தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, மதுரை

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, மதுரை (Tamil Nadu Government Music College, Madurai) தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில், தமிழ்நாடு மதுரை மாவட்டம் மதுரையில் இயங்கிவருகின்ற கல்லூரியாகும்.

பிற கல்லூரிகள் தொகு

தமிழ்நாட்டில் இசைக் கல்லூரிகள் சென்னை, திருவையாறு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ளன.

துவக்கம் தொகு

இக்கல்லூரி தமிழகத்தின் தென் மாவட்ட மாணவர்களின் நலனைக் கருதி 1979இல் தோற்றுவிக்கப்பட்டது. பசுமலை கோபாலிபுரம் மலையில் 14.10 ஏக்கர் நிலத்தை 1986இல் அரசு இசைக்கல்லூரிக்காக அரசு அளித்தது. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக இணைவு பெற்று 2014 – 2015 முதல் செயல்படுகிறது.[1]

பட்டப்படிப்புகள் தொகு

இக்கல்லூரிகளில் மூன்று ஆண்டு பட்டயம், ஓராண்டு பட்டயம், மூன்று ஆண்டு இளங்கலை ஆகிய வகுப்புகள் நடத்தப்பெறுகின்றன. வீணை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம், தவில், நாதசுரம், நாட்டுப்புறக் கலை, குரலிசை போன்ற பாடங்கள் முதன்மை மற்றும் துணைப்பாடங்களாக அமைந்துள்ளன.[1]

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு