கூகுல். பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2018.
  7. "தீர்க்கதரிசி". books.google.co. பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2018.
  8. "நாட்டார் இசுலாம்". books.google.co. பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2018.
  9. http://old.thinnai.com/?p=60604146

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._முஜீப்_ரஹ்மான்&oldid=3204465" இலிருந்து மீள்விக்கப்பட்டது