சிவஞான வள்ளல்

சிவஞான வள்ளல் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர் ஆவார். இவர் தமிழில் இருபது நூல்களை பாடியுள்ளார். இவற்றை வேதாந்தநூல்கள் என்பர்.

வாழ்க்கை தொகு

சிவஞான வள்ளல் சீர்காழியில் வாழ்ந்தவர். காழிக் (சீர்காழி) கண்ணுடைய வள்ளல் என்பவரின் மாணாக்கர் சுயம்பிரகாச வள்ளல். சுயம்பிரகாச வள்ளலின் மாணாக்கர் சிவஞான வள்ளல்.

இவர் கையாளும் நூல்களில் குறிப்பிடத் தக்கவை

திருக்குறள்
சிவவாக்கியார் பாடல்
திருப்புகழ்
கந்தரனுபூதி
திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம்
விநாயகர் அகவல்
தேவிகாலோத்தரம்
சர்வ ஞானோத்தரம்

இவர் கையாளும் தொடர்களைப் கொண்ட முன்னோர் நூல்கள்

அப்பர்
சுந்தரர்
காரைக்கால் அம்மையார்
மாணிக்கவாசகர்
திருமூலர்
சேரமான் பெருமாள் நாயனார்
நக்கீரர்
பட்டினத்தார்

எழுதியுள்ள நூல்கள் தொகு

  1. சத்திய ஞான போதம்
  2. பதி பசு பாச விளக்கம்
  3. சித்தாந்த தரிசனம்
  4. உபதேச மாலை
  5. சிவஞானப் பிரகாச வெண்பா
  6. ஞான விளக்கம்
  7. அத்துவிதக் கலிவெண்பா
  8. அதிரகசியம்
  9. சிவாகமக் கச்சிமாலை
  10. கருணாமிர்தம்
  11. சுருதிசார விளக்கம்
  12. சிந்தனை வெண்பா
  13. நிராமய அந்தாதி
  14. திருமுகப் பாசுரம்

கருவிநூல் தொகு

அடிக்குறிப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவஞான_வள்ளல்&oldid=2930529" இலிருந்து மீள்விக்கப்பட்டது