பார்சி மக்கள்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

பார்சி (Parsi) அல்லது பார்சீ (Parsee) (ஒலிப்பு: /ˈpɑrsiː/) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள இரண்டு மிகப்பெரிய ஜோரோஸ்ட்ரிய (Zoroastrian) சமுதாயத்தினரைக் குறிப்பிடுவதாகும். இவர்களின் புனித நூல் அவெத்தா ஆகும். தொடக்கத்தில் பார்சி எனும் சொல்லைப் பண்டைய பெர்சியர்கள் தங்களைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டனர்.

பார்சி மக்கள்
மொத்த மக்கள்தொகை
(110,000[*])
மொழி(கள்)
பார்சி மொழி, ஆங்கிலம், மராத்தி, குஜராத்தி
சமயங்கள்
சரத்துஸ்திர சமயம்

மரபைப் பொறுத்தவரை கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் போது ஈரானில் முஸ்லீம்களால் ஏற்பட்ட தொல்லைகள் காரணமாக மேற்கு இந்தியாவிற்குக் குடிபெயர்ந்த ஈரானிய ஜோரோஸ்ட்ரியன்ஸின் குழுவே இன்றை பார்சியர்களின் வழித்தோன்றலாக உள்ளது.[1].[2][3][4] இப்பிரதேசத்தில் நீண்டகாலம் வாழ்ந்திருக்கும் பார்சிகளிடமிருந்து மிகவும் அண்மையில் இங்கு குடிபெயர்ந்த இரண்டு சிறிய இந்திய-ஜோரோஸ்ட்ரிய சமுதாயங்களை வழிநடத்தும் ஈரானியர்கள் வேறுபடுத்திக் காட்டப்படுகின்றனர்.

வரையறை மற்றும் அடையாளம் தொகு

17 ஆம் நூற்றாண்டு வரை இந்திய ஜோரோஸ்ட்ரிய உரைகளில் "பார்சி" என்ற சொல் சேர்க்கப்படவில்லை. அச்சமயம் வரையில் அதைப் போன்ற வார்த்தைகளுக்கு நிலையாக ஜர்தோஸ்தி (Zarthoshti), "ஜோரோஸ்ட்ரியன்" (Zoroastrian) அல்லது பெஹ்தின் (Behdin) என்ற இரண்டினுள் ஒன்று பயன்படுத்தப்பட்டது. இவற்றிற்கு முறையே "நல்ல இயல்பு [உடைய]" அல்லது "நல்ல பிரதேசம் [உடைய]" என்பது பொருளாகும். 12 ஆம் நூற்றாண்டின் பதினாறு சுலோகங்களில் (Sixteen Shlokas) சமஸ்கிருத வார்த்தையில் பாரிசியர்களைப் பற்றிய வாக்கியங்களும் பின்னர் இந்துக்கள் மூலமாக தெளிவாக எழுதப்பட்டதே (பார்சி புராணக்கதையான cf. (Paymaster 1954, ப. 8) இல் ஜோரோஸ்ட்ரிய அர்ச்சர்கர்களுக்கு தவறான உரையைக் கற்பிக்கிறது) பண்டைய கால இந்திய ஜோரோஸ்ட்ரியர்களுக்கான அடையாளச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

1322 ஆம் ஆண்டிலிருந்தே ஐரோப்பிய மொழியில் பார்சிகளுக்கு முதல் மேற்கோள் உள்ளது. தனா (Thana) மற்றும் புரோச் (Broach) போன்ற இடங்களில் அவர்களது உளதாம்தன்மையைப் பற்றி பிரெஞ்சுத் துறவி ஜோர்டனாஸ் (Jordanus) சுருக்கமாக அதில் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து முதலில் பிரெஞ்சு மற்றும் போர்த்துகீசியம் அதன் பின்னர் ஆங்கிலம் என பல ஐரோப்பிய பயணிகளின் செய்திப் பத்திரிகைகளில் இந்தச் சொல் இடம்பெற்றது. ஐரோப்பியப் பதிப்புகளில் பயன்படுத்தப்பட்ட அனைத்தும் உள்ளூர் மொழிச் சொல்லாகத் தெளிவாக இருந்தன. எடுத்துக்காட்டாக 1563 ஆம் ஆண்டு வாழ்ந்த போர்த்துகீசிய மருத்துவரான கார்சியா டி'ஓர்டா "கம்பாய் (Cambai) பேரரசில் [...] வாழ்ந்த வணிகர்கள் [...] எஸ்பார்சிஸ் (Esparcis) என அழைக்கப்பட்டதைக் கணித்தார். போர்த்துக்கீசியர்களான நாங்கள் அவர்களை யூதர்கள் என அழைத்தோம், ஆனால் அவர்கள் யூதர்கள் அல்ல. அவர்கள் ஜெண்டியோஸ் (Gentios)" ஆவர். 20வது நூற்றாண்டின் முற்பகுதியில் சட்டம் இயற்றிய (தானாக-உணர்தல்களை கீழே காண்க) நீதிபதிகளான டேவர் மற்றும் பீமன் ஆகியோர் (1909:540) ஜோரோஸ்ட்ரியர்களைக் குறிப்பிடுவதற்கு ஈரானில் 'பார்சி' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது என வலியுறுத்தினர். மேலும் அதே வழியில் இந்தியத் துணைக்கண்டத்தில் வசிக்கும் எவரையும் குறிப்பிட "இந்து" என்ற சொல்லை ஈரானியர்கள் பயன்படுத்தியதாகக் குறிப்பிடுகிறது. ஈரான் பேரரசில் (Greater Iran) வாழும் எவரையும் குறிப்பிடுவதற்கு இந்தியர்கள் 'பார்சி' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். உண்மையில் அவர்கள் பெர்சிய இனத்தை சேர்தவர்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் இவ்வாறு அழைத்துள்ளனர் எனவும் அந்நூல் கூறுகிறது. எந்த வகையிலும் 'பார்சி' என்ற சொல்லானது "அவர்கள் ஈரானிய அல்லது 'பெர்சிய' மூலத்தை சேர்ந்தவர்களா என்பதைக் குறிப்பிடுவதற்கு அவசியம் இல்லாமல் இன அடையாளத்தில் பல்வேறு தன்மைகளை தெளிவாய் காட்டும் சுட்டிக்காட்டியாக இருந்துள்ளது"(Stausberg 2002, ப. I. 373). மேலும் (இனத்தை நிர்ணயிப்பதற்கு ஒரே காரணியாக பாரம்பரியம் இருந்தால்) பார்சியர்கள் குயிஸ்ஸா (Qissa) ஒவ்வொன்றிலும் பார்த்தியர்களாக இனம் காணப்படுவதில்லை. (Boyce 2002, ப. 105) 'பார்சீசம்' (Parseeism) (அல்லது 'பார்சைசம்' (Parsiism)) என்ற சொல்லானது 1750களில் வாழ்ந்த ஆன்குயிடில்-டப்பெர்ரானைக் (Anquetil-Duperron) குறிக்கிறது. 'ஜோரோஸ்ட்ரியசம்' என்ற சொல்லானது புதிதாகப் புனையப்பட்ட போது பார்சியர்கள் மற்றும் ஜோரோஸ்ட்ரியசமின் முதல் விளக்க அறிக்கை உருவாக்கப்பட்டது. பார்சியர்கள் அப்பிரதேசத்தில் எஞ்சியிருக்கும் வழிவந்தோர்களாக மட்டுமே தவறுதலாக ஊகிக்கப்பட்டனர்.

