கார்மேல் அன்னை

தூய கார்மேல் அன்னை அல்லது தூய கார்மேல் மலை அன்னை அல்லது புனித உத்தரிய மாதா என்பது கார்மேல் சபையின் பாதுகாவலராகிய, இயேசு கிறித்துவின் தாயான தூய கன்னி மரியாவுக்கு அளிக்கப்படும் பெயராகும். கார்மேல் சபையின் முதல் உறுப்பினர்கள் 12 முதல் 13ம் நூற்றாண்டு வரை திருநாட்டில் உள்ள கார்மேல் மலையில் வனவாசிகளாக வாழ்ந்தனர். தங்களின் துறவு இல்லத்தருகில் ஒரு கோவிலை மரியாவின் பெயரில் கடவுளுக்கு கட்டினர். அக்கால வழக்கப்படி அக்கோவில் இருந்த இடத்தின் பெயராலேயே மரியாவுக்கு கார்மேல் அன்னை என்னும் பெயர் வழங்கலாயிற்று.

தூய கார்மேல் அன்னை ஓவியர்: Pietro Novelli, 1641.
கார்மேல் அன்னை (Italy)

15ம் நூற்றாண்டில், மரியாவின் உத்தரியம் என்னும் அருளிரக்கத்தின் பக்தியானது பரவ துவங்கியது. மரியாவே உத்தரியத்தை புனித சைமன் ஸ்டாக் என்னும் கார்மேல் சபை புனிதருக்கு ஒரு காட்சியில் அளித்ததாக நம்பப்படுகின்றது. 16 ஜூலை கத்தோலிக்க திருச்சபையில் கார்மேல் அன்னையின் விழா நாள் ஆகும்.[1]

தூய கார்மேல் அன்னை, சிலி நாட்டின் பாதுகாவலி ஆவார்.

படக்கட்சியகம் தொகு

உத்தரியத்தோடு புனித கார்மேல் அன்னை:

மேற்கோள்கள் தொகு

  1. Bede Edwards, OCDS. Carmel Clarion Volume XXI, pp 17–22. "St. Simon Stock—The Scapular Vision & the Brown Scapular Devotion." ஜூலை–ஆகஸ்ட் 2005, Discalced Carmelite Secular Order, Washington Province.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்மேல்_அன்னை&oldid=3538375" இலிருந்து மீள்விக்கப்பட்டது