சிரின் போஸ்டர்

சிரின் போஸ்டர் (Shirin Fozdar) (1905-1992) இவர் ஒரு பெண்கள் உரிமை ஆர்வலராவார். இந்தியாவில் பிறந்த இவர், 1930கள் மற்றும் 1940களில் தனது சொந்த நாட்டில் பெண்கள் உரிமைகள் மற்றும் பொதுநல பிரச்சினைகளில் பணியாற்றினார். 1950ஆம் ஆண்டில் இவரும் இவரது கணவரும் சிங்கப்பூர் சென்று பகாய் சமயத்தைப் பரப்ப உதவினார்கள். சிங்கப்பூரில், திருமண சமத்துவமின்மை மற்றும் பலதார மணம் ஆகியவற்றிற்கு எதிராக இவர் ஒரு வெற்றியாளாரானார்; சிங்கப்பூர் மகளிர் அமைப்பு மற்றும் நாட்டின் சிரிய நீதிமன்றத்தை ஸ்தாபிப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். மேலும் மகளிர் சாசனம் சட்டமாக மாறியதை ஆதரிக்கும் முயற்சியில் ஒரு தலைவராக இருந்தார். 1958ஆம் ஆண்டில் இவரது கணவர் இறந்ததைத் தொடர்ந்து மற்றும் 1961இல் மகளிர் சாசனம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இவர் 14 ஆண்டுகள் தாய்லாந்திற்கு குடிபெயர்ந்தார். அந்த சமயத்தில் இவர் விபச்சாரத்திற்கு தள்ளப்படும் அபாயத்திலிருந்த சிறுமிகளுக்கான ஒரு பள்ளியை நிறுவினார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

சிரின் போஸ்டர் 1905 இல் இந்தியாவின் மும்பையில் பிறந்தார். இவரது பெற்றோர், மெக்ராபன் கோடாபக்சு பெக்ஜாத் மற்றும் தோவ்லத் ஆகியோர் பகாய் சமயத்தின் பாரசீக பயிற்சியாளர்கள் ஆவர்.[1][2] பகாய் மதத்தின் போதனைகளில் ஒன்று, ஆண்களும் பெண்களும் சமம் என்பதாகும். இவர் தனது 17 வயதில், கராச்சியில் நடந்த பகாயிகளின் இந்தியா தேசிய மாநாட்டில் உலகளாவிய கல்வி குறித்த விளக்கக்காட்சியை வழங்கினார்.[3] 1930 ளில் இவர் அனைத்து ஆசிய மகளிர் மாநாட்டில் ஈடுபட்டார். இது 1934இல் ஜெனிவாவில் நடந்த உலக நாடுகள் சங்க மாநாட்டில் சமத்துவம் குறித்த விளக்கக்காட்சியை வழங்க அனுப்பியது. இவர் தொடர்ந்து பொதுமக்களிடையே உரைகளை வழங்கினார். 1941இல் மகாத்மா காந்தியின் உத்தரவின் பேரில் அகமதாபாத்தில் அமைதி குறித்த உரை நிகழ்த்தினார்.

சிங்கப்பூர் தொகு

1950 ம் ஆண்டில், சிரின் போஸ்டர் தனது கணவரும், மருத்துவருமான கோடாத் போஸ்டருடன் சிங்கப்பூர் சென்று, பகாய் போதனைகளை பரப்ப முயன்றார்.[3] 1952ஆம் ஆண்டில், சிங்கப்பூர் மகளிர் அமைப்பு மற்றும் தற்போதுள்ள பெண்கள் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிற ஆர்வலர்களுடன் இணைந்து நிறுவினார். சிங்கப்பூர் மகளிர் அமைப்பு நிறுவப்படுவதற்கு வழிவகுத்த கூட்டத்திற்கு அழுத்தம் கொடுப்பதில் போஸ்டர் ஒருவராக இருந்தார். மேலும் அந்த ஆரம்ப கூட்டத்தில் குழுவின் பார்வை மற்றும் நிகழ்ச்சி நிரலை வடிவமைக்க உதவியது. குழுவின் கௌரவ பொதுச் செயலாளராக பணியாற்ற இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், அதன் ஆரம்பகால தகவல்தொடர்புகளை ஊடகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அனுப்பினார்.[2][4] இந்த குழு முதல் பெண்கள் அரசியல் நடவடிக்கை அமைப்பாகும், மேலும் 2,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட, ஐந்து தசாப்தங்களாக இதுபோன்ற மிகப்பெரிய குழுவாக இருந்தது.