இனஞ்சார்ந்த சமுதாயமாக தொகு

 
திருமண உருவப்படம், 1948

துவக்கத்தில் பெர்சியாவிலிருந்து பார்சி இனத்தவர் வந்திருந்தாலும் பெரும்பாலான இந்திய பார்சியர்கள் பெர்சியர்களிடம் அவர்களுக்கு இருந்த சமுதாய அல்லது குடும்ப இணைப்புகளை இழந்து விட்டனர். பலர் மொழிகளை அல்லது அவர்களது வரலற்றைப் பகிர்ந்து கொள்வது இல்லை. இந்தியாவிற்கு முதன் முதலில் ஜோரோஸ்ட்ரேயர்கள் குடிபெயர்ந்ததிலிருந்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக பார்சி இனத்தவர்கள் இந்திய சமுதாயத்தினுள் முக்கிய அங்கம் வகிக்கத் தொடங்கினர். அதே சமயத்தில் அவர்களது மாறுபட்ட மரபுகள் மற்றும் பாரம்பரியங்களையும் (அவர்களது இனஞ்சார்ந்த அடையாளமாக) தொடர்ந்து பாதுகாத்து வந்தனர். பார்சி இனத்தவர்கள் தனித்து நிற்காமல் அவர்களுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டது: தேசிய இணைப்பு, மொழி மற்றும் வரலாறு போன்றவைகளில் அவர்கள் இந்தியர்களாக உள்ளனர். ஆனால் இரத்த உறவு அல்லது கலாச்சாரம், நடத்தை மற்றும் சமயம்சார்ந்த செயல்பாடுகளில் அவர்கள் இந்தியராக இல்லை (அவர்களது மொத்த மக்கள் தொகை 0.006% மட்டுமே உள்ளது). அவர்களது மூலத்தின் தூய்மையை வரையறுப்பதற்கு செய்யபப்ட்ட இனவழி டி.என்.ஏ (DNA) சோதனைகளில் அவர்கள் கலவையான முடிவுகளைப் பெற்றுள்ளனர். ஆனால் உள்நாட்டு மக்களைக் கலப்புத் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்த்து பெர்சியர்கள் தங்களது மூலங்களைப் பாதுகாத்து வருகின்றனர் என்று பார்சி கருத்து முடிவு (Nanavutty 1970, ப. 13) பற்றிய ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. 2002 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள பார்சிகளின் Y-நிறமி (patrilineal) டி.என்.ஏ.வில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பார்சிகள் மரபு வழியில் அவர்களுக்கு அருகில் வசிப்பவர்களைக் காட்டிலும் ஈரானியர்களுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என வரையறுக்கப்பட்டது (Qamar et al. 2002, p. 1119). எனினும் 2004 ஆம் ஆண்டு சோதனையில் பார்சி மணியிழையங்கள் டி.என்.ஏ (matrilineal) ஆனது ஈரானியர்கள் மற்றும் குஜராத்திகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. அதில் பார்சிகள் ஈரானியர்களைக் காட்டிலும் குஜராத்திகளிடம் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளனர் என்று வரையறுக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு சோதனையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு 2004 ஆம் ஆண்டு சோதனையைப் பற்றி அறிஞர்கள் கூறுகையில் "இன்றைய நாளில் பார்சி மக்கள் தொகையில் மூதாதையர்கள் ஆண்-மத்தியஸ்தமாய் இருந்து குடிபெயர்ந்துள்ளனர். அவர்கள் உள்ளூர் பெண்களுடன் கலந்து செயல்பட்டதால் [...] தங்களது தொடக்கமான ஈரானியர்களின் mtDNA வை முடிவாய் இழந்துள்ளனர்" என்றனர் (Quintana-Murci 2004, ப. 840).

சுய-உணர்தல் தொகு

 
பார்சி நவ்ஜோட் சடங்கு (ஜோரோஸ்ட்ரிய நம்பிக்கையினுள் ஏற்றுக்கொள்வதற்கான சடங்கு)

யாரெல்லாம் பார்சியர்கள் (மற்றும் பார்சிகள் அல்லாதவர்கள்) என்பதை வரையறுப்பது என்பது இந்தியாவில் ஜோரோஸ்ட்ரிய சமுதாயத்தில் ஒரு தனிச்சிறப்புடைய வாதமாக உள்ளது. பொதுவாக ஒரு நபர் பின்வரும் நிலைகளிலிருந்தால் பார்சி இனத்தவராக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்: a) உண்மையான பெர்சிய அகதிகளிடம் நேரடியான பாரம்பரியத்தைக் கொண்டிருக்க வேண்டும்; மற்றும் b) ஜோரோஸ்ட்ரிய சமுதாயத்தினுள் ஒழுங்குமுறையுடன் ஈடுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும். இந்த முறையில் பார்சிகள் ஆதிவாசி-சமயப் பொறுப்பை ஏற்கின்றனர்.

இச்சமுதாயத்தின் சில உறுப்பினர்கள் கூடுதலான வாதத்தையும் கொண்டுள்ளனர். அதாவது ஒரு குழந்தை பார்சி தந்தையை கண்டிப்பாகக் கொண்டிருப்பது நம்பிக்கையின் அறிமுகத்திற்கு ஏற்றவர்கள் ஆகிறது. ஆனால் இந்த ஆதாரமானது பாலின சமத்துவத்தின் ஜோரோஸ்ட்ரிய ஒழுக்க நெறியின் மீறுதலைப் பெருமளவில் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. மேலும் பார்சிகளின் பழைய சட்ட வரையறையில் இருந்து சிதறியதாகவும் கருதப்படுகிறது.

பார்சிகளின் சட்ட வரையறையானது பெரும்பாலும் 1909 ஆம் ஆண்டு அதிகாரத்தையே (இன்றுவரை செல்லாத நிலையில் உள்ளது) குறிக்கிறது. அதாவது ஒரு நபர் ஜோரோஸ்ட்ரிய நம்பிக்கையினுள் மாறுவதால் மட்டும் பார்சி இனத்தவராக மாறிவிட முடியாது (இந்த நிலை கேள்வியில் உள்ளது). "பார்சி இனத்தவர் பின்வரும் நிலைகளைப் பெற்றிருக்க வேண்டும்: a) உண்மையான பெர்சிய குடியானவர்களிடம் இருந்து மரபைப் பார்சிகள் பெற்றிருக்க வேண்டும், ஜோரோஸ்ட்ரிய பெற்றோர்கள் இருவருக்கும் பிறந்திருக்க வேண்டும் மற்றும் ஜோரோஸ்ட்ரிய சமயத்தை உரிமையாகப் பெற்றிருக்க வேண்டும்; b) பெர்சியாவில் உள்ள ஈரானியர்கள் ஜோரோஸ்ட்ரிய சமயத்தை உரிமையாகப் பெற்றுள்ளனர்; c) வேற்றினத் தாய்க்கும் பார்சி தந்தைக்கும் பிறக்கும் குழந்தை சரியான முறையில் சமயத்தினுள் ஈடுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்".(Sir Dinsha Manekji Petit v. Sir Jamsetji Jijibhai 1909)

இந்த வரையறை பல்வேறு சமயங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைகள் மூன்றாவது உட்பிரிவில் தந்தைவழி கட்டுபாடுகளை வெளிப்படுத்துவதில் வெற்றிடத்தையே கொண்டுள்ளன. இரண்டாவது உட்பிரிவும் 1948 ஆம் ஆண்டு குழப்பத்திற்கு உட்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. (Sarwar Merwan Yezdiar v. Merwan Rashid Yezdiar 1948) 1950 ஆம் ஆண்டு முறையீட்டின் கீழ் 1948 அதிகாரமானது 1909 ஆம் ஆண்டு வரையறையை முழுவதுமாகப் பின்பற்றுகிறது தீர்ப்பின் புறவுரை நிகர்நிலையுடன் உள்ளது. அதாவது மாற்றுவழித் கருத்துக்கள் மற்றும் சட்டப்பூர்வமற்ற பிணைவுகள் (1966 ஆம் ஆண்டில் மீண்டும் உறுதி செய்யப்பட்டது) ஆகும். (Merwan Rashid Yezdiar v. Sarwar Merwan Yezdiar 1950;Jamshed Irani v. Banu Irani 1966) எனினும் நன்றாக-வாசிக்கும் நடத்தர பார்சிகள் இருந்தும் கூட 1909 ஆம் ஆண்டு அதிகாரமானது சட்டப்பூர்வமாய் பிணைக்கப்பட்டு தொடர்ந்து நிலைத்திருக்கிறது என்ற கருத்தும் உள்ளது.[சான்று தேவை] பார்சி ஜோரோஸ்ட்ரிய சமுதாயத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வெளியாகும் பார்சியானா வின் பத்திரிகை தலையங்கத்தில் பிப்ரவரி 21, 2006 அன்று பார்சி தாயாருக்கும் வேற்றின தந்தைக்கும் பிறந்த பல்வேறு வயது வந்த குழந்தைகள் பார்சி இனத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றனர் என்றும் "அக்குழந்தைகள் தனது தாயாரின் மொழியையும் சமயத்தையும் தழுவி வாழுகின்றனர்" என்றும் ஆசிரியர் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர்களது அதிகாரத்தை ஆசிரியர் நினைவுகூர்ந்து குறிப்பிட்டிருந்தாலும் "அவர்கள் சட்டப்பூர்வமாயும் சமயம் சார்ந்தும் முழுமையான ஜோரோஸ்ட்ரியர்கள் என்றும் அவர்கள் சட்டத்தின் கண்களில் பார்சி ஜோரோஸ்ட்ரியர்களாக கருதப்படுவதில்லை என்றும் தெரிவித்தார். ஆகையால் "சட்டப்பூர்வமாய் அவர்கள் பார்சி ஜோரோஸ்ட்ரியர்களுக்காக குறிக்கப்பட்டிருக்கும் [தீ கோவில்களில்] இடம்பெற மாட்டார்கள் எனவும்" தெரிவித்தார் (Parsiana 2006).

