து. இரவிக்குமார்

இந்திய அரசியல்வாதி

இரவிக்குமார் (Ravikumar (writer)) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். எழுத்தாளர், வழக்கறிஞர் அரசியல்வாதி மற்றும் சாதி எதிர்ப்பு ஆர்வலர் என பன்முகங்களில் இவர் இயங்கினார். அம்பேத்கார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர்[1] நிறப்பிரிகை என்ற பத்திரிகை இதழின் ஆசிரியராகவும் இருந்தார். நிறப்பிரிகை இதழ் 1990 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல புதிய எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தியது.[2] இரவிக்குமார் விழுப்புரம் மக்களவையின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.[3][4]

து. இரவிக்குமார்
D. Ravikumar
2019 ஆம் ஆண்டில் மக்களவைக்கான புகைப்படம்
நாடாளுமன்றம், மக்களவை (இந்தியா)
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்எசு. இராசேந்திரன்
தொகுதிவிழுப்புரம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
முன்னையவர்தொல். திருமாவளவன்
பின்னவர்தொல். திருமாவளவன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 சூன் 1961
மாங்கனம் பட்டு
வேலைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி

வாழ்க்கைக் குறிப்பு தொகு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழி வட்டத்தில் காவிரிக்கரை கிராமமான மாங்கணாம்பட்டில் துரைசாமி- கனகம்மாள் தம்பதியருக்கு 10-06-1961 ஆம் ஆண்டு சூன் மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். செண்பகவல்லி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு ஆதவன், அதீதன் என்ற பிள்ளைகள் உள்ளனர்.

அரசியல் வாழ்க்கை தொகு

இரவிக்குமார் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6]

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், விழுப்புரம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7][8]

எழுதிய நூல்கள் தொகு

கட்டுரைத் தொகுப்புகள்

  • கண்காணிப்பின் அரசியல் (1995) விடியல் பதிப்பகம்[9]
  • கொதிப்பு உயர்ந்து வரும் (2001) காலச்சுவடு பதிப்பகம்
  • கடக்க முடியாத நிழல் (2003) காலச்சுவடு பதிப்பகம்
  • மால்கம் எக்ஸ் (2003) காலச்சுவடு பதிப்பகம், உயிர்மை மறுபதிப்பு (2010)
  • வன்முறை ஜனநாயகம் (2004) தலித் வெளியீடு
  • சொன்னால் முடியும் (2007) விகடன் பதிப்பகம்
  • இன்றும் நமதே (2007) விகடன் பதிப்பகம்
  • தமிழராய் உணரும் தருணம் (2009) ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த கட்டுரைகளிந்தொகுப்பு. ஆழி பதிப்பகம்
  • துயரத்தின்மேல் படியும் துயரம் (2010) ஆழி பதிப்பகம்
  • காணமுடியாக் கனவு (2010) ஆழி பதிப்பகம்
  • சூலகம் ( 2009) பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த கட்டுரைகள் உயிர்மை பதிப்பகம்
  • கற்றனைத்தூறும் (2009) கல்வி தொடர்பான கட்டுரைகள் , உயிர்மை பதிப்பகம்
  • பிறவழிப் பயணம் (2010) உயிர்மை பதிப்பகம்
  • பாப் மார்லி - இசைப் போராளி (2010) பாப் மார்லியின் வாழ்க்கை வரலாறு , உயிர்மை பதிப்பகம்
  • அண்டை அயல் உலகம் (2010) அண்டை நாடுகள் குறித்த கட்டுரைகள், உயிர்மை பதிப்பகம்
  • கடல்கொள்ளும் தமிழ்நாடு (2010) சூழலியல் கட்டுரைகள் , மணற்கேணி பதிப்பகம்
  • காற்றின் பதியம் (2010) மணற்கேணி பதிப்பகம்
  • எல்.இளையபெருமாள்- வாழ்வும் பணியும் (2010) மணற்கேணி பதிப்பகம்
  • சொல்லும் செயல் - ரவிக்குமார் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் (2010) மணற்கேணி பதிப்பகம்

