தமிழ் முற்போக்குக் கூட்டணி
இலங்கையில் உள்ள அரசியல் கட்சி கூட்டணி
தமிழ் முற்போக்கு கூட்டணி (Tamil Progress Alliance, TPA) என்பது இலங்கையின் ஓர் அரசியல் கூட்டணி ஆகும். இலங்கையின் மத்திய, மேல், ஊவா, சபரகமுவா, வடமேல் மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பாக செயற்படுகிறது. இக்கூட்டணி 2015 சூன் 3 ஆம் நாள் கொழும்பு நகரில் ஆரம்பிக்கப்பட்டது. இக்கூட்டணியின் தலைவர் சனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆவார். அமைச்சர் பழனி திகாம்பரம், இராசாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் பிரதித் தலைவர்கள் ஆவர்.[1][2]
தமிழ் முற்போக்கு கூட்டணி Tamil Progress Alliance | |
---|---|
தலைவர் | மனோ கணேசன் |
இணைப் பிரதித் தலைவர்கள் | பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் |
பொதுச் செயலாளர் | அந்தனி லோரன்ஸ் |
தொடக்கம் | சூன் 3, 2015 |
தலைமையகம் | கொழும்பு |
நிறங்கள் | Yellow |
கூட்டணி உறுப்புக் கட்சிகள்தொகு
அரசியல் கோரிக்கைகள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "DPF, UPF, WNC form new political alliance". டெய்லி மிரர். 3 சூன் 2015. 4 சூன் 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 "மனோ கணேசன் தலைமையில் இன்று உதயமானது தமிழ் முற்போக்கு கூட்டணி!". தமிழ்வின். 3 சூன் 2015. 2015-07-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 சூன் 2015 அன்று பார்க்கப்பட்டது.