ஒரு மக்கள் தொகையியல் புள்ளி விபரம் தொகு

தற்போதைய மக்கள் தொகை தொகு

மரபுவழி மக்கள் தொகையில் பார்சியர்கள் உலகளவில் சுமார் 100,000 பேர் உள்ளனர். எனினும் தனிப்பட்ட கணக்கெடுப்பில் இது குறிப்பிடத்தக்க அளவில் மாறுபடுகிறது; [5] "100,000 ஐக் காட்டிலும் குறைவான மக்கள் தொகை" என்றும் [6] "தோராயமாக 110,000" பேர் என்றும் [7] 110,000 ± 10% என்றும் பார்சிகள் மதிப்பிடப்படுகின்றனர். இதன் முதல் இரண்டு முடிவுகள் 1980களின் தரவை சார்ந்தே உள்ளது. குறிப்பாக 1981 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தியக் கணக்கெடுப்பில் நாட்டில் 71,630 பார்சிகள் இருப்பதாகத் தெரிய வந்தது. மேலும் புலம் பெயர்ந்த சமூகமான பார்சிகளின் எண்ணிக்கையை ஆரம்பத்தில் ஜான் ஹின்னெல்ஸ் மதிப்பிட்டிருந்தார். பின்னர் வந்த முடிவுகளானது புலம் பெயர்ந்த சமூகமான பார்சிகளின் திருந்தப்பட்ட அறிக்கையை சார்ந்து இருந்தது. மேலும் 2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தியக் கணக்கெடுப்பில் நாட்டில் 69,601 பார்சியர்கள் இருப்பதும் மும்பை (முன்பு பம்பாய் என இருந்தது) நகரத்தை சுற்றி அவர்களது செறிவு உள்ளது எனவும் தெரியவந்தது.

இந்தியாவைத் தவிர இதர நாடுகளில் பார்சியர்களின் மக்கள் தொகை பின்வரும் எண்ணிக்கையில் (உள்நாடு பார்சி/ஜோரோஸ்ட்டிரிய அமைப்புகள் மூலமாக) கணக்கிடப்பட்டுள்ளன : "பிரிட்டன் 5,000; அமெரிக்கா 6,500; கனடா 4,500; ஆஸ்திரேலியா 300; பாகிஸ்தான் 3,000; ஹாங்காங் 150; கென்யா 80". ([8] இல் ஹின்னெல்ஸ்). பாகிஸ்தான் தவிர பிற பிரதேசங்களின் பகுதிகளில் பார்சிகள் மரபுவழியில் குடியேறி உள்ளனர். இந்தப் பகுதியில் உள்ள (முதல்/இரண்டாவது தலைமுறை) பார்சியர்கள் புலம் பெயர்ந்தவர்களாக எண்ணப்படுகின்றனர்.

மக்கட்தொகைப் போக்குகள் தொகு

பல ஆண்டுகளாக ஏராளமான பார்சி இனத்தவர்கள் நிலையாக வாழ்கின்றனர் என இந்தியக் கணக்கெடுப்புத் தரவு கூறுகிறது. 1940–41 ஆம் ஆண்டுகளில் 114,890 மக்கள் இருந்ததே மிகவும் அதிகமான கணக்கெடுப்பாக உள்ளது. இந்தக் கணக்கெடுப்பு இன்றைய இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளில் ஆங்கிலேயர் ஆட்சிக்கால மக்கள்தொகையையும் உள்ளடக்கியிருந்தது. சுதந்திரத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட கணக்கெடுப்புத் தரவு இந்திய மக்கள் தொகையை (1951: 111,791) மட்டுமே கொண்டிருந்தது. பின்னர் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் தோராயமாக 9% மக்கள்தொகை குறைவதாகக் கணக்கெடுப்பு தெரிவித்தது.

சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தைப் பொறுத்தவரை இந்தச் "சமுதாயத்தின் மக்கள்தொகை நிலையாகக் குறைவதற்கு பல்வேறு காரணங்களே பொறுப்பாகும்". இதற்கு குழந்தையின்மையும் புலம் பெயர்தலுமே முக்கியக் காரணங்களாக உள்ளன (Roy & Unisa 2004, ப. 8, 21). 2020 ஆண்டின் ஒரு மக்கள் தொகையியல் புள்ளி விபரப் போக்குகள் செயல்திட்டத்தில் பார்சியர்களின் எண்ணிக்கை 23,000 (2001 ஆம் ஆண்டில் இந்திய மக்கள்தொகையில் 0.0002% ஐக் காட்டிலும் குறைவான எண்ணிக்கை) ஆக மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்போது பார்சியர்கள் ஒரு சமுதாயத்தினர் என்பது அழைக்கப்படுவது நிறுத்தப்பட்டு 'இனம்' என முத்திரையிடப்படுவர்(Taraporevala 2000, ப. 9).

ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தொகை குறைவதற்கு புலம் பெயர்தலும் காரணமாக உள்ளது (Roy & Unisa 2004, ப. 21). இறப்பு சதவீதத்தை விடப் பிறப்பு சதவீதம் குறைவாக இருப்பதும் முக்கிய காரணமாக உள்ளது: 2001 ஆம் ஆண்டிலிருந்து 60 வயதைக் கடந்த பார்சியர்கள் சமுதாயத்தில் 31% பேர் இருந்தனர். இவ்வயதினர் அமைப்பின் தேசிய சராசரி 7% ஆக உள்ளது. பார்சி சமுதாயத்தில் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 4.7% மட்டுமே ஆகும். இச்சமுதாயத்தில் ஒவ்வொரு 1000 நபர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் 7 குழந்தைகள் பிறக்கின்றனர் (Roy & Unisa 2004, ப. 14).

இதர மக்கள் தொகையியல் புள்ளி விபரம் தொகு

2001 ஆம் ஆண்டிலிருந்து பார்சியர்களின் பாலின விகிதம் வழக்கத்திற்கும் மாறாக உள்ளது. அதாவது இடைநிலை வயதுடையோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது காரணமாக (வயதான ஆண்களைக் காட்டிலும் வயதான பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது) 1050 பெண்களுக்கு 1000 ஆண்கள் என்ற விகிதத்திலேயே பாலின விகிதம் உள்ளது. ஆனால் தேசிய சராசரி 933 பெண்களுக்கு 1000 ஆண்கள் ஆகும்.

பார்சியர்கள் உயர்ந்த எழுத்தறிவு விகிதத்தை கொண்டுள்ளனர்: 2001 ஆம் ஆண்டிலிருந்து எழுத்தறிவு விகிதம் 97.9% ஆக இருந்தது. அனைத்து இந்திய சமுதாயங்களிலும் இது மிகவும் உயர்வான எண்ணிக்கையாகும் (தேசிய சராசரி 64.8% மட்டுமே ஆகும்). பார்சியர்களில் 96.1% பேர் நகர்சார்ந்த பகுதிகளில் வசித்து வருகின்றனர் (தேசிய சராசரி 27.8% ஆகும்).

பார்சியர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள பம்பாயின் பெரும்பகுதிகளில் தோராயமாக 10% பார்சி பெண்களும் 20% சதவீத பார்சி ஆண்களும் திருமணம் செய்துகொள்வதில்லை (Roy & Unisa 2004, ப. 18, 19).

