தமிழ்நாட்டில் ந,ந,ஈ,தி உரிமைகள்

நங்கை, நம்பி, ஈரர், திருனர் (ந,ந,ஈ,தி) உரிமைகள் இந்தியாவில் மிகவும் முற்போக்கானவை.[1][2] திருநங்கைகள் நலக் கொள்கையை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும் , இதில் திருநங்கைகள் அரசு மருத்துவமனைகளில் இலவச பாலின மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பல்வேறு சலுகைகள் மற்றும் உரிமைகளைப் பெற முடியும். தமிழ்நாடு அரசுதான் இந்தியாவிலேயே முதன்முதலாக இருபால் பாலியல் உறவு குழந்தைகளுக்கு கட்டாய பாலின அறுவை சிகிச்சையை தடை செய்தது.[3][4]

2018 இல் உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, ஒரே பாலின பாலியல் செயல்பாடு சட்டப்பூர்வமானது. இந்திய ஒன்றியம் ந,ந,ஈ,தி சமூகம், குறிப்பாக திருநங்கைகள் நலன்கள் தொடர்பாக தமிழ்நாடு சிறப்பான நடவைக்கைகளை மேர்கொண்டு வந்துள்ளது. ஆயினும்கூட, பாகுபாடு, எதிர் பாலின திருமணங்கள், கொடுமைப்படுத்துதல், தற்கொலைகள்,[5] மற்றும் குடும்ப நிராகரிப்புகள் ஆகிய செயல்கள் நடந்து கொண்டுவருகிறது. 2015 ல் ஒரு கணக்கீட்டின் படி, தமிழ்நாடு சுமார் 16.380 மக்கள் தங்களை ந,ந,ஈ,தியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .[6]

ஒரே பாலின பாலியல் செயல்பாடுகள் சட்டபூர்வமானவை தொகு

6 செப்டம்பர் 2018 அன்று , இந்திய உச்ச நீதிமன்றம் ஒருமனதாக பிரிவு 377 ஐ அரசியலமைப்பிற்கு முரணானது, இது சுயவிருப்பம், நெருக்கம் மற்றும் அடையாளம் ஆகிய தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக தீர்ப்பளித்தது, இதனால் தமிழ்நாடு உட்பட இந்தியாவில் ஓரினச்சேர்க்கையை சட்டப்பூர்வமாக்கியது.[7][8]

ஒரே பாலின உறவுகளை அங்கீகரித்தல் தொகு

ஓரின சேர்க்கை திருமணங்கள் தமிழகத்தில் அங்கீகரிக்கவோ அல்லது இரத்து செய்யப்படவோ இல்லை.[9]

22 ஏப்ரல் 2019 அன்று தமிழ்நாடு, சென்னை உயர் நீதிமன்றம், இந்து மதம் திருமணங்கள் சட்டம் 1955 என்பதன் படி "மணமகள்" என்பதில் திருநங்கைகளும் அடங்குவர் எனத் தெரிவித்தது. இதன் மூலம் ஆணுக்கும் திருநங்கைகளுக்கும் இடையில் திருமணத்தை பதிவு செய்ய அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.[10][11]

திருநங்கைகளின் உரிமைகள் தொகு

தமிழ்நாட்டில் திருநங்கை ஆண்கள் திருநர் என அழைக்கப்படுகின்றனர் திருநங்கை பெண்கள் திருநங்கை என அழைக்கப்படுகின்றனர். 1990களின் முற்பகுதியில் இவர்கள் அரவாணி எனும் சொல் கொண்டு அழைக்கப்பட்டனர். அரவாணி என்பது ஹிஜ்ரா என்பதன் மாற்றுச் சொல்லாகும். திருநங்கைகள் வேலைகள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் பெரும் பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் பிச்சை எடுத்தல் மற்றும் பால்வினைத் தொழில் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.

