கருப்பு உப்பு

சூளையில் எரிக்கப்பட்ட பாறை உப்பு

கருப்பு உப்பு (Black salt) என்பது தெற்காசியாவில் பயன்படுத்தப்படும் காரமான, கடுமையான கந்தக நெடியுடன் கூடிய சூளையில் எரிக்கப்பட்ட பாறை உப்பு ஆகும். இது "இமயமலை கருப்பு உப்பு", சுலேமானி உப்பு, பிட் லோபன், காலா நமக், கலாநூன் அல்லது படாலூன் என்றும் அழைக்கப்படுகிறது. இமயமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெட்டப்பட்ட சுரங்கங்களில் கிடைக்கும் பாறை உப்புகளிலிருந்து கருப்பு உப்பு தயாரிக்கப்படுகிறது.

கருப்பு உப்பு
கருப்பு உப்பின் பெரிய துண்டுகள்
மாற்றுப் பெயர்கள்கருப்பு உப்பு
பகுதிதெற்காசியாவின் இமயமலைப் பகுதி
தூளாக்கப்பட்ட கருப்பு உப்பு
கருப்பு உப்பு

இந்த உப்பின் சுவை பெரும்பாலும் சோடியம் குளோரைடுகளால் ஆனது, மேலும் இதிலுள்ள பல கூறுகள்இந்த உப்புக்கு அதன் நிறத்தையும் வாசனையையும் தருகின்றன. இதன் காரமான நெடியுடைய வாசனைக்கு, முக்கியமாக அதன் கந்தக உள்ளடக்கம் காரணமாகும். இந்தக் கனிமத்தில் கிரேகைட் (Fe 3 S 4, இரும்பு (II, III) சல்பைடு ) இருப்பதால், இது பழுப்பு நிற இளஞ்சிவப்பு முதல் இருண்ட ஊதாநிற, ஒளி ஊடுருவக்கூடிய படிகங்களை முழுவதுமாக உருவாக்குகிறது. தூளாக அரைக்கப்ட்ட அதன் நிறம் ஊதா முதல் இளஞ்சிவப்பு வரை இருக்கும்.

இந்த சுவையூட்டி பெரும்பாலும் சோடியம் குளோரைடால் ஆனது. மேலும் பல கூறுகள் உப்புக்கு அதன் நிறத்தையும் வாசனையையும் தருகின்றன. வாசனை முக்கியமாக அதன் கந்தக உள்ளடக்கம் காரணமாகும். கனிமத்தில் (Fe3S4 இரும்பு (II, III) சல்பைட்) ஆகியன இருப்பதால், இது பழுப்பு நிற இளஞ்சிவப்பு முதல் இருண்ட வயலட் ஒளி ஊடுருவக்கூடிய படிகங்களை முழுவதுமாக உருவாக்குகிறது. இதை தூளாக மாற்றும் போது அதன் நிறம் ஊதா முதல் இளஞ்சிவப்பாக மாறும்.

கருப்பு உப்புஆயுர்வேதத்தில் உயர்வாக மதிக்கப்படுகிறது. அதன் உணரப்பட்ட மருத்துவ குணங்களால் ஆயுர்வேத சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.[1][2]

தயாரிப்பு தொகு

கருப்பு உப்பை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருள் முதலில் இந்தியா, நேபாளம், பாக்கித்தான் மற்றும் வங்காளதேசம் போன்ற நாடுகளில் உள்ள சுரங்கங்களிலிருந்தும், இமயமலையில் இயற்கையாக உப்பு கிடைக்கும் சில பகுதிகளிலிருந்தும் பாறை உப்புகளாக பெறப்படுகின்றன.[3][4] மேலும், வட இந்திய உப்பு ஏரியான சாம்பர் ஏரியிலிருந்தும் மற்றும் நேபாளத்தின் முஸ்தாங் மாவட்டம் தித்வானா போன்ற பகுதியில் அமைந்துள்ள உப்பு ஏரிகளில் இருந்தும் இவ்வகை உப்புகள் வெட்டியெடுக்கப் படுகின்றது.[5]