போஸ்டரின் உடனடி கவனத்தை ஈர்த்த பிரச்சினைகளில் ஒன்று திருமண சமத்துவமின்மை; திருமணம் மற்றும் விவாகரத்தை நிர்வகிக்கும் சட்டங்கள் கணவருக்கு எளிதில் விவாகரத்து செய்வதற்கும் மறுமணம் செய்து கொள்வதற்கும் அதிகாரம் அளித்தன, மேலும் மனைவியை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டன. ஒரு நேர்காணலில், போஸ்டர் விளக்கினார், "நான் முதலில் இங்கு வந்தபோது, பலதார மணம் மற்றும் எளிதான விவாகரத்து விகிதங்கள் ஆபத்தானவையாக இருந்தது. திருமணச் சட்டங்கள் தளர்வானவை. பெண்கள் பலவீனமான பாலினம் என்ற நம்பிக்கையை ஆண்கள் கொண்டிருந்ததால் பெண்கள் எல்லா வகையான அட்டூழியங்களையும் அனுபவித்தனர். " [3] போஸ்டர் மற்றும் சிங்கப்பூர் மகளிர் அமைப்பு ஒரு தீர்வுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தன. 1955ஆம் ஆண்டில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு சிரிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது.[5] திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பாக நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருந்தது. கணவருக்கு வாழ்க்கைப் படி செலுத்த உத்தரவிடலாம். மற்றும் பலதார மணம் சட்டவிரோதமாக்குவதற்கு முன்பு, இரண்டாவது மனைவியை திருமணம் செய்வதற்கு முன்பு கணவருக்கு தனது முதல் மனைவியின் சம்மதத்தைப் பெறும்படி கட்டாயப்படுத்தலாம்.[6] சிங்கப்பூரில் மாற்றத்திற்கான ஒரு பெண்ணின் முகத்தை வைப்பது என்ற புத்தகம் போஸ்டர், சே சகாரா பின்தே நூர் முகமது மற்றும் காதிஜுன் நிசா சிராஜ் ஆகியோரை நீதிமன்றம் உருவாக்கிய பின்னணியில் முக்கிய சக்திகளாகக் கருதுகிறது .

1950களில், போஸ்டர் மற்றும் சிங்கப்பூர் மகளிர் அமைப்பு மக்கள் செயல் கட்சியுடன் ஒரு முரண்பாடான பணி உறவைக் கொண்டிருந்தன. இது 1954ஆம் ஆண்டில் பிரித்தனில் இருந்து சிங்கப்பூர் சுதந்திரத்தின் மேடையில் நிறுவப்பட்டது. பெண்களின் சமத்துவ பிரச்சினைகளை, குறிப்பாக அவர்களின் நிகழ்ச்சி நிரலின் முக்கிய அங்கமான பலதார மணத்தை ஒழிக்க மக்கள் செயல் கட்சியை சிங்கப்பூர் மகளிர் அமைப்பு நம்பியது. 1956 ஆம் ஆண்டில் கட்சி ஏற்பாடு செய்த ஒரு மகளிர் தின பேரணியில் பலதார மணம் குறித்த பிரச்சினையை பேச ஃபோஸ்டருக்கு வாய்ப்பு அளித்தது. எவ்வாறாயினும், 1957 வாக்கில் சிங்கப்பூர் மகளில் அமைப்பு பெண்களின் சமத்துவ பிரச்சினைகளில் மக்கள் செயல் கட்சியின் செயலற்ற தன்மையால் மிகவும் விரக்தியடைந்தது, அந்த ஆண்டு நகர சபைத் தேர்தலில் மக்கள் செயல் கட்சியின் வேட்பாளர்களாக இல்லாமல் சுயாதீன வேட்பாளர்களாக போட்டியிட சிங்கப்பூர் மகளில் அமைப்ப்பு உறுப்பினர்களை அது வலியுறுத்தியது.[2] 1959 தேர்தல் அறிக்கையில் அவ்வாறு செய்தாலும், பெண்களின் உரிமைகள் மற்றும் பலதாரமணம் எதிர்ப்பு மொழியை தங்கள் சாசனத்தில் வைத்த ஒரே கட்சி மக்கள் செயல் கட்சி மட்டுமே. பெண்கள் வாக்காளர்களின் ஆதரவு காரணமாக அந்த ஆண்டு தேர்தல்களில் மக்கள் செயல் கட்சிவென்றது. போஸ்டர் விரைவாக திட்டமிட்டார். 1954இல் முதலில் முன்மொழியப்பட்ட பெண்கள் உரிமை மசோதாவை நிறைவேற்றுமாறு அக்கட்சியை வலியுறுத்தினார். சட்டமன்றம் 1960இல் பிரச்சினையை எடுத்துக் கொண்டது. 1954 திட்டத்தை ஒரு கட்டமைப்பாகப் பயன்படுத்தியது. 1961இல் மகளிர் சாசனம் சட்டமாக மாறியது. இந்த மசோதா பலதார மணம் சட்டவிரோதமானது. விபச்சாரம் அல்லது பெரிய திருமணத்தை நடத்திய கணவருக்கு எதிராக பெண்களுக்கு சட்ட ரீதியான உதவிகளை வழங்கியது, மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதுகாக்கும் பல விதிகள் உள்ளன.[3][5] 2014ஆம் ஆண்டில் ஃபோஸ்டாரின் செய்லால் சிங்கப்பூரின் புகழ்பெற்ற மகளிர் என்பதில் முக்கிய பங்கு வகித்தது.

