காஞ்சிபுரம் அகத்தீசுவரர் கோயில்

காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

காஞ்சிபுரம் அகத்தீசுவரர் கோயில் (அகத்தியேச்சரம் - (திருவேகம்பம்) எனப்போற்றும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். இச்சிவலிங்கம், காஞ்சி திருவேகம்பத்தின் முதல் பிரகார தென்பாகத்தில் அமைந்துள்ளது. மேலும், அகத்திய முனிவர் வழிப்பட்டதாக அறியப்படும் இக்கோயில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

காஞ்சிபுரம் அகத்தியேச்சரம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் அகத்தியேச்சரம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அகத்தீஸ்வரர்.

தல சிறப்பு தொகு

விந்திய மலையின் இறுமாப்பை அடக்க தேவர்கள் வேண்டியவாறு காசியில் வசித்திருந்த அகத்திய முனிவர் காஞ்சிக்கு வந்தபோது. அக்காஞ்சி சான்றோரையுடைத்தாய் இருக்கும் சிறப்பை நாடி இவ்விடத்தில் நாம் தேவர்கள் சொல்லியவண்ணம் வெளிபடுத்த வெண்ணியிருக்கும் இனிமையுடைய தாகிய தமிழை வெளியாக்கல் வேண்டும் என்று பூசித்தனர்.[2]

தல வரலாறு தொகு

விந்திய மலையின் செருக்கினை அடக்கிய அகத்தியர், ஏகம்பத்திற்கு தென்பகுதியில் அகத்தியலிங்கம் (தன் பெயரில்) பிரதிட்டை செய்து தொழுதார் என்பது வரலாறாகும்.[3]

தல பதிகம் தொகு

  • பாடல்: (அகத்தியேச்சர வரலாறு)
பண்ணிசைந்த வரிச்சுரும்பர் பாடல் பயிலும் மலர் இலைஞ்சித்,
தண்ணிசைந்த சிவகங்கைத் தழங்குந் திரைநீர் குடைந்தாடிப்,
பெண்ணிசைந்த பெருவனப்பின் பிராட்டி
ஆங்குப் பிறங்கொளியால், கண்ணிசைந்த களிசிறப்ப அகத்தியேசங்
கண்டணைந்தாள்.
  • பொழிப்புரை:
பண்ணமைந்த பாடல் வண்டு பாடுதற் கிடனாகிய பூக்களைக் கொண்ட
பொய்கையாகிய குளிர்ந்த சிவகங்கை எனும் ஒலிக்கும் அலைகளையுடைய
தீர்த்தத்தில் மூழ்கித் திளைத்து பெண்ணியல்பமைந்த பேரழகினையுடைய
பெருமாட்டியார் அங்கே விளங்கொளியால் கருத்திற்கியைந்த களி துளும்ப
அகத்தியர் அருச்சித்த அகத்தியே சத்தினைக் கண்டு நெருங்கினர்.[4]

அமைவிடம் தொகு

இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியின் காஞ்சி திருவேகம்பத்தின் முதல் பிரகார தென்பாகத்தில் இச்சிவலிங்க மூர்த்தம் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ மைல் தூரமுள்ள காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் திருவேகம்ப அகத்தில் அகத்தீசுவர மூர்த்தம் தாபிக்கப்பட்டுள்ளது.[5]

போக்குவரத்து தொகு

மேற்கோள்கள் தொகு

  1. projectmadurai.org | காஞ்சிப் புராணம் | 61. தழுவக்குைழந்த படலம் (2023- 2449) | 2205 அகத்தியேச்சர வரலாறு
  2. "palsuvai.ne | 10. அகஸ்தீஸ்வரர் | காஞ்சிபுர சிவலிங்கங்கள்". Archived from the original on 2016-06-29. பார்க்கப்பட்ட நாள் 2016-04-15.
  3. "shaivam.org | அகத்தியேச்சரம் - (திருவேகம்பம்)". Archived from the original on 2018-02-06. பார்க்கப்பட்ட நாள் 2016-04-15.
  4. tamilvu.org | காஞ்சிப் புராணம் | தழுவக் குழைந்த படலம் | அகத்தியேச்சர வரலாறு | பாடல்: 183 | பக்கம்: 639 - 640
  5. dinaithal.com | அகத்தியேச்சரம் - (திருவேகம்பம்) அகத்தீசுவரர் கோயில்
  6. tripadvisor.in 15 temples in Kanchipuram

புற இணைப்புகள் தொகு