ஒடிசா அரசு

இது இந்திய நாட்டில் உள்ள ஓர் மாநில அரசு ஆகும்
(ஒரிசா அரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒடிசா அரசு என்பது ஒடிசா மாநிலத்தை ஆளும் அமைப்பாகும். இது அமைச்சரவை, நீதித்துறை, சட்ட ஆக்கத் துறை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒடிசா மாநிலத்தின் தலைவராக ஆளுநர் இருப்பார். இவர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுவார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, தங்களுக்குள் ஒருவரை மாநிலத்தின் முதல்வராக தேர்ந்தெடுப்பர். அவருக்கு கூடுதல் அதிகாரம் இருக்கும். ஒடிசா அரசின் தலைமையகமும், சட்டமன்றமும் புவனேசுவரில் உள்ளன. ஒரிசா உயர் நீதிமன்றம் கட்டாக்கில் உள்ளது.[1]

ஒடிசா அரசு
தலைமையிடம்புவனேசுவரம்
செயற்குழு
ஆளுநர்கணேசி லால்
முதலமைச்சர்நவீன் பட்நாய்க், (பிஜத)
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
சபாநாயகர்பிகராம் கேசரி அருகா, (பிஜத)
உறுப்பினர்கள்147
நீதித்துறை
உயர் நீதிமன்றம்ஒரிசா உயர் நீதிமன்றம், கட்டாக்
தலைமை நீதிபதிஎஸ். முரளிதர்

ஒடிசா சட்டமன்றத்துக்காக மாநிலத்தை 147 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அந்த தொகுதியை முன்னிறுத்துவார். இவர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆவார். இவருக்கு ஐந்தாண்டுக் காலம் பதவில் இருக்கும்.[2]

துறைகள் தொகு

தகவல் தொடர்புத் துறை தொகு

ஒடிசா அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்வதற்காக, ஒடிசா ரிவியூ என்ற ஆங்கில இதழும், உத்கள் பிரசங்கா என்ற ஒரிய மொழி இதழும் வெளியிடப்படுகின்றன.[3]

மேலும் பார்க்க தொகு

சான்றுகள் தொகு

  1. "Jurisdiction and Seats of Indian High Courts". Eastern Book Company. பார்க்கப்பட்ட நாள் 2008-05-12.
  2. "Orissa Legislative Assembly". Legislative Bodies in India. National Informatics Centre, Government of India. பார்க்கப்பட்ட நாள் 2008-05-12.
  3. ஒடிய அரசின் தகவல் தொடர்புத் துறை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒடிசா_அரசு&oldid=3786624" இலிருந்து மீள்விக்கப்பட்டது