1994 இல், தலைமை தேர்தல் ஆணையரான டிஎன் சேஷன், இந்தியாவில் திருநங்கைகளுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கினார். மார்ச் 2004 இல், வழக்கறிஞர் ஜிஆர் சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி, தமிழகத்தில் திருநங்கைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை வேண்டும் எனக் கோரினார். இந்த வழக்கிற்கு பதிலளித்த, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) மாநிலத்தில் 11 திருநங்கைகள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய முன்வந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது. சமர்ப்பித்ததை பதிவு செய்த பிறகு, நீதிமன்றம் திருநங்கைகள் வாக்காளர்களாகப் பதிவுசெய்யும் உரிமையை ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்துமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.[12]

டிசம்பர் 2006 இல், திருநங்கைகளின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளுடன் அரசு ஓர் உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு திருநங்கைகளை நிராகரிப்பதில் இருந்து குடும்பங்களைத் தடுப்பதற்கும், அத்தகைய குழந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கும் ஆலோசனை வழங்கியது. அதன்பிறகு, செப்டம்பர் 2008 இல், அரசு திருநங்கைகளுக்கான நல வாரியத்தை அமைத்தது.[12]

திருநங்கைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்கும் முன்னோடி முயற்சியாக,திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான அரசு 2008 இல் ஒரு திருநங்கை நல வாரியத்தை நிறுவியது. சமூக நலத்துறை அமைச்சர் வாரியத்தின் தலைவராக பணியாற்றுகிறார். இந்த முயற்சி இந்தியாவிலேயே முதல் முயற்சியாகும். மாநில அரசு திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகளையும் [13] சிறப்பு அடையாள அட்டைகளையும் வழங்கத் தொடங்கியுள்ளது.[14]

சான்றுகள் தொகு

  1. "LGBT community in Tamil Nadu seeks state government's support". Indianexpress.com. 15 December 2013. பார்க்கப்பட்ட நாள் 18 April 2018.
  2. Hamid, Zubeda (3 February 2016). "LGBT community in city sees sign of hope". Thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 18 April 2018.
  3. "1st in India & Asia, and 2nd globally, Tamil Nadu bans sex-selective surgeries for infants". The Print. பார்க்கப்பட்ட நாள் 15 May 2020.
  4. "Tamil Nadu Becomes First State to Ban So‑Called Corrective Surgery on Intersex Babies". The Swaddle. பார்க்கப்பட்ட நாள் 15 May 2020.
  5. "Not my fault I was born gay: 19-year-old commits suicide over homophobia". India Today. 9 July 2019.
  6. "Resources and Information" (PDF). Goeiirj.com. Archived from the original (PDF) on 22 December 2017. பார்க்கப்பட்ட நாள் 18 April 2018.
  7. "Section 377 verdict: Here are the highlights". 6 September 2018. https://indianexpress.com/article/india/section-377-supreme-court-verdict-gay-lgbtq-5343225/. 
  8. "India court legalises gay sex in landmark ruling". BBC News. 6 September 2018.
  9. Shalini Lobo (21 May 2019). "In a first in Tamil Nadu, man-transwoman couple get married legally". India Today.
  10. ""Transwoman A 'Bride' Under Hindu Marriage Act": Madras HC; Also Bans Sex Re-Assignment Surgeries On Intersex Children [Read Judgment]". பார்க்கப்பட்ட நாள் 2019-04-24.
  11. ""Ban sex reassignment surgeries on intersex infants Madras High Court tells Tamil Nadu Govt" - The News Minute". பார்க்கப்பட்ட நாள் 2019-04-24.
  12. 12.0 12.1 "A Madurai lawyer's fight for rights of transgenders". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 15 May 2020.
  13. "Info Change India - Info Change India". infochangeindia.org. Archived from the original on 13 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 18 April 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. "Southern Indian State to Conduct First Ever Census of Transgenders". Medindia. பார்க்கப்பட்ட நாள் 18 April 2018.