வரலாறு தொகு

குஜராத்திற்கு வருகை தொகு

இந்தியாவில் ஜோரோஸ்ட்ரிய அகதிகளின் ஆரம்ப ஆண்டுகள் தொடர்புடைய எஞ்சியிருக்கும் ஒரே கதையான ஆனால் தற்காலிகமாக அவர்கள் வந்த நாளாகக் கருதப்படும் நாளுக்கு கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட குவிசா-ஐ சஞ்சன் என்ற "சஞ்சனின் கதை"யைப் பொறுத்தவரை குடிபுகுந்தவர்களில் ஒரு குழுவினர் (முதன் முதலில் குடியேறியர்வர்கள் என இன்று ஊகிக்கப்படுபவர்கள்) (பெரிய அளவுடைய) கோர்சானிலிருந்து வந்திருக்கலாம் என ஊகிக்கப்பட்டிருந்தது(Hodivala 1920, ப. 88). மத்திய ஆசியாவில் இந்த நிலப்பரப்பு வடகிழக்கு ஈரானின் பகுதி (கோர்சன் அதிகார எல்லை அமைந்திருந்த இடம்), வடக்கு ஆப்கானிஸ்தானின் பகுதி மற்றும் மூன்று மத்திய ஆசிய குடியரசுகளான தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெஸ்கிஸ்தானின் பகுதிகளிலிருந்தது. அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த ஜாதி ரானாவின் அனுமதியுடன் குடியேறியவர்கள் தங்க வைக்கப்படனர். ஆனால் அதிலிருந்து அவர்களது கைகள் உயராமல் தடுப்பதற்கு அங்கு பேசப்படும் உள்ளூர் மொழியைப் (குஜராத்தி) பயிலவும் பெண்கள் உள்ளூர் ஆடைகளை (சேலை ) உடுத்தவும் அவர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது (Hodivala 1920). அகதிகள் அந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு அவர்களது மூலத்தைக் கொண்ட நரத்திற்கு பிறகு சஞ்சனின் குடியேற்றத்தையும் நிறுவினர் (சஞ்சன் இன்று துர்க்மெனிஸ்தானாக இருக்கும் மெர்வுக்கு அருகில் உள்ளது).(Hodivala 1920, ப. 88) அகதிகளிடம் நீங்கள் எவ்வாறு இப்பகுதியில் குடியேறினர் என வினவியதற்கு "பாலில் சக்கரை கரைவது போல நாங்கள் உங்களது கலாச்சாரத்துடன் கலந்து விட்டோம்" என பதிலளித்தனர். முதல் குழுவைப் பின்பற்றி அவர்கள் குடியேறிய ஐந்தாண்டுகளில் வந்த இரண்டாவது குழுவினரும் கிரேட்டர் கோர்சனிலிருந்து வந்தவர்கள் ஆவர். ஆனால் இச்சமயம் அவர்களிடம் சமயம் சார்ந்த செயல்பாடுகளும் (அலாட் (alat)) நிறைவேற்றப்பட்டன. இந்த கோர்சானி கள் அல்லது கோஹிஸ்தானி களுக்கு கூடுதலாக - மலை மக்கள் என இரண்டு ஆரம்ப குழுக்களும் துவக்கத்தில் அழைக்கப்பட்டனர் (Vimadalal 1979, ப. 2)[சான்று தேவை] - மற்றவர்களில் குறைந்தது ஒரு குழுவினர் சாரியில் ((இன்று ஈரானில் உள்ள மஜந்தரன் (Mazandaran))) இருந்து தரைவழி வந்தவர்கள் ஆவர். (Paymaster 1954)

சஞ்சன் குழுவினர் முதல் நிரந்தரமான குடியேற்றவாதிகளாக நம்பப்பட்டாலும் அவர்கள் வருகை தந்த துல்லியமான தேதி அனுமான விசயமாகவே உள்ளது. அனைத்து மதிப்பீடுகளும் சில முடிந்த காலங்களைக் குறித்த தெளிவற்ற அல்லது நேர்மாறாமன விசயங்களுடன் இருக்கும் குவிசா வை சார்ந்தே உள்ளன. அவர்களது ஆண்டு வருகை 936 AD, 765 AD மற்றும் 716 AD காலங்களில் இருந்திருக்கலாம் என முன்மொழியப்பட்டது. ஆனால் "பார்சியர்கள் பலருள் [...] ஆர்வமிக்க சண்டையின்" காரணமாக இந்த முன்மொழிதலுக்கு மறுப்பும் தெரிவிக்கப்பட்டது (Taraporevala 2000). 18 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பார்சி நூல்களில் அந்தத் தேதிகள் குறிப்பிடப்பவில்லை என்றாலும் அவர்கள் வருகை தந்த எந்த தேதியும் ஊகத்திற்கு இடமளிக்கிறது. இந்த விசயத்தில் குவிசா வின் முக்கியத்துவமானது ஆதிக்கமுடைய கலாச்சாரத்தில் அவர்களது உறவு - எந்த வழியில் அவர்களது பார்வை இருந்தது போன்ற பார்சியர்கள் அதில் சித்தரிக்கப்பட்டுள்ளதைக் காட்டிலும் அதன் மறு கட்டமைப்புக்கு அதிகமாக நிலைத்திருக்கவில்லை. அதே போன்று பார்சியர்களின் அடையாளத்தை வடிவமைப்பதில் நூல்கள் இன்றியமையாத பங்கைக் கொண்டிருந்தன. ஆனால் "வாய்மொழியான பரப்புதல் சார்ந்த வரலாறானது கட்டுக்கதையைக் காட்டிலும் அதிகப்படியாக இருப்பதில்லை. பார்சியர்களின் வரலாற்று வரைவுக்கான செய்தி தெரிவிக்கும் ஆவணமாக இன்றும் சந்தேகமில்லாமல் எஞ்சியிருக்கிறது என்ற முடிவுக்கும் ஒருவர் வந்திருக்கலாம்". (Kulke 1978, ப. 25)

சஞ்சன் ஜோரோஸ்ட்ரியன்கள் கண்டிப்பாக துணைக்கண்டத்திற்கு வந்த முதல் ஜோரோஸ்ட்ரியர்கள் அல்ல. சாசினிட் (Sassanid) (226-651 AD) பேரரசில் கிழக்கு திசையிலிருந்த பிரதேசங்களில் சிந்து மற்றும் பலோசிஸ்தான் ஆகியவற்றில் இராணுவத்தினர் புறக்காவல் படையை நடத்தி வந்தனர். இந்த பிரதேசங்கள் இழக்கப்பட்டாலும் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு வர்த்தக இணைப்புகளாக செயல்படும் முக்கியப் பங்கை ஈரானியர்கள் தொடர்ந்து மேற்கொண்டனர். பெருங்கடலுக்கு குறுக்கே நெடுந்தூரக் கப்பல் பயணம் பிராமிணர்களுக்கு நம்பிக்கை இழக்கும் விசயமாக இருந்தது. இது இந்துக்களுக்கு பின்னர் தூய்மையைக் கெடுக்கும் விசயமாகக் கருதப்பட்டது. அதனால் குஜராத்திலும் ஈரானியர்கள் வர்த்தம மையங்களை நிறுவுவதற்கு காரணமாக அமைந்தது. அல்-இந்து மற்றும் அல்-சிந்துவில் தீ கோவில்களுடன் ஜோரோஸ்ட்ரியர்களைப் பற்றி சுருக்கமாக 9வது நூற்றாண்டு அரேபிய வரலாற்று ஆசிரியர் அல்-மசூதி தெரிவித்துள்ளார். (Stausberg 2002, ப. I.374) மேலும் ஈரானியர்களுக்காக குஜராத்தில் உள்ள துறைமுகங்கள் கடல்சார்ந்த வழிகளில் அமைந்திருந்தன. இவை தரைமார்க்கமான பட்டு சாலைக்கு நிரப்பியாகவும் இரண்டு பிரதேசங்களுக்கு இடையில் விரிவான வர்த்தத் தொடர்புகள் ஏற்படுவதற்கும் காரணமாக இருந்தன. ஈரானியர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையேயான தொடர்பு ஏற்கனவே பொதுவான காலத்திற்கு முன்பே நிறுவப்பட்டிருந்தது. மேலும் புராணங்களிலும், மஹாபாரதத்திலும் இந்தஸ் நதிக்கு மேற்கே உள்ள மக்களைக் குறிப்பிடுவதற்கு பாரசீகர்கள் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. (Maneck 1997, ப. 15)