பிற்கால வாழ்வு தொகு

போஸ்டரின் கணவர் 1958இல் இறந்தார். 1961ஆம் ஆண்டில் போஸ்டார் கிராமப்புற தாய்லாந்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு இவர் சிறுமிகளுக்காக ஒரு பள்ளியை அமைத்தார். விபச்சாரத்திற்கு தள்ளப்படுவதற்கு எதிராக பெண்களை அதிகாரம் செய்யும் நோக்கில் இது நிறுவப்பட்டது. சிங்கப்பூர் திரும்புவதற்கு முன்பு இவர் தாய்லாந்து நாட்டில் 14 ஆண்டுகள் கழித்தார்.[1][7] இவர் சர்வதேச அளவில் பயணம் செய்து, பெண்கள் உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் பகாய் நம்பிக்கை குறித்து தொடர்ந்து உரைகளை நிகழ்த்தினார்.[5]

சிரின் போஸ்டர் 1992 பிப்ரவரி 2 அன்று புற்றுநோயால் இறந்தார். இவருக்கு மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் இருந்தனர்.[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 Fong, Lee-Khoo Guan (2007). "Shirin Fozdar". Singapore Infopedia. National Library Board. பார்க்கப்பட்ட நாள் 24 December 2015.
  2. 2.0 2.1 2.2 Chew, Phyllis Ghim Lian (24 August 2009). "The Singapore Council of Women and the Women's Movement". Journal of Southeast Asian Studies 25 (1): 112–140. doi:10.1017/S0022463400006706. https://repository.nie.edu.sg/bitstream/10497/4646/3/JSEAS-25-1-112_a.pdf. பார்த்த நாள்: 24 December 2015.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "JSAS_09AUG24" defined multiple times with different content
  3. 3.0 3.1 3.2 3.3 Chua, Alvin (11 December 2012). ""One man one wife" and the happiest woman on earth Shirin Fozdar (born 1905 – died 1992)". Singapore Memory Project. பார்க்கப்பட்ட நாள் 24 December 2015.
  4. Choy, Elizabeth (20 November 1951). "Minutes of Ladies Meeting on 20th Nov. 1951 at 352-A Tanjong Katong Road". Postcolonialweb.org. பார்க்கப்பட்ட நாள் 24 December 2015.
  5. 5.0 5.1 5.2 "Shirin Fozdar". Singapore Women's Hall of Fame. Singapore Council of Women's Organisations. Archived from the original on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 24 December 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help) பிழை காட்டு: Invalid <ref> tag; name "SWHOF_15DEC24" defined multiple times with different content
  6. Yeo, Nurul Liyana. "The woman who began it all". Pioneers of Early Singapore. Archived from the original on 13 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 7 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "A Tribute to Mrs Shirin Fozdar". 19 September 2000 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151225224316/http://www.nlb.gov.sg/donors/wp-content/uploads/DonorsGalleryContent/Item%205.pdf. பார்த்த நாள்: 24 December 2015.  Archived in Singapore & I.R.O., p. 35.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரின்_போஸ்டர்&oldid=3929880" இலிருந்து மீள்விக்கப்பட்டது