காட்பாடி வட்டம்

காட்பாடி வட்டம் , தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக காட்பாடி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் காட்பாடி, கே. வி. குப்பம், வடுகன் தாங்கல், திருவலம், மேல்பட்டி என 5 உள்வட்டங்களும் காட்பாடி வட்டத்தில் மிக பெரிய ஊர் பொன்னை ஆகும், 86 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

இவ்வட்டத்தில் காட்பாடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் கே. வி. குப்பம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 391,100 ஆகும். அதில் 195,567 ஆண்களும், 195,533 பெண்களும் உள்ளனர். 92,407 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 63.4% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 81.82% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1000 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 38635 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 959 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 76,967 மற்றும் 3,102 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.91%, இசுலாமியர்கள் 2.63%, கிறித்தவர்கள் 6.07% மற்றும் பிறர் 0.42% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்பாடி_வட்டம்&oldid=3618013" இலிருந்து மீள்விக்கப்பட்டது