முஸ்லிம் ஆதிக்கத்தின் கொடுங்கோள் ஆட்சியிலிருந்து தப்பித்து அவர்களது பழமையான நம்பிக்கையைக் காப்பதற்கு இந்தியாவுக்கு குடியேறிய "பார்சி இனத்தவர்களின் மூதாதையர்களைப் பற்றிய கட்டுக்கதைகள்'" சித்தரிக்கப்பட்டன ((Maneck 1997, ப. 15); cf. (Paymaster 1954, ப. 2-3)) எனினும் ஈரானின் அரேபிய வெற்றியைத் தொடர்ந்து பார்சி இனத்தவர்களின் குடியேற்றங்கள் கண்டிப்பாக இந்திய துணைக்கண்டத்தின் மேற்கு கடற்கரைப் பகுதியில் நடந்தேறுகையில் இந்த குடியேற்றங்கள் ஜோரோஸ்ட்ரியர்களுக்கு எதிரான சமயம் சார்ந்த தொல்லைகளுக்கு முடிவாக அமைந்தன என்பதை உறுதியாகக் கூற முடியாது. "மரபுவழி" 8வது நூற்றாண்டு காலம் (குவிசா விலிருந்து செய்திக் குறிப்புகளாக) சரியென ஏற்றுக்கொள்ளப்பட்டால் "இந்த குடியேற்றங்கள் ஜோரோஸ்ட்ரியசம் ஈரானில் இன்னும் தலைமை வகிக்கும் சமயமாக இருந்தது [மற்றும்] குடியேறுவதற்கு ஆரம்ப முடிவுகள் பொருளாதார காரணிகள் முன்பே ஆதிக்கம் செலுத்தின" என்பவை கண்டிப்பாக ஊகிக்கப்பட்டிருக்க வேண்டும். (Maneck 1997, ப. 15) முன்பு பட்டு சாலை வர்த்தகத்தை நம்பி இருந்து பின்பு வட-கிழக்குப் (உதாரணமாக மத்திய ஆசியா) பகுதியிலிருந்து முதன் முதலில் வந்த பார்சியர்களை குவிசா குறிப்பிட்டிருப்பதாக இந்த சூழ்நிலை குறிப்பாக விளக்கப்பட்டிருந்தது (Stausberg 2002, ப. I.373). என்றாலும் 17வது நூற்றாண்டில் ஆங்கிலேய கிழக்கு இந்திய நிறுவனத்தின் மத குருவாக இருந்த ஹெண்ரி லார்டு பார்சி இனத்தவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்ததை "மனச்சான்றின் விடுதலை" எனக்குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதே சமயம் "வணிகம் மற்றும் விற்பனைப் பொருள்களில் இந்தியக் கடற்கரைகளில் எல்லை வர்த்தகர்களாகவும்" அவர்கள் வருகை தந்தனர்" எனக் குறிப்பிட்டுள்ளார் முஸ்லிகள் ஆதிக்கம் செலுத்திய கோட்டைகளிலிருந்து வர்த்தகம் செய்த போது அரேபியர்கள் முஸ்லிம்கள் அல்லாத உயர் இனத்தவர்களை சமயம் சார்ந்த தொல்லைகளை அளித்தது காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த ஒரு காரணம் மற்றுமே குடியேற்றத்திற்கு காரணம் என்பது விரும்பத்தகாத வகையில் உள்ளது. இத்தொல்லைகளின் காரணமாக இந்த புலம் பெயர்ந்த குடியேற்றமானது பார்சி இனத்தவர்கள் தாங்களே ஊக்கப்படுத்தியது வினாவிற்குரியதாக உள்ளது (Nariman 1933, ப. 277)[சான்று தேவை]. வர்த்தகத்திற்கு புதிய இடங்களை திறப்பது தேவையான இடங்கள் தேடியது மற்றூம் ஜோரோஸ்ட்ரிய சமுதாயத்தை விரிவுபடுத்த விரும்பியது போன்ற இரண்டு காரணிகளும் முஸ்லிம்களின் தொல்லைகளிலிருந்து அவர்களுக்கு விடுதலை அளித்தது - இதன் காரணமாக அவர்கள் குஜராத்தில் குடியேறுவதற்கு முடிவெடுத்தனர்". (Maneck 1997, ப. 16)

ஆரம்ப காலங்கள் தொகு

சஞ்சனில் பார்சியர்கள் குடியேறியதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் மற்றும் சஞ்சனில் "வெற்றியின் தீ"யின் விரிவாக்கத்தை (மத்திய பெர்சியர்: அடாஷ் பாஹ்ரம் ) சுருக்கமாகத் தடுத்ததைத் தொடர்ந்து அவர்கள் நவசாரிக்கு குடிபெயர்ந்தது பற்றி குவிசா வில் சிறிது கூறப்பட்டுள்ளது. தாலாவைப் பொறுத்தவரை அடுத்த பல்வேறு நூற்றாண்டுகள் "இந்தியாவில் உண்மையான ஆதாரங்களைப் பெற்று புதிய நாட்டின் அவர்களுக்கான ஒட்டுதலைப் பெற்று அவர்களது ஆதரவாளர்களின் பாதுகாப்பு மூலமாக பிழைப்புக்கு ஆதாயம் தேடும்" முன்பு ஜோரோஸ்ட்ரியனிசம் "கடுமையான இன்னல்களை சந்தித்தது" (sic ) (Dhalla 1938, ப. 447).

அவர்கள் வருகையில் இரண்டு நூற்றாண்டுகள் கடந்த பிறகு குஜராத்தின் பிற பகுதிகளிலும் பார்சி இனத்தவர்கள் குடியேறத் தொடங்கினர். "இது அவர்களது சமய வரம்பின் எல்லையை வரையறுப்பதற்கு கடினத்தன்மையை" வழிவகுத்தது. (Kulke 1978, ப. 29) குஜராத்தை ஐந்து பந்தாக் (மாவட்டங்கள்) பிரிவுகளாக ஆக்கிய போது இந்த பிரச்சினைகள் 1290 ஆம் ஆண்டின் போது தீர்த்து வைக்கப்பட்டது. அதன் ஒவ்வொரு ஆட்சி வரம்பும் ஒவ்வொரு சமயகுருவுக்கான குடும்பம் மற்றும் அவர்களது சந்ததிகளை சார்ந்து இருந்தது. (அடாஷ் பஹ்ராமின் ஆட்சி எல்லையின் மேலிருந்த விவாதம் தொடர்ந்து கொண்டிருந்ததால் 1742 ஆம் ஆண்டில் உத்வடாவிற்கு நகருவதற்கு வழிவகுத்தது. இங்கு இன்று ஆட்சி எல்லைகள் ஐந்து பந்தாக் குடும்பங்களுக்குள் சுழற்சி முறையில் பங்கிடப்படுகின்றன).

தோராயமாக 11வது நூற்றாண்டின் முற்பகுதி வரை பரம்பரை ஜோரோஸ்ட்ரிய குருத்துவத்தின் இலக்கிய மொழியை மத்திய பெர்சியர்கள் கடைபிடித்து வந்தனர் என மும்பைக்கு அருகில் கன்ஹேரி கேவ்ஸில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. எனினும் அவெஸ்தா தயாரிக்கத் தொடங்கிய போது ஜென்ட் விரிவுரைகளை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்ப்புகள் (Dhalla 1938)[மெய்யறிதல் தேவை] "உன்னதமாக" செய்த போது 12 ஆம் மற்றும் 13 ஆம் நூற்றாண்டு வரை இருந்த பார்சி இனத்தவர்களுக்கான சிறிய ஆதாரமாக குவிசாவில் இருந்து ஒருபகுதியும் கன்ஹேரி கல்வெட்டுக்களும் இருந்தன. இந்த மொழிபெயர்புகளில் தாலா ஊகம் செய்த போது "அச்சமயத்தில் சிறந்த ஆர்வத்துடன் சமயம் சார்ந்த கல்விகள் பயிற்றுவிக்கப்பட்டன". மேலும் மதகுருக்கள் பலருள் மத்திய பெர்சியர்கள் மற்றும் சமஸ்கிருதத்தின் ஆணையானது "மேலான வரிசையிலிருந்தது" (Dhalla 1938, ப. 448).

