கற்பகம் (திரைப்படம்)

1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கற்பகம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். 1964 இல் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது - இரண்டாவது சிறந்த படத்துக்கான தகுதிச் சான்றிதழ் பெற்றுள்ளது[1].

கற்பகம்
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புகே. எஸ். சபரிநாத்
அமர் ஜோதி மூவீஸ்
இசைவிஸ்வநாதன்-ராமமூர்த்தி
நடிப்புஜெமினி கணேசன்
கே. ஆர். விஜயா
சாவித்திரி
முத்துராமன்
எம். ஆர். ராதா
எஸ். வி. ரங்கராவ்
வெளியீடுநவம்பர் 15, 1963
நீளம்4567 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆவார்கள். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி எழுதினார். ஒலிப்பதிவில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் ஒரே பின்னணி பாடகி பி. சுசீலா பாடினார். "அத்தை மடி மெத்தையடி" மற்றும் "மன்னவனே அழலாமா கண்ணீரை" பாடல்கள் புகழ் பெற்றன.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்பகம்_(திரைப்படம்)&oldid=3724432" இருந்து மீள்விக்கப்பட்டது