தமயந்தி (கவிஞர்)

தமயந்தி (Dhamayanthi) தமிழ் புனைகதை எழுத்தாளரும், கவிஞரும், பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநரும் ஆவார். [1]

வாழ்க்கைக் குறிப்பு தொகு

தமயந்தி இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் பிறந்தார். இவருடைய பெற்றோர் ஆசிரியர்களாக இருந்தனர். பெற்றோரிடமிருந்து இவர் புத்தகம் படிக்கும் வழக்கத்தினால் எழுத்துப்பணி மீதான தனது ஆர்வத்தை உள்வாங்கினார். தனது பிறந்தநாளின் போது தந்தை பரிசாக அளிக்கும் புத்தகங்களும், குழந்தைப் பருவத்தின் தவிர்க்க முடியாத தனிமையும் புத்தகங்கள் மீது அபார ஆர்வத்தை வளர்த்தது. பின்னர் எழுதும் ஆர்வத்தை வளர்க்க உதவியது, என்று இவர் கூறுகிறார். [1]

திருநெல்வேலியில் உள்ள சாரா டக்கர் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டமும், திருநெல்வேலி செயின்ட் ஜான்ஸில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இவரது முதல் இரண்டு சிறுகதைகள் அந்நேரத்தில் வெளியிடப்பட்டு இரண்டிற்கும் ரொக்கப் பரிசுகளை வென்றார். இவரது அடுத்தடுத்த சிறுகதைகள் கவனத்தைப் பெற்று ஒரு தொகுப்பு வெளிவந்தது. இவரது புனைகதை அதிக கவனத்தையும் ஆர்வத்தையும் உருவாக்கினாலும், இவர் தொடர்ந்து கவிதை எழுதினார். திரைப்படத்துறையில் எழுத்தாளராகப் பணியாற்றுவதற்காக சென்னைக்குச் செல்வதற்கு முன்பு திருநெல்வேலியில் வானொலி அறிவிப்பாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் பணியாற்றினார். இவர் தமிழ்த் திரையுலகில் ஒரு பாடலாசிரியராகப் பல பாடல்களை எழுதியுள்ளார். இவரது முதற்பாடல் "விழித்திரு" படத்தில் இருந்து வந்தது.

தொழில் தொகு

இவர் தீவிர ஆழமான பிரபலக் கதைகளை எழுதுகிறார். [2] பாலின சமத்துவமின்மையும், சமூக-அரசியல் பிரச்சினைகளையும் மனித மனதின் கணிக்க முடியாத தன்மையை வெளிப்படுத்தும் ஒரு கதையை விவரிக்கும் இவரது நோக்கத்துடன் தனது ஆழ்ந்த அக்கறையை சமநிலைப்படுத்துகிறார்.[3] இவரது கதைகள் ஒரு குடும்பத்தில் ஆண்-பெண் உறவுகளின் உடல்ரீதியான வன்முறையின் எல்லையாக உள்ள பெண்கள் மீது செலுத்தப்படும் வெளிப்படையான வன்முறையின் நுட்ப சக்தியை மையமாகக் கொண்டுள்ளன. [1] எமிலி டிக்கின்சனைக் கண்டுபிடித்த பிறகு ஆங்கில இலக்கியம் படிக்கத் தூண்டப்பட்டார்.

இவர் ஆறு சிறுகதைத் தொகுப்புகளையும், ஒரு நாவலையும், ஒரு கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டார். சில்வியா பிளாத்தின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்தார்.

