பாண்டவர் பூமி (திரைப்படம்)
சேரன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
பாண்டவர் பூமி (Pandavar Bhoomi) 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதியில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] அருண் விஜய் நடித்த இப்படத்தை சேரன் இயக்கினார்.
பாண்டவர் பூமி | |
---|---|
![]() | |
இயக்கம் | சேரன் |
தயாரிப்பு | மீடியா ட்ரீம்ஸ் |
கதை | சேரன் |
இசை | பரத்வாஜ் |
நடிப்பு | அருண் விஜய் ஷமீதா ராஜ்கிரண் ரஞ்சித் விஜயகுமார் சார்லி |
வெளியீடு | செப்டம்பர் 21, 2001 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை
தொகுகதை
தொகுகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன
கிராமத்தில் தங்களது சொந்த வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள் ஒரு கூட்டுக் குடும்பமாய் வாழும் சகோதர சகோதரிகள். வீடு கட்ட அங்கே வரும் பொறியாளர் அருண் விஜய் வீட்டில் உள்ள இளம் பெண் ஷமிதா மீது காதல் கொள்கிறார். வீட்டில் உள்ளவர்களின் மர்மமான கடந்தகாலம் தெரியவந்த போது, பொறியாளர் அதிர்ச்சி அடைகிறார் . அந்த பாசமிகு குடும்பம் அவர்களின் காதலை ஏற்றுக் கொண்டு விட்டார்களா இல்லையா என்பதை கதையின் முடிவு சொல்கிறது.
விருதுகள்
தொகு- 2001 ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (இரண்டாம் பரிசு) பெற்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pandavar Bhoomi / பாண்டவர் பூமி". Screen 4 Screen. Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 29 June 2023.