நீடாமங்கலம் லெட்சுமி நாராயணபெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

நீடாமங்கலம் லெட்சுமி நாராயணபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு லெட்சுமி நாராயணபெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:தெற்குமடவிளாகம், நீடாமங்கலம், நீடாமங்கலம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மன்னார்குடி
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:ஸ்ரீ லெட்சுமிநாராயண பெருமாள்
சிறப்புத் திருவிழாக்கள்:அட்சயதிருதியை, வைகுண்ட ஏகாதசி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் ஸ்ரீ லெட்சுமிநாராயண பெருமாள் சன்னதியும், ஆண்டாள், செங்கமலதாயார், ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் அட்சயதிருதியை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.