13 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை குஜராத்தில் உள்ள ஜோரோஸ்ட்ரிய அர்ச்சகர்கள் (அனைத்து) இருபத்து இரண்டு சமய வழிகாட்டுதல்களை உடைய கோரிக்கைகளை ஈரானில் உள்ள அவர்களது சக-சமயவாதிகளுக்கு அனுப்பினர். ஏனெனில் ஈரானிய ஜோரோஸ்ட்ரியர்கள் "அவர்களைக் காட்டிலும் உன்னதமாக சமய விசயங்களில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்கள் செய்வதைக் காட்டிலும் மிகவும் பழைமையான பாரம்பரியமுடைய நம்பிக்கைகளை கண்டிப்பாக அவர்கள் மேற்கொள்வர் எனவும்" கருதினர் (Dhalla 1938, ப. 457). 1478 முதல் 1766 ஆம் ஆண்டு வரை சமயம் மற்றும் சமுதாய தொடர்பான விசயங்களில் உறவு கொண்டிருந்த இந்த பரிமாற்றங்கள் மற்றும் அவர்களது பதில்கள் ரிவாயாத் களாக (கடிதங்கள்) இச்சமுதாயத்தின் மூலமாக பேணிக்காக்கப்பட்டு வந்தன. மேலோட்டமாக 21 ஆம் நூற்றாண்டு நோக்குநிலையிலிருந்து இந்த இதொடெர் ரில் (குசராத்தி: questions) சில குறிப்பிடத்தக்க வகையில் எளிதாக இருந்தது - உதாரணமாக ரிவாயத் 376: அவெஸ்ட் மொழி உரைகளை பிரதியெடுக்க ஏதுவாக ஜோரோஸ்ட்ரியர் அல்லாதவர் மூலமாக மை தயாரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் ஆரம்பகால புதுமையுடைய ஜோரோஸ்ட்ரியர்களின் பயங்கள் மற்றும் கவலைகளினுள் நுட்பம் வாய்ந்த அறிவைக் கொண்டிருந்தனர். ஆகையால் இந்த மைக்கான வினா என்பது தன்மயமாதலுக்கு ஏற்ப பயத்தின் அறிகுறி மற்றும் அடையாளத்தின் இழப்பாக இருந்தது; இந்த கருப்பொருள் 21 ஆம் நூற்றாண்டில் வெளியான வினாக்களை விஞ்சி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. ஜோரோஸ்ட்ரிய்னிசத்திலிருந்து ஜுதின் களுக்கு (ஜோரோஸ்ட்ரியர்கள் அல்லாதவர்கள்) இந்த வினா மாற்றப்பட்டதில் அதற்கான பதில் (R237, R238) ஏற்கக்கூடியதாகவும் பாராட்டத்தக்கதாகவும் இருந்தது.(Dhalla 1938, ப. 474-475)

எனினும் "அவர்கள் வாழ்ந்தாகக் கருதப்படும் நிலையற்ற சூழல் அவர்களை முன்பு பாதுகாத்த ஆர்வத்திற்கு நடைமுறைக்கு ஒவ்வாத நிலையை உருவாக்கியது. மிகப்பெரிய மக்கள் கூட்டத்தின் கூட்டழிவு மற்றும் உட்கிரகித்தலின் இயல்பான பயம் அவர்களது சமுதாயத்தின் இனப்பாகுபாடுடைய பண்புகள் மற்றும் மாறுபட்ட தனிச்சிறப்புகளைப் பாதுகாப்பதற்கு அவர்களது வாழ்வில் தனித்த ஆர்வத்தையும் வலிமையான எண்ணத்தையும் உருவாக்கியது. இந்து சமய அமைப்புடன் அதிகமாக பளு ஏற்றப்பட்ட சூழலில் வாழ்வதை திண்மையான சமயத் தடைகளை கொண்டு மூடப்பட்டிருந்த அவர்களுக்கு பாதுகாப்பான இடமாக உணர்ந்தனர்" (Dhalla 1938, ப. 474). என்றாலும் அதே சமயத்தில் (அநேகமாய் அவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்து சிலகாலங்களில்) ஜோரோஸ்ட்ரியர்கள் - சமுதாய அடுக்கமைவுகளை வரையறுத்து அவர்களுடன் எடுத்து வந்திருந்தது அந்த சிறிய சமுதாயத்தை உறுதி செய்ய இயலாததாக இருந்தது - ஆனால் இவை அனைத்துப் பரம்பரை குருத்துவத்தை விலக்கி இருந்தது (சாஸினித் ஈரானில் அஸ்ரோனிஹ் எனப்படுகிறது). (ர)தெஷ்ட்ரியா ((r)atheshtarih) (உயர்குடிப் பிறப்பு, வீரர்கள் மற்றும் குடியுரிமை சார்ந்த பணியாளர்கள்), வாஸ்டரியோஷிஹ் (vastaryoshih) (உழவர்கள் மற்றும் மாடுமேய்பவர்கள்), ஹுடோக்ஷிஹ் (hutokshih) (கைவினைஞர்கள் மற்றும் பணியாட்கள்) ஆகிய எஞ்சிய பதவிகள் பெஹ்தின் னி என இன்று அறியப்படும் அனைத்து-விரிவான வகுப்பில் குழு அமைக்கப்பட்டனர் ("நல்ல சமயம்" என மொழி பெயர்க்கப்பட்டதற்கான "தியனா வைத் (daena) தொடர்ந்து வந்தவர்கள்"). இந்த மாறுதல் விளைவுகளை ஏற்படுத்தின. ஒன்று, கலப்புத் திருமணங்கள் மிகவும் அரிதாக இருந்தது வரை சில பரப்பிற்கு வாய்ப்புகள் திறக்கப்பட்டன (இது 20வது நூற்றண்டு வரை குருத்துவத்திற்கான சிக்கலைத் தொடர்ந்து வைத்திருந்தது). மற்றொன்று தொழில்சார்ந்த வரிசைகளுடன் ஒன்றி எல்லைகள் கடந்திருந்தன. இதனால் 18வது மற்றும் 19வது நூற்றாண்டு ஆங்கிலேய ஆட்சி அதிகாரிகளுக்கு பார்சி இனத்தவரை வசீகரிக்கும் காரணியாக அமைந்தது. அவர்கள் (ஒரு சமயத்தின் சமயகுரு மற்றொரு சமயகுருவுடன் தொடர்பு வைத்திருக்கக் கூடாது போன்ற) இந்து சமய அமைப்பில் முன்னறிந்து கூற இயலாத குழப்பங்களுக்குச் சிறிது பொறுமையைக் கடைபிடித்தனர்.

வாய்ப்பின் தருணம் தொகு

முகலாயப் பேரரசர் ஜஹாங்கிர் மற்றும் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஐ ஆகியோருக்கு இடையில் 1600களின் முற்பகுதியில் வணிகரீதியான உடன்பாட்டைத் தொடர்ந்து ஆங்கிலேய கிழக்கு இந்திய நிறுவனம் சூரத் மற்றும் பிற பகுதிகளில் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு தனிப்பட்ட உரிமைகளைப் பெற்றன. குஜராத் முழுவதும் உழவர்கள் சமுதாயமாக வாழ்ந்து கொண்டிருந்த பல பார்சி இனத்தவர்கள் புதிய வேலைகளை தேடுவதற்காக ஆங்கிலேயர் ஆரம்பித்த தொழிற்சாலைகள் இருந்த பகுதிக்கு நகரத் தொடங்கினர். 1668 ஆம் ஆண்டில் ஆங்கிலேய கிழக்கு இந்திய நிறுவனம் இங்கிலாந்தின் சார்லஸ் II இடம் இருந்து பம்பாயின் ஏழு தீவுகளை குத்தகைக்கு எடுத்தனர். இந்தத் தீவுகளின் கிழக்குக் கடற்கரையில் ஆழமான துறைமுகத்தை நிறுவனத்தினர் நிறுவியதே துணைக்கண்டத்தின் முதல் துறைமுகமாகும். 1687 ஆம் ஆண்டில் சூரத்திலிருந்து அவர்களது தலைமையகத்தை குடியேற்றப் பகுதிக்கு மாற்றிக்கொண்டனர். அரசாங்கம் மற்றும் பொதுப் பணிகளுடன் உள்ள தொடர்பைக் கொண்டு பார்சி இனத்தவர்கள் நம்பிக்கை பெறத் தொடங்கினர் (Palsetia 2001, ப. 47-57).

