தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி

தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (NDPP) இந்தியாவின், நாகாலாந்து மாநிலத்தில் உள்ள ஒரு பிராந்திய அரசியல் கட்சி ஆகும். இக்கட்சியின் தலைவர் சிங்வாங் கோனியாக் என்பவர் ஆவார்.[1] இக்கட்சியின் சின்னம் பூகோளமாகும்.

தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி
Facta Non Verba
சுருக்கக்குறிNDPP
தலைவர்நைபியு ரியோ
நிறுவனர்சிங்வாங் கோனியாக்
மக்களவைத் தலைவர்டோகிகோ யேப்தோமி
தொடக்கம்அக்டோபர் 2017
முன்னர்ஜனநாயக முற்போக்கு கட்சி
தலைமையகம்எண்:155 (1), வார்டு எண்.4, சுமுக்கேதிமா, திமாப்பூர், நாகாலாந்து, இந்தியா - 797103
கொள்கைபிராந்தியத்துவம்
நிறங்கள்வெள்ளை, சிவப்பு, கருப்பு
இ.தே.ஆ நிலைமாநிலக் கட்சி
கூட்டணிவடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி (2018-முதல்)
தேசியக் கூட்டுநர்நைபியு ரியோ
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 545
(தற்போது 518 உறுப்பினர்கள்+ 1 மக்களவைத் தலைவர்)
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(நாகாலாந்து சட்டமன்றம்)
17 / 60
இணையதளம்
https://ndpp.co.in/
இந்தியா அரசியல்

இக்கட்சியானது நாகாலாந்து மக்கள் முன்னணியில் இருந்து பிரிந்து, நாகாலாந்து முதலமைச்சர் நைபியு ரியோ ஜனநாயக முற்போக்கு கட்சியை உருவாக்கினார்.[2][3] 2017 ஆம் ஆண்டு அக்டோபர் ஜனநாயக முற்போக்கு கட்சி பின், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் பாஜக உடன் கூட்டணி வைத்துக்கொண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது.[4] இக்கட்சியானது தற்போது பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது.[5] பின்னர் அதே மாதத்தில், நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சியின் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறி, இக்கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர்.[6]

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நாகாலாந்து சட்டமன்ற தேர்தலில் தேஜமுக, 2,53,090 வாக்குகளைப் பெற்று 18 இடங்களில் வென்றது. இது 25.20 % வாக்கு வங்கி ஆகும். தேஜமுக பாஜக உடன் சேர்ந்த ஆட்சி அமைத்தது. 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் நாள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் இறப்பால் 17 இடங்கள் தற்போது உள்ளது.[7] தற்போது இக்கட்சி வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு