சாந்தபாய் காம்பிளே

சாந்தபாய் குருசுனாஜி காம்பிளே (Shantabai Krushnaji Kamble பிறப்பு 1 மார்ச் 1923) ஒரு மராத்தி எழுத்தாளர் மற்றும் தலித் ஆர்வலர் ஆவார். சுயசரிதை எழுதிய முதல் தலித் பெண் ஆவார்.

சாந்தபாய் குருசுனாஜி காம்பிளே
பிறப்பு1 மார்ச்சு 1923 (1923-03-01) (அகவை 101)
மகூத், சங்கோலா, சோலாபூர், மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியன்
குறிப்பிடத்தக்க படைப்புகள்மாய்யா ஜல்மாச்சி சித்தர்கதா
பிள்ளைகள்அருண் குருசுனாஜி காம்ப்ளே

சுயசரிதை மஜ்யா ஜல்மாச்சி சித்தர்கதா தொகு

ஆரம்பகால வாழ்க்கை தொகு

சாந்தபாய் குருசுனாஜி காம்பிளே மஹர் தலித் குடும்பத்தில் 1 மார்ச் 1923 அன்று பிறந்தார்.இவர் சோலாப்பூரில் அமைந்துள்ள மகூத்தில் பிறந்தார். இவர் ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய சமூகம், சமூக மற்றும் பொருளாதார அளவில் மிகவும் பின்தங்கி இருந்தது.

கல்வி பெறுவதற்கான போராட்டம் தொகு

இந்தியாவில், வறுமை நிலைக்கு கீழ் உள்ளவர்களுக்கான பாரம்பரிய அணுகுமுறையை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்: "கல்வி அவர்களின் தேநீர் கோப்பை அல்ல." எனவே இவருடைய சமூகத்தின் உறுப்பினர்களுக்கு கல்வி தடைசெய்யப்பட்டது. குறிப்பாக இவர் பெண் என்பதாலும் கல்வி மறுக்கப்பட்டது, ஏனெனில் அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு கல்வி பயில அனுமதி மறுக்கப்பட்டது.ஆனால் இவருடைய அசாதாரண திறமை காரணமாக இவருடைய பெற்றோர் இவரை பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்ததனை நஜா கோஸ் டு ஸ்கூல் - அண்ட் டசிண்ட் என்ற சுயசரிதைச் சாரத்தின் மூலமும் அறியப்படுகிறது, மேலும் இவருக்கு மூன்று ரூபாய் உதவித்தொகை "காகிதம், மை மற்றும் நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பலவற்றுக்காக" வழங்கப்பட்டது.[1] ஒரு செய்தித்தாள் கட்டுரையின் படி, "தீண்டத்தகாதவராக, இவர் வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை மற்றும் வகுப்பிற்கு வெளியே உட்கார்ந்து கல்வி கற்றுள்ளார், கற்றலின் போது பல அவமானங்களை சந்தித்துள்ளார்" [2]

சுயசரிதை - மஜ்யா ஜல்மாச்சி சித்தர்கதா தொகு

சாந்தபாய் காம்பிளேவின் சுயசரிதை மஜ்யா ஜல்மாச்சி சித்தர்காதா , தி கேலிடோஸ்கோப் ஸ்டோரி ஆஃப் மை லைஃப் என மொழிபெயர்க்கப்பட்டு 1986 இல் ஒரு முழுமையான நூலாக வெளியிடப்பட்டது. 1983 இல் பூர்வா இதழில் பார்வையாளர்களுக்கு முதலில் வழங்கப்பட்டது. பின்னர் இது 1990 ஆம் ஆண்டு மும்பை தூர்தர்ஷனில் நஜுகா என ஒளிபரப்பானது, மேலும் இது பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. காம்ப்ளே ஆசிரியராக ஓய்வு பெற்ற பிறகு சித்தர்கதை எழுதத் தொடங்கினார். இது ஒரு தலித் பெண் எழுத்தாளரின் முதல் சுயசரிதை கதையாக கருதப்படுகிறது. இந்த நூல் மும்பை பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. [3] முக்கியமாக இந்த புத்தகம் உயர் சாதியனரால் ஓரங்கட்டப்படுதல் மற்றும் ஒடுக்குமுறை பிரச்சினையை தலித் மக்கள் எதிர்கொண்ட சிக்கலை எழுப்புகிறது, இரண்டாவதாக சக சமூக ஆண்களால் எதிர்கொளும் பாலின பாகுபாடுகளும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது . [4]

நிகழ்படங்கள் தொகு

  • முன்னோடி சுயசரிதை: இந்தியாவைச் சேர்ந்த தீண்டத்தகாத சாதிகளின் (அண்டச்சபிள் கேஸ்ட்சு) பெண் சாந்தாபாய் காம்ப்ளே. [5]
  • தூர்தர்ஷனில் "நஜுகா" மராத்தி தொடர். [6]

நூல் விளக்கம் தொகு

  • பாயிசன்டு பிரட்: நவீன மராத்தி தலித் இலக்கியத்திலிருந்து அர்ஜுனா ஆகாஸின் மொழிபெயர்ப்பு [7]

பங்களிப்பாளர் அர்ஜுனா டாங்களே பதிப்பு: மறுபதிப்பு [8]

சான்றுகள் தொகு

  1. Poisoned bread : translations from modern Marathi Dalit literature. Ḍāṅgaḷe, Arjuna.. Bombay: Orient Longman. 1992. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0863112544. இணையக் கணினி நூலக மையம்:29644277. https://archive.org/details/poisonedbreadtra0000unse. 
  2. Bande, Usha. "The double burden".
  3. Majhya Jalmachi Chitra Katha (TYBA) Shantabai K. Kamble பரணிடப்பட்டது 19 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
  4. Joseph, Ancy (February 2018). "An Exploration on the Tormenting Expressions of Caste System, through the Narratives of Some Dalit women Writers". 49042. 
  5. யூடியூபில் Animation of "Naja Goes to School" story by Shantabai Kamble
  6. யூடியூபில் Najuka" Marathi Series on doordarshan
  7. Dangale, Arjuna (2009). Poisoned Bread (First ). Orient BlackSwan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788125037545. 
  8. Kamble, Shantabai. "Naja goes to school – and doesn't". Savari. பார்க்கப்பட்ட நாள் 24 May 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தபாய்_காம்பிளே&oldid=3444466" இலிருந்து மீள்விக்கப்பட்டது