ஒடிசா நாள் (ஒடியா மொழி:ଓଡ଼ିଶା ଦିବସ) என்பது ஒடிசா மாநிலத்தின் உருவாக்கத்தை நினைவுகூரும் நாள் ஆகும். இதை உத்கல திபசா என்றும் ஒடியா திபசா என்றும் அழைப்பர். இது ஆண்டுதோறும் ஏப்ரல் முதலாம் நாளில் கொண்டாடப்படுகிறது.[1] [2]

1568ஆம் ஆண்டு முகுந்த தேவ் மன்னரின் வீழ்ச்சிக்கு பிறகு பல பகுதிகளாக சிதறிக் கிடந்த ஒடிசா மாநிலத்தை மொழியை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைக்க வேண்டும் என பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக அன்றைய ஆங்கிலேய அரசு 1936ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று ஒடிசாவை தனி மாநிலமாக அறிவித்தது.

புதிதாக உருவாக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் கட்டக், புரி, பாலேஸ்வர், சம்பல்பூர், கோராபுட், கஞ்சாம் ஆகிய மாவட்டங்கள் இருந்தன. ஜான் ஆஸ்டின் ஹப்பக் என்பவர் ஒடிசாவின் முதல் ஆளுநர் ஆனார்.[3][4] இன்றையா ஒடிசாவில் 30 மாவட்டங்கள் உள்ளன.

சான்றுகள் தொகு

  1. "Utkal Dibasa also called Odisha day is being celebrated on ஏப்ரல் 1st today". infocera.com. 2012. பார்க்கப்பட்ட நாள் 3 July 2012. The Odisha province was formed on the basis of linguistic pattern of people in the area on ஏப்ரல் 1, 1936[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Poor water management has made Odisha victim of drought and floods". The Hindu. Archived from the original on 2009-04-09. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2006. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |= ignored (help)
  3. Formation of Orissa as a Separate Province by Pareswar Sahoo[தொடர்பிழந்த இணைப்பு]. Orissareview. ஏப்ரல் 2006
  4. Orissa's new name is Odisha பரணிடப்பட்டது 2012-11-05 at the வந்தவழி இயந்திரம்தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒடிசா_நாள்&oldid=3928372" இலிருந்து மீள்விக்கப்பட்டது