தீன் மூர்த்தி பவன்


தீன் மூர்த்தி பவன் (Teen Murti Bhavan - Teen Murti House), இந்தியாவின் முதல் பிரதம அமைச்சரான ஜவகர்லால் நேருவின் தங்குமிடமாகும். ஜவகர்லால் நேரு பிரதமராக 27 மே 1964-இல் இறக்கும் வரை, 16 ஆண்டுகள் தீன் மூர்த்தி பவனில் தங்கி பிரதமர் கடமைகளை ஆற்றினார்.

தீன் மூர்த்தி பவன்
இந்தியாவின் முதல் பிரதம அமைச்சர் ஜவகர்லால் நேருவின் தங்குமிடம்
Map
பொதுவான தகவல்கள்
இடம்தீன் மூர்த்தி ஹைபா சால
முகவரிகன்னாட்டு பிளேசு, புது தில்லி, இந்தியா
ஆள்கூற்று28°36′09″N 77°11′56″E / 28.602608°N 77.198774°E / 28.602608; 77.198774
நிறைவுற்றது1930
உரிமையாளர்இந்திய அரசு
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)இராபர்ட் தோர் ரஸ்சல்
நேரு கோளகம், தீன் மூர்த்தி பவன், புது தில்லி

வரலாறு தொகு

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் 1930-இல் பிரித்தானிய இந்தியாவின் தலைமைப்படைத்தலைவர் தங்குவதற்காக 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் இக்கட்டிடம் புது தில்லியின் கன்னாட்டு பிளேசு பகுதியில் கட்டப்பட்டது.[1]

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இக்கட்டிடம் ஜவகர்லால் நேருவின் தங்குமிடமாக விளங்கியது. 1964-இல் நேருவின் மறைவிற்குப்ப் பின், இக்கட்டிடம் நேரு அருங்காட்சியகம், கோளரங்கம் மற்றும் நூலகமாக மாற்றப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Teen Murti Bhavan
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீன்_மூர்த்தி_பவன்&oldid=3777316" இலிருந்து மீள்விக்கப்பட்டது