கவிதை

  • அவிழும் சொற்கள் (2009) உயிர்மை பதிப்பகம்
  • மழைமரம் (2010) க்ரியா பதிப்பகம்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • உரையாடல் தொடர்கிறது (1995) ஃபூக்கோ, எட்வர்ட் செய்த்,அம்பர்த்தோ எக்கோ முதலான உலகச் சிந்தனையாளர்களின் நேர்காணல்களும் கட்டுரைகளும்[10]
  • எட்வர்ட் ஸெய்த், தமிழில் ரவிக்குமார், அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல், மணற்கேணிப் பதிப்பகம், புதுச்சேரி, 2010[10]
  • கட்டிலில் கிடக்கும் மரணம் (2002) மஹாஸ்தாதேவி, இஸ்மத் சுக்தாய், இஸபெல் ஆலண்டே போன்ற பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்
  • வெளிச்சமும் தண்ணீர் மாதிரிதான் (2003) காபிரியேல் கார்சியா மார்க்யூஸ், இஸபெல் அலண்டெ மற்றும் சிலரது கதைகள்
  • பணிய மறுக்கும் பண்பாடு (2003) எட்வர்ட் செய்தின் எழுத்துகள்[10]
  • வரலாறு என்னும் கதை (2010) - எட்வர்டோ கலியானோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள்
  • வலசைப் பறவை ( 2010) எஹுதா அமிக்கய், கவாஃபி,மாயா ஆஞ்சலூ முதலானோரின் கவிதைகள்

தொகுப்பு நூல்கள் தொகு

  • தலித் இலக்கியம், அரசியல், பண்பாடு (1996)
  • தலித் என்கிற தனித்துவம் (1998)
  • அயோத்திதாஸ் பண்டிதர் சிந்தனைகள் – 4 தொகுதிகள் (1999)
  • ரெட்டைமலை சீனிவாசன் ஜீவித சருக்கம் - ( தன்வரலாறு) (1999)
  • மிகைநாடும் கலை (2003) சினிமா கட்டுரைகள்
  • சுவாமி சகஜாநந்தா- மேலவையிலும் பேரவையிலும் ஆற்றிய உரைகள் , மணற்கேணி பதிப்பகம்
  • எங்கள் காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது (2009) ஈழ இனப்படுகொலை குறித்த கவிதைகள், மணற்கேணி பதிப்பகம்

ஆங்கில நூல்கள் தொகு

  • We, the Condemned (1999) (Against Death Penalty)
  • Venomous Touch (2009) selected articles of Ravikumar, Samya, kolkatta
  • Waking is another dream (2010) Poems on Mullivaykal, Navayana Publishing
  • Tamil Dalit Writing (2010) An anthology of Tamil Dalit Literature , Oxford University Press[11]

இதழ்கள் வெளியீடு தொகு

  • நிறப்பிரிகை- நவீன அரசியல் விவாதக்களத்தை உருவாக்கிய நிறப்பிரிகை இதழை அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி ஆகியவர்களோடு இணைந்து நடத்தியவர்.அந்த இதழ் இவரது முகவரியிலிருந்துதான் இவரால் வெளியிடப்பட்டது.
  • தலித்- தலித் இலக்கியத்துக்கென தமிழில் வெளியிடப்பட்ட தலித்- இருமாத இதழின் ஆசிரியர். அது பதினொரு இதழ்கள் வெளியானபின் நின்றுபோனது.[9]
  • போதி - தலித் வரலாற்றுக்கென இவரால் உருவாக்கப்பட்ட காலாண்டிதழ். இரண்டு இதழ்கள் வெளியாகி நின்றுபோயிருந்தது. தற்போது மீண்டும் வெளியாகத் தொடங்கியுள்ளது.[9]
  • மணற்கேணி- இவரை ஆசிரியராகக்கொண்டு தமிழ்ச் செவ்வியல் இலக்கியம், தொல்லியல் முதலானவை குறித்த ஆழமான ஆய்வுகளைத் தாங்கி வெளிவரும் இருமாத இதழ்.

