சகசரலிங்க குளம்

குசராத்தின் பதானில் உள்ள ஓர் செயற்கை நீர்த் தொட்டி

சகசரலிங்க குளம் (Sahasralinga Tank) அல்லது சகசரலிங்க தலாவ் என்பது இந்தியாவின் குசராத்தின் பதானில் உள்ள இடைக்காலத்தைச் சேர்ந்த ஓர் செயற்கை நீர்த் தொட்டி ஆகும். இது சோலாங்கியர் ஆட்சியின் போது பயன்பாட்டிலிருந்தது. ஆனால் இப்போது அது காலியாகவும், பாழடைந்த நிலையிலும் உள்ளது. இது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் (N-GJ-161) பாதுகாக்கப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாகும்.

செயற்கையான சகசரலிங்க குளம்

புராணக் கதை தொகு

சோலாங்கிய ஆட்சியாளர் செயசிம்ம சித்தராசன் குளத்தை தோண்டுபவர்களான ஒட் சமூகத்தைச் சேர்ந்த ரூடா என்பவனின் மனைவியான ஜஸ்மா ஓடனின் அழகில் மயங்கி தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதாகவும், அவள் மன்னனை சபித்தாள் எனவும் ஒரு கதை இருக்கிறது. இந்த சாபத்தால், தொட்டியில் தண்ணீர் நிரம்பவில்லை. சாபத்தை நீக்க, ஒரு நரபலி தேவைப்பட்டது. தாழ்த்தப்பட்ட சாதியான வங்கர் சமூகத்தைச் சேர்ந்த மாயோ அல்லது மஹ்யா (ஜெய் வீர் மக்மாயா), தன்னைத் தியாகம் செய்ததன் விளைவாக, தொட்டியில் தண்ணீர் நிரம்பியது. செயசிம்மன், நன்றியுணர்வுடன், அந்த சாதியை நகரத்தில் உயர் சாதியினருடன் தங்க அனுமதித்தான்.[1] [2] [3]

வரலாறு தொகு

 
அக்பர்நாமாவில் பதான் என்ற இடத்தில் ஒரு ஆப்கானியரால் பைராம் கான் படுகொலை செய்யப்படும் ஒரு காட்சி, 1561

செயசிம்ம சித்தராசனின் (கி.பி. 1092-1142) ஆதரவின் கீழ் குசராத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட பல செயற்கைக் குளங்களில் சகசரலிங்கக் குளமும் அடங்கும். அக்பர் தலைமையிலான முகலாயப் பேரரசில் தலைமை அமைச்சராகவும் மற்றும் தலைமைப் போர்ப்படைத் தலைவராகவும் பணியாற்றிய பைராம் கான், மக்காவுக்குச் செல்லும் வழியில் பதான் வழியாகச் செல்லும் போது, 1561இல் இந்தக் குளத்தில் படகு சவாரி செய்து திரும்பிய பிறகு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கட்டிடக்கலை தொகு

இந்தக் குளத்தின் கட்டிடக்கலை இந்து மதத்தின் நீர் மேலாண்மையையும், நீரின் புனிதத்தன்மையின் சிறந்த உணர்வையும் ஒருங்கிணைத்தது. இந்தக் குளமானது சரசுவதி ஆற்றின் கால்வாயில் இருந்து நீரைப் பெற்று, சுமார் 5 கி.மீ.வரை பரவியிருந்தது. குளத்தின் ஓரத்தில் ஆயிரம் சிவாலயங்கள் இருந்தன. இதன் சில எச்சங்கள் இன்றும் காணப்படுகின்றன.

சகசரலிங்க குளம் மிகப் பெரிய ஒரு பெரிய அளவிலான நீர்த்தேக்கமாக இருந்திருக்க வேண்டும். மேலும், அதன் இடிபாடுகளின் ஒரு பகுதியில் ஒரு பெரிய எண்கோண ரவுசா எழுப்பப்பட்ட போது, இடைக்காலத்தின் பிற்பகுதியில் அகற்றப்பட்ட கரையில் வைக்கப்பட்டுள்ள இலிங்கங்களைக் கொண்ட பல சிறிய கோயில்களிலிருந்து அதன் பெயரைப் பெற்றிருக்க வேண்டும். அதைச் சுற்றியுள்ள பெரிய அணையானது திடமான செங்கல் வேலைகளால் ஆனது. மேலும், தண்ணீரின் விளிம்பிற்கு படிக்கட்டுகளை உருவாக்கும் கல் கொத்துகளை எதிர்கொண்டது. கிழக்குக் கரையின் நடுவில் பழைய சிவன் கோவிலின் எச்சங்கள் உள்ளன. அவை நாற்பத்தெட்டு தூண்களின் தூண்களுடன் கூடிய மண்டபங்களின் அடித்தளங்களை உள்ளடக்கியுள்ளது. இது கி.பி 16 ஆம் நூற்றாண்டு வரை நல்ல நிலையில் இருந்தது. மேற்கு முனையில் ஒரு உருத்ர குபா உள்ளது. அதில் சரசுவதி ஆற்றிலிருந்து தண்ணீர் சேகரிக்கப்பட்டு, பின்னர் சகசரலிங்கக் குளத்தின் நுழைவாயில் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கம் சுமார் நாற்பது மீட்டர் விட்டம் கொண்டது. [4]

புகைப்படங்கள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

சான்றுகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sahastralinga Talao
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சகசரலிங்க_குளம்&oldid=3319059" இலிருந்து மீள்விக்கப்பட்டது