குருத்துவத்தின் தனிப்பட்ட திரளமாக முன்பு எழுத்தறிவு இருந்த போது ஆங்கிலேயப் பள்ளிகள் புதிய பார்சி இளைஞ சமுதாயத்தினை வழங்கின. இதற்கு எழுதுவதற்கு படிப்பதற்கும் மட்டுமே என அர்த்தமல்ல. ஆனால் மிகுந்த கூர்மையான அறிவுடன் அவர்கள் கல்வி பெற்றது ஆங்கிலேய விரிவாக்கத்திற்கு மிகவும் ஏதுவாயிருந்தது. இந்த எழுத்தறிவுத் தரங்கள் பார்சி இனத்தவருக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்து அவர்கள் "ஆங்கிலேயர் போன்று நடந்து கொள்வதற்கு வழிவகுத்தது". அவர்கள் "பிற தென்னாசிய சமுதாயத்தைக் காட்டிலும் விடாமுயற்சியுடனும் பயனுள்ள முறையிலும் உழைத்தனர்" (Luhrmann 2002, ப. 861). ஆங்கிலேயர்கள் மற்ற இந்தியர்களைப் பார்க்கையில் "மந்தமான, மடமையான, பகுத்தறிவுக்கு மாறான, வெளிப்படையாய் கீழ்படிந்து ஆனால் உட்புறமாய் ஏமாற்றும் திறனுடையர்களாக" (Luhrmann 1994, ப. 333) பார்சி இனத்தவர்கள் காணப்பட்டு தோற்றத்தில் தனிச்சிறப்புடன் இருந்தது குடியேற்ற நாடுகளின் அதிகாரிகள் பார்சியர்களுக்கு பொறுப்புகளை வழங்க ஏதுவாய் இருந்தது. மன்டெல்ஸ்லோ (Mandelslo) (1638) அவர்களை வாணிகஞ்சார்ந்த தொழில்களில் "தளரா", "மனச்சான்றுக்குக் கட்டுப்பட்ட" மற்றும் "தாரளமானவர்களாகக்" கண்டார். 1804 முதல் 1811 ஆம் ஆண்டு வரை பம்பாயில் பதிவாளராக இருந்த ஜேம்ஸ் மெக்கின்டோஷும் அதே கருத்துக்களையே தெரிவித்தார். "பார்சியர்கள் பண்டைய உலகத்தின் வலிமை வாய்ந்த நாடுகளின் ஒன்றின் சிறிய எச்சமிச்சம் எனவும் தொல்லைகளிலிருந்து விடுபட இந்தியா வந்தவர்கள் எனவும் தெளிவற்ற நிலை மற்றும் ஏழ்மையில் பல வயதுகளை இழந்தவர்கள் எனவும் அப்போது அவர்கள் ஆசியாவின் மிகவும் பிரபலமான வாணிகம் சார்ந்த பகுதிகளின் ஒன்றில் மிகவும் வேகமாக வளர்ந்து அந்த அரசாங்கத்தை அடைந்தவர்கள் எனவும்" அவர் கூறினார். (Loc. cit. 65

ரஸ்டம் மேனேக் என்ற ஒரு ஆர்வமிக்க முகவரும் இதில் ஒருவராவார். இவர் ஏற்கனவே டச் மற்றும் போர்த்துகீஸில் பெருமளவு செல்வங்களை சம்பாதித்திருந்தார். 1702 ஆம் ஆண்டில் மேனேக் நிறுவனத்தின் முதல் இடைத்தரகராக ("செத்" என்ற பெயர் அவருக்கு அளிக்கப்பட்டது) பணியமர்த்தப்பட்டார். அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் "அவரும் அவருடைய பார்சி கூட்டாளிகளும் மிகப்பெரிய பார்சி சமுதாயத்தின் தொழில்சார்ந்த மற்றும் நிதிசார்ந்த விளிம்புகளை பரவாக செயலாற்றினர்" (White 1991, ப. 304). ஆகையால் 18வது நூற்றாண்டின் மத்தியில் பம்பாய் மாநிலத்தின் தரகு இல்லங்களின் பெரும்பகுதி பார்சியர்களின் கைகளிலிருந்தன. புரோட்ச்சின் (தற்போது பவுரச் (Bharuch)) ஆட்சியரான ஜேம்ஸ் போர்பஸ் அவரது கிழக்குதிசை நினைவுகளில் (1770): "பம்பாய் மற்றும் சூரத்தில் வணிகர்களாகவும் உரிமையாளர்களாகவும் பார்சி இனத்தவர்கள் உள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார். "சுறுசுறுப்பான, திடமான, புத்திசாலித்தனமுடைய விடாமுயற்சியுடைய அவர்கள் தற்போது ஹிந்துஸ்தானின் மேற்குக் கடற்கரைகளில் நிறுவனத்தின் சொத்துகளில் மிகவும் மதிப்புமிக்க வடிவமாக உள்ளனர் அங்கு அவர்கள் மிகவும் மதிப்புடன் காணப்படுகின்றனர்" (Loc. cit. 67 படிப்படியாய் நிலையான குடும்பங்கள் "வளத்தையும் மேம்பாட்டையும் பெற்றனர் (சோராப்ஜி, மோடி, காமா, வாடியா, ஜீஜீப்ஹோய், ரெடிமனி, டாடிசெத், பெட்டிட், பட்டேல், மேத்தா, ஆல்ப்லெஸ், டாட்டா மற்றும் பலர்). அவற்றில் அவர்களது பல்வேறு கல்விசார்ந்த, தொழில்சார்ந்த, அறப்பணிசார்ந்த தொழில் முயற்சிகளும் பல நகரத்தில் பொது வாழ்க்கையில் பங்களிப்பில் மிகவும் கவனத்திற்கு உள்ளாகிறது". (Hull 1913; cf. 69

மெனெக் அவரது நன்கொடையின் மூலமாக உதவி உள்கட்டமைப்பை நிறுவினார். அது பார்சியர்களுக்கு நகரத்தில் நிலைபெறுவதற்கு தேவையானதாக இருந்தது. அதன் மூலமாக "1720களில் பார்சியர்களின் நடத்தை மற்றும் பணியின் முக்கிய மையமாக பம்பாய் உருவானது" குறிப்பிடத்தக்கதாகும் (White 1991, ப. 304). 1720கள் மற்றும் 1730களில் சூரத்தில் அரசியல்சார்ந்த மற்றும் பொருளாதாரம் சார்ந்த தனித்துவத்தைத் தொடர்ந்து (எஞ்சிய) முகலாய அதிகாரிகளிடம் இருந்தும் அங்கு ஆட்சி செய்த மாரத்தாகளிடமிருந்தும் பிரச்சினைகளைச் சந்திக்கத் தொடங்கினர். அதன் காரணமாக பல பார்சி குடும்பத்தினர் சூரத்திலிருந்து புதிய நகரத்திற்கு குடிபெயர்ந்தனர். 1700 ஆம் ஆண்டின் போது "மிகவும் சிலரே வணிகர்களாக அங்கு நிலைபெற்றிருந்தனர் என பதிவுகளில் உள்ளன; அந்த நூற்றாண்டின் மத்தியில் பம்பாயின் முக்கிய வணிகரீதியான அமைப்புகளில் ஒன்றாக பார்சியர்களின் வியாபாரம் அமைந்தது" (White 1991, ப. 312). மெனெக்கின் பெருந்தன்மை என்பது பார்சி நேயத்தின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட சான்றாக அமைந்தது. 1689 ஆம் ஆண்டில் ஆங்கிலிகன் மதகுருவான ஜான் ஓவிங்டன் கூறுகையில் சூரத் குடும்பம் "ஏழ்மைக்கு துணைபுரிகிறது, தேவைப்படும் சத்துணவு மற்றும் ஆதரவை வழங்க தயாராக உள்ளனர் எனவும் கூறினார். அவர்களது எங்கும் உள்ள இரக்ககுணம், எத்தகைய பணியாயினும் வேலைக்கு தயாராகும் நிலை அல்லது பருவகாலத்திற்கு தகுந்த தாரளமான அறப்பணி வழங்கல், நலிந்த மற்றும் இரங்கத்தக்க, நிவாரணத்திற்கு ஆதரவற்ற நிலையில் எந்த மனிதனும் இல்லாதது, அவர்களது அனைத்து குலங்களில் பிச்சைக்காரர்கள் துன்புறுவது போன்ற பணிகளையும் அவர்கள் செய்தனர்" (Ovington 1929, ப. 216).

 
தோராயமாக 1878 ஆம் ஆண்டில் "பம்பாயில் பார்சியர்களின்" மரவேலைப்பாடு
 
பார்சி மொழி கல்வெட்டுகள், குற்றாலம் தொல்லியல் அருங்காட்சியகம்

.