பாரம்பரியமாக, உப்பு அதன் ஒப்பீட்டளவில் நிறமற்ற மூல இயற்கை வடிவத்திலிருந்து இருண்ட நிறமாக மாற்றப்படுகிறது. இந்த மூல உப்பில் இயற்கையாகக் கலந்துள்ள சோடியம் சல்பேட் உப்புகளை கடுமையான நெடியுடைய ஐதரசன் சல்பைடு மற்றும் சோடியம் சல்பைடாக மாற்றும் ஓர் ஒடுக்க வேதியல் செயல்பாடுகளினால் கருப்பு உப்பாக மாற்றப்பட்டு பின்பு வணிகரீதியாக கருப்பு உப்பு என விற்கப்படுகிறது.[6] இந்த மூல உப்புக்கள் வேதிவினையால் மாற்றப்பட்டு இதனுடன் கரி, சிறிதளவு கடுக்காய், நெல்லிக்காய், ஒரு பீங்கான் ஜாடியில் கற்று புகாமல் அடைத்து வைக்கப்பட்டு, இதனுடன் கரி சேர்த்து மேலும் சிறிய அளவில் சேர்த்து கடுக்காய், நெல்லிக்காய்,தான்றிக்காய், கருவேலம் பட்டை, அல்லது நேட்ரன் எனப்படும் சோடியம் சல்பைடு ஆகியவை சேக்கப்பட்டு ஓர் உலை அல்லது சூளையில் 24 மணி நேரம் எரிக்கப்படுகிறது.[5] எரிக்கப்பட்ட உப்பு உருகும் பொழுது வேதியியல் எதிர்வினை ஏற்படுகிறது, பின்னர் உப்பு குளிர்ந்து, சேமிக்கப்பட்டு, சிறிது நாள் வைக்கப்பட்டு பின் விற்பனைக்கு வருகிறது.[3] அரியானாவின் ஹிசார் மாவட்டத்தை உற்பத்தியை மையமாகக் கொண்டு வட இந்தியாவில் இந்த முறையில் கருப்பு உப்பு தயாரிக்கப்படுகிறது. இந்த உப்பு படிகங்கள் பொதுவாகக் கருப்பு நிறத்தில் இருக்கும். நன்கு தூளாக அரைக்கபப்டும்போது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

தேவையான சேர்மங்களுடன் இயற்கையான உப்புகளிலிருந்து கருப்பு உப்பு தயாரிக்க முடியும் என்றாலும், இப்போது அதைப் பொதுவாக செயற்கையான முறையில் உற்பத்தி செய்வதே நடைபெறுகிறது. சிறிய அளவிலான சோடியம் சல்பேட், சோடியம் பைசல்பேட் மற்றும் ஃபெரிக் சல்பேட் ஆகியவற்றுடன் கலந்த சாதாரண சோடியம் குளோரைடை இணைப்பதன் மூலம் இது செயற்கை முறையில் செய்யப்படுகிறது, பின்னர் இது ஒரு உலையில் எரியூட்டப்படும் வேதியல் வினை மூலம் கரியுடன் சேர்ந்து இதன் வேதியியல் பண்பு குறைக்கப்படுகிறது. சோடியம் குளோரைடு, 5-10% சோடியம் கார்பனேட், சோடியம் சல்பேட் மற்றும் சில சர்க்கரை ஆகியவற்றைக் குறைப்பதன் மூலம் ஒத்த தயாரிப்புகளை உருவாக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.[6]

பயன்கள் தொகு

கருப்பு உப்பு வங்காள தேசம்,நேபாளம், இந்தியா மற்றும் பாக்கித்தான் போன்ற தெற்காசிய உணவு வகைகளில் ஒரு சுவையாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், சட்னிகள், சாலடுகள், அனைத்து வகையான பழங்கள், பச்சடிகள் மற்றும் பல சுவையான இந்திய சிற்றுண்டிகளில் சேர்க்கப்படுகிறது.[1]

கருப்பு உப்பு ஒரு குளிரூட்டும் ஒரு பொருளாக ஆயுர்வேதம் கருதுகிறது. மேலும் மலமிளக்கியாகவும் மற்றும் செரிமானத்திற்கும் உதவுகிறது.[3] வாய்வு மற்றும் நெஞ்செரிவு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிப்பதாகவும் நம்பப்படுகிறது. சம்மு பகுதியில் முன்கழுத்துக் கழலை என்ற பாதிப்பை சரி செய்கிறது என்று நம்பப்படுகிறது.[7] இந்த உப்பு வெறிபிடித்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும், மற்ற கனிம மற்றும் தாவர பொருட்களுடன் இணைப்பதன் மூலம் பற்பசைகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.[3]

இதையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Moorjani, Lachu (2005), Ajanta: Regional feast of India, Gibbs Smith, p. 22, ISBN 978-1-58685-777-6
  2. Case, Frances (6 June 2008), 1001 Foods You Must Eat Before You Die, Cassell Illustrated, ISBN 978-1-84403-612-7
  3. 3.0 3.1 3.2 3.3 Bitterman, Mark (2010), Salted:A Manifesto on the World's Most Essential Mineral, with Recipes, Ten Speed Press, pp. 166–167, ISBN 978-1580082624
  4. Vorkommen von Schwefelwasserstoff in "Schwarzsalz" (PDF), Bundesinstitut für Risikobewertung (BfR), 2003-08-25
  5. 5.0 5.1 Chandrashekhar, D (1977-02-22), Maqsood Mohammad vs The State Of Uttar Pradesh And Anr. on 22 February 1977, Allahabad High Court
  6. 6.0 6.1 Chandra, S (1970-02-18), Commissioner, Sales Tax vs Balwant Singh Jag Roshan Lal on 18 February 1970, Allahabad High Court
  7. Aggarwal, Hemla; Kotwal, Nidhi (2009), "Foods Used as Ethno-medicine in Jammu", Studies on Ethno-Medicine, 3 (1): 65–68
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பு_உப்பு&oldid=3851902" இலிருந்து மீள்விக்கப்பட்டது