தொலைக்காட்சியில், மின்பிம்பங்கள் தயாரித்த சமுத்திரக்கனியின் அறிமுகத் தொடரில் திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமானார். இவர் சமூகப் பிரச்சினைகள் குறித்த ஆவணப்படங்களையும், வாடகைத் தாய்கள் பற்றிய ஆவணப் புனைகதையையும் இயக்கியுள்ளார். இவர் விழித்திரு திரைப்படத்தின் இயக்குநர் மீரா கதிரவனுடன் மூன்று கதைகளில் ஒன்றையும், இத்திரைப்பட வசனத்தையும் இணைந்து எழுதியுள்ளார். மேலும் பதினொரு படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். [4] இவர் பாரத் பாலாவுக்கு ஒரு திரைக்கதையை எழுதினார், மேலும் குட்டி ரேவதி இயக்கிய மற்றொரு திரைப்படத்திற்கும் திரைக்கதை எழுதினார். தடயம் என்பது ஆனந்த விகடனில் வெளியான இவரது சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. [3] அனல் மின் நிலையம் - அதன் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றிய இவரது சிறுகதை குறும்படமாக எடுக்கப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தொகு

தமிழ்ப் புத்தகங்கள்
  • கொன்றோம் அரசியை (சிறுகதை) - பனிக்குடம் பதிப்பகம்
  • இந்த நதி நனைவதற்கல்ல (கட்டுரை) - பிரக்ஞை
  • ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும் (சிறுகதை) - கருப்புப் பிரதிகள்
  • அக்கக்கா குருவிகள் (சிறுகதை) - போதி
  • சாம்பல் கிண்ணம் (சிறுகதை)- போதி
  • வாக்குமூலம் (சிறுகதை) - போதி
  • நிழலிரவு (சிறுகதை) - காவ்யா பதிப்பகம்
  • முற்பகல் ராஜ்ஜியம் (சிறுகதை) - கவிதா பதிப்பகம்
  • என் பாதங்களில் படரும் கடல் (கவிதை) - திஸ்கவரி புக் பேலஸ்
  • தமயந்தியின் சிறுகதைகள் - சுப்ரஜா முயற்சித்ரீதரனின் பதிப்பகம்
  • மனம் என்னும் மாய கண்ணாடி - மின்னம்பலம்
  • முட்களின் மேல் சில பட்டாம்பூச்சிகள் - பேட்டிகள் மின்னம்பலம்
  • வல்லமை தாராயோ - மின்னம்பலம் கட்டுரைகள்
தமிழ்ப் பாடல்கள்
  • விழித்திரு (திரைப்படம்) - வெள்ளை இரவே (பாடல்) - பாடியவர்கள்: ஜி.வி.பிரகாஷ் குமார், என்.எஸ்.கே.ரம்யா
  • கரிச்சான் குருவி (திரைப்படம்) - நான் சாமி புள்ள (பாடல்)

விருதுகள் தொகு

பெண்களுக்காக இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக தி இந்து (தமிழ்) பாரதி விருது இவருக்கு வழங்கப்பட்டது. [5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Thendral Tamil Magazine – எழுத்தாளர் – தமயந்தி". பார்க்கப்பட்ட நாள் 8 October 2018."Thendral Tamil Magazine – எழுத்தாளர் – தமயந்தி". Tamilonline.com. Retrieved 8 October 2018.
  2. V. Neelkandan (3 March 2017). "'சட்டமன்றத்தை இளைஞர்கள் கைப்பற்ற வேண்டும்!' – எழுத்தாளர் தமயந்தி – Assembly should be filled with youngsters, says writer Dhamayanthi". பார்க்கப்பட்ட நாள் 8 October 2018.
  3. 3.0 3.1 "Dhamayanthi on adapting her short story Thadayam for the big screen: 'Wanted to explore women's choices'". 31 July 2018. பார்க்கப்பட்ட நாள் 8 October 2018."Dhamayanthi on adapting her short story Thadayam for the big screen: 'Wanted to explore women's choices'". Firstpost.com. 31 July 2018. Retrieved 8 October 2018.
  4. Dinamalar (9 May 2015). "பாடலாசிரியரானார் எழுத்தாளர் தமயந்தி – Writer Damayanthi turn as Lyricist". பார்க்கப்பட்ட நாள் 8 October 2018.
  5. "Five Tamil writers to be honoured for their work". 6 January 2018. பார்க்கப்பட்ட நாள் 8 October 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமயந்தி_(கவிஞர்)&oldid=3819657" இலிருந்து மீள்விக்கப்பட்டது