மேற்கோள்கள் தொகு

  1. "Want the complete annihilation of caste: First-time MP D Ravikumar". 23 July 2019.
  2. Satyanarayana and Tharu (2011). No Alphabet in Sight: New Dalit Writing from South India. New Delhi: Penguin India. பக். 258. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-143-41426-1. 
  3. "Members : Lok Sabha".
  4. S, Mohamed Imranullah (2021-09-08). "Villupuram MP Ravikumar tells HC he is a member of the DMK" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/villupuram-mp-ravikumar-tells-hc-he-is-a-member-of-the-dmk/article36350847.ece. 
  5. Kolappan, B. (20 March 2012). "Tamil Dalit writing set to go English". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/tamil-dalit-writing-set-to-go-english/article3014460.ece. 
  6. Panneerselvan, A. S. (11 Aug 2012). "Out of the Book". The Indian Express. http://indianexpress.com/article/news-archive/web/out-of-the-book/. பார்த்த நாள்: 14 June 2015. 
  7. "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்".பிபிசி தமிழ் (மே 23, 2019)
  8. "திருமாவளவனின் ராஜதந்திரம் பலித்தது. விசிக ரவிக்குமார் 1.28 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி". ஒன்இந்தியா (மே 23, 2019)
  9. 9.0 9.1 9.2 தீராநதி (2006-10-27). "நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர் ரவிக்குமார்". தமிழ் கூடல் இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304224846/http://www.koodal.com/article/tamil/ilakkiyam.asp?id=547. பார்த்த நாள்: 2014-06-11. "மணற்கேணிப் பதிப்பகத்தின் வெளியீடாக ‘அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்’, ‘உரையாடல் தொடர்கிறது’ ஆகிய இரண்டு நூல்கள் ரவிக்குமாரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. ஏற்கனவே ‘பணிய மறுக்கும் பண்பாடு’ என்ற நூலிலும், வேறு சில இதழ்களிலும் கட்டுரைகளாக வந்தவைகள்தான் என்றாலும் இருத்தல் குறித்த தத்துவம் சார்ந்த மொழியாடல்கள் என்பதனால் மீண்டும் மீண்டும் வாசிப்பைக் கோரி நிற்கின்றன இந்த எழுத்துக்கள்." 
  10. 10.0 10.1 10.2 பேரா. க.பஞ்சாங்கம் (2013-12-30). "அறிதலின் தரத்தையும் அளவையும் உயர்த்துவதை நோக்கி… ரவிக்குமாரின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள்". திண்ணை. http://puthu.thinnai.com/?p=23944. பார்த்த நாள்: 2014-06-11. "மணற்கேணிப் பதிப்பகத்தின் வெளியீடாக ‘அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்’, ‘உரையாடல் தொடர்கிறது’ ஆகிய இரண்டு நூல்கள் ரவிக்குமாரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. ஏற்கனவே ‘பணிய மறுக்கும் பண்பாடு’ என்ற நூலிலும், வேறு சில இதழ்களிலும் கட்டுரைகளாக வந்தவைகள்தான் என்றாலும் இருத்தல் குறித்த தத்துவம் சார்ந்த மொழியாடல்கள் என்பதனால் மீண்டும் மீண்டும் வாசிப்பைக் கோரி நிற்கின்றன இந்த எழுத்துக்கள்." 
  11. "The Oxford India Anthology of Tamil Dalit Writing". பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2014.

புற இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=து._இரவிக்குமார்&oldid=3892476" இலிருந்து மீள்விக்கப்பட்டது