தாரக்நாத் தாசு

தாரக்நாத் தாசு (Taraknath Das) (1884 சூன் 15 - 1958 திசம்பர் 22) ஒரு இந்திய புரட்சிகரவாதியும், சர்வதேச அறிஞருமாவார். வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் ஒரு முன்னோடி குடியேறியவராக இருந்த இவர், லியோ டால்ஸ்டாயுடன் தனது திட்டங்களைப் பற்றி விவாதித்தார். அதே நேரத்தில் ஆசிய இந்திய குடியேறியவர்களை இந்திய சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவாக ஏற்பாடு செய்தார். இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியராகவும், பல பல்கலைக்கழகங்களில் வருகை தரும் ஆசிரியராகவும் இருந்தார்.

தாரக்நாத் தாசு
பிறப்பு(1884-06-15)15 சூன் 1884
காஞ்ச்ரபரா, 24 பர்கானா, வங்காளம், பிரித்தானிய இந்தியா
இறப்பு22 திசம்பர் 1958(1958-12-22) (அகவை 74)
நியூ யார்க் நகரம்
தேசியம்இந்தியன்
வாழ்க்கைத்
துணை
மேரி கீட்டிங் மோர்சு

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

மேற்கு வங்காளத்தின் 24 பர்கனா மாவட்டம் காஞ்ச்ரபராவுக்கு அருகிலுள்ள மஜுபாரா என்ற இடத்தில் இவர் பிறந்தார். ஒரு கீழ்-நடுத்தர குடும்பத்திலிருந்து வந்த இவரது தந்தை காளிமோகன் கொல்கத்தாவிலுள்ள உள்ள மத்திய தந்தி அலுவலகத்தில் எழுத்தராக இருந்தார். இவரது திறமையைக் கவனித்த இவரது தலைமை ஆசிரியர், தேசபக்தி என்ற கருப்பொருளில் ஒரு கட்டுரை போட்டியில் கலந்து கொள்ளும்படி இவரை ஊக்குவித்தார். பதினாறு வயது பள்ளி சிறுவனான இவரது கட்டுரையின் தரத்தால் ஈர்க்கப்பட்ட, நீதிபதிகளில் ஒருவரான, அனுசீலன் சமிதியின் நிறுவனர் வழக்குறைஞர் பி. மிட்டர், தனது கூட்டாளியான சதீஷ் சந்திர பாசுவிடம் இவரைப் பற்றிக் கூறினார். 1901 ஆம் ஆண்டில், இவர் கொல்கத்தாவுக்குச் சென்று, பல்கலைக்கழகப் படிப்புகளுக்காக நன்கு அறியப்பட்ட பொதுச் சபை நிறுவனத்தில் (இப்போது இசுகாட்டிஷ் தேவாலயக் கல்லூரி ) அனுமதிக்கப்பட்டார். இவரது ரகசிய தேசபக்தி நடவடிக்கையில், இவர் தனது மூத்த சகோதரி கிரிஜாவிடமிருந்து முழு ஆதரவையும் பெற்றார்.

பிற்கால வாழ்வு தொகு

1947 இல் இந்தியப் பிரிவினையிலிருந்து உணர்ச்சிவசப்பட்டவர்களில் இவரும் ஒருவராக இருந்தார். மேலும் தெற்காசியாவை தனது கடைசி நாள் வரை பிரிக்கும் செயல்முறையை கடுமையாக எதிர்த்தார். நாற்பத்தாறு ஆண்டுகள் நாடுகடத்தப்பட்ட பின்னர், 1952 ஆம் ஆண்டில் வாடுமுல் அறக்கட்டளையின் வருகை பேராசிரியராக தனது தாய்நாட்டை மீண்டும் பார்வையிட்டார். கொல்கத்தாவில் விவேகானந்தர் சங்கத்தை நிறுவினார். செப்டம்பர் 9, 1952 அன்று, பாகாஜதீனின் வீர தியாகத்தின் 37 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் பொதுக் கூட்டத்திற்கு இவர் தலைமை தாங்கினார், தனது வழிகாட்டியான ஜதிந்தா ஆதரித்த மதிப்புகளை புதுப்பிக்க இளைஞர்களை வலியுறுத்தினார். [1] இவர் திசம்பர் 22, 1958 அன்று 74 வயதில் அமெரிக்கா திரும்பியபோது இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. Anandabazar Patrika, Kolkata, 10 September 1952)

ஆதாரங்கள் தொகு

  • "Das, Taraknath (Dr.)" in Dictionary of National Biography, (ed.) S.P. Sen, 1972, Vol I, pp363–4
  • Political Trouble in India: A Confidential Report, by James Campbell Ker, 1917, reprinted 1973
  • Sadhak biplabi jatindranath, by Prithwindra Mukherjee, West Bengal State Book Board, 1990, pp441–469
  • San Francisco Trial Report, 75 Volumes; Record Groups 49, 60, 85 & 118 (US National Archives, Washington D.C. & Federal Archives, San Bruno)
  • M.N. Roy Library & Gadhar Collection (South/Southeast Library, University of California, Berkeley)
  • "Taraknath Das" by William A. Ellis, in Norwich University 1819–1911, Vol. III, 1911
  • "Deportation of Hindu Politics" by Sailendra Nath Ghose, in The Dial, 23 August 1919, pp145–7
  • "The Vermont Education of Taraknath Das: An Episode In British-American-Indian Relations" by Ronald Spector, in Vermont History, Vol.48, No.2, 1980 (illustrated), pp88–95
  • "Taraknath in Madras" by Akoor Anantachari, in Sunday Standard, Chennai, 31 May 1964
  • Taraknath Das: Life and Letters of a Revolutionary in Exile, by Tapan K. Mukherjee, National Council of Education, Kolkata, 1998, 304pp
  • Op. cit.: a review by Santosh Saha, in Journal of 3rd World Studies, Spring, 2000

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரக்நாத்_தாசு&oldid=3710885" இலிருந்து மீள்விக்கப்பட்டது