1728 ஆம் ஆண்டில் ருஸ்டமின் மூத்த மகன் நவ்ரோஸ் (பின்னர் நவ்ரோஜி) பம்பாய் பார்சி பஞ்சாயத்தை நிறுவினார் (இது சுய-ஆட்சிமுறைக்கான கருவியாக இருந்தது. ஆனால் இன்று இந்நிலை நம்பத்தகுந்ததாக இல்லை). இதன் மூலம் பார்சியர்களுக்கு புதிதாய் வரும் சமயம், சமூகம், சட்ட மற்றும் நிதி விசயங்களுக்கு உதவியளிக்கப்பட்டன. 18வது நூற்றாண்டின் மத்தியில் மெனெக் செத் குடும்பம் அவர்களது மிகப்பெரிய மூலங்களைப் பயன்படுத்தி அவர்களது நேரம், சக்தி மற்றும் பார்சி சமுதாயத்திற்கு நிதிசார்ந்த மூலங்களின் முக்கியமற்ற தன்மையை கொடுத்தது பார்சியர்களுக்கு பஞ்சாயத்தின் மேல் உள்ள நம்பிக்கையை வளர்த்தது. நகர்சார்ந்த வாழ்க்கையில் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் சமுதாயத்தின் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தும் கருவியாகவும் இந்த பஞ்சாயத் அங்கீகரிக்கப்பட்டது (Karaka 1884, ப. 215-217). எனினும் சரியில்லாமை மற்றும் உறவினர்களுக்கு தகாத சலுகை அளித்தல் போன்ற காரணங்களால் 1838 ஆம் ஆண்டில் பஞ்சாயத் தாக்குதலுக்கு உள்ளானது. பஞ்சாயத் திட்டமானது அதன் கீழ்படியக் கட்டாயப்படுத்துவதால் அறநெறி அல்லது சட்ட அதிகாரிகளுக்கு முழுவதும் ஏற்பற்றதாக உள்ளது எனவும் (ஒழுங்குகள் அல்லது நன்னடத்தைக் கோட்பாடு) இச்சமுதாயத்தின் பிரதிநிதியை ஆணையம் விரைவில் முடக்கும் எனவும் 1855 ஆம் ஆண்டில் பம்பாய் டைம்ஸ் குறிப்பிட்டது (Dobbin 1970, ப. 150-151). திருமணம் மற்றும் விவாகரத்து போன்ற விசயங்களில் பார்சியர்கள் எந்த தீர்ப்பும் வழங்கக்கூடாது என 1856 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இரகசிய ஆணையத்தின் சட்டம் சார்ந்த கமிட்டி ஆணையிட்டது. பஞ்சாயத்தானது "பார்சி திருமணம்சார்ந்த நீதிமன்றத்தை" அரசாங்கம்-அங்கீகரிப்பதைக் காட்டிலும் சிறிது அதிகமாகவே குறைத்துக்கொண்டது. சமுதாய உடமைகளின் நிர்வாகி மூலமாக பஞ்சாயத் மீண்டும் தொடங்கப்பட்டாலும் அது சுய-அரசாட்சி செய்யும் காரணங்களுக்காக விரைவாக முடக்கப்பட்டது (Palsetia 2001, ப. 223-225).

அதே சமயம் பஞ்சாயத்தின் பணிகள் முடக்கப்பட்டாலும் பல பிற ஏராளமான நிறுவனங்கள் உருவாகின. அவை சமுதாய இசைவுப் போக்கில் செயல்பட்டு பஞ்சாயத்தின் நிலையை பூர்த்தி செய்தது சமுதாயத்தின் துணிச்சலுக்கு வழிவகுத்தது. ஏராளமான அளவில் நலிவுற்றாலும் கல்வியே அப்பிரச்சினைகளைத் தீர்க்கும் வழி என்பதை அந்த நூற்றாண்டின் மத்தியில் பார்சியர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். 1842 ஆம் ஆண்டில் "பார்சி நலநிதி"யை ஜேம்செட்ஜீ ஜீஜீபாய் நிறுவினார். சூரத் மற்றும் அதைச்சுற்றி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் பார்சியர்களை முன்னேற்றும் பொருட்டு கல்வி மூலமாக அவர்களது நிலையை உயர்த்துவதே அதன் இலட்சியமாக இருந்தது. 1849 ஆம் ஆண்டில் பார்சியர்கள் அவர்களது முதல் பள்ளியைத் தொடங்கினர் (இருபாலினரும் படிக்கும் பள்ளி அச்சமயத்தில் புதுமையாக இருந்தது. ஆனால் விரைவில் ஆண்களும் பெண்களும் தனித்தனி பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர்) இதன்மூலம் கல்வி நிறுவனங்கள் துரிதப்படுத்தப்பட்டது. பார்சி பள்ளிகள் ஏராளமாகப் பெருகின ஆனால் பிற பள்ளிகளும் கல்லூரிகளும் ஏராளமாக இருந்தன (Palsetia 2001, ப. 135-139). தரமான கல்வி மற்றும் சமுதாய இணக்கத்தன்மை காரணமாக இச்சமுதாயத்தின் அறிவு வளர்ச்சி பெற்றது. 1854 ஆம் ஆண்டில் "பெர்சிய ஜோரோஸ்ட்ரிய நலநிதி"யை தின்ஷா மெனெக்ஜி பெட்டிட் தொடங்கினார். ஈரானில் உள்ள சக-சமயத்தார்களுக்கு நல்வாய்ப்புகளைப் பெருக்கி மேம்படுத்துவதே அதன் நோக்கமாகும். இந்த நிதி மூலம இந்தியாவிற்கு ஏராளமான ஈரானிய ஜோரோஸ்ட்ரியர்கள் குடிபெயர்ந்தனர் (அவர்கள் இன்று ஈரானியர்கள் என அழைக்கப்படுகின்றனர்). 1882 ஆம் ஆண்டில் அவர்களது சக-சமயத்தாருக்கான ஜிஜ்யா ஆள்வரியில் தள்ளுபடி பெறுவதற்கும் ஒரு கருவியாகவும் செயல்பட்டது.

18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் பார்சியர்கள் "கல்வி, தொழில்துறை மற்றும் சமுதாயம் போன்ற விசயங்களில் இந்தியாவில் முதன்மையாக விளங்கும் மக்களாக இருந்தனர். இயக்கத்தின் வளர்ச்சி, பெருமளவில் திரட்டப்பட்ட அதிர்ஷ்டங்கள் மற்றும் தாராள பண்பு ஆகியவற்றுடன் வந்தது அறப்பணியில் மிகப்பெரிய தொகைகளை அளிக்க வைத்தது" (Dhalla 1948, ப. 483)[சான்று தேவை]. 19 ஆம் நூற்றாண்டிற்கு அருகில் குடியேற்ற இந்தியாவில் உள்ள பார்சியர்களின் எண்ணிக்கை 85,397 ஆகும். அதில் பம்பாயில் மட்டும் 48,507 வசித்தனர். நகரத்தின் மொத்த மக்கள்தொகையில் இது 6% ஆகும் (மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, 1881)[சான்று தேவை]. இந்நகரத்தில் எண்ணிக்கை அளவில் மிகவும் குறைந்த அளவில் பார்சி சமுதாயத்தினர் உள்ளதாக இறுதியாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும் 19 ஆம் நூற்றாண்டு மரபுடைமைப்பேறு இச்சமுதாயத்தின் சுய-விழிப்புணர்வின் அறிவைக் காட்டுகிறது. 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மொழி (குஜராத்தியின் பார்சி வடிவம்), கலை & கைத்தொழில்கள் மற்றும் பார்சி அரங்கில் உருவாக்கப்பட்ட தையல் பழக்கங்கள், இலக்கியம் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிக்கைகள் மற்றும் பள்ளிகள் போன்றவற்றில் பார்சி இனத்தவரின் கலைசார்ந்த அடையாளங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பார்சியர்கள் தற்போது சமுதாய மருத்துவ மையங்கள், ஆம்புலன்ஸ் பிரிவுகள், ஆண்கள் சாரணர் படைகள், விடுதிகள் மற்றும் கட்டுமான விடுதிகள் போன்றவற்றை நடத்தி வருகின்றனர். அவங்கள் தங்களுக்கு சொந்தமான அறப்பணி நிலையங்கள், வீட்டுவசதி நிலஉடமைகள், சட்ட நிறுவனங்கள் மற்றும் நிதிமன்றங்கள் மற்றும் ஆளுகைகள் போன்றவற்றைக் கொண்டுள்ளனர். அவர்கள் நெசவாளர்களாகவோ அல்லது சில்லறை வியாபாரிகளாகவோ இருப்பதில்லை. ஆனால் வங்கிகள், ஆலைகள், கனரகத் தொழிற்சாலை, கப்பல் கட்டுமிடங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் தங்களது கலைசார்ந்த அடையாளங்களை தொடர்ந்து பாதுகாத்து வந்தாலும் இந்தியன் என தங்களை அங்கீகாரம் வழங்கிக்கொள்வதில் தவறுவதில்லை. ஆங்கிலேயப் பாராளுமன்றத்தில் பதவியேற்ற முதல் ஆசியரான தாதாபாய் நவுரோஜி: "நான் ஒரு இந்து, முகமதியன், பார்சி, கிறிஸ்தவன் அல்லது எந்த பிற சமயத்தை சேர்ந்திருந்தாலும் நான் ஒரு இந்தியன் என எழுதியுள்ளார். நமது நாடு இந்தியா; நாம் இந்தியர்கள் ஆவோம்" என எழுதியுள்ளார். (Ralhan 2002, ப. 1101)

சமுதாயத்தில் உள்ள பிரிவுகள் தொகு

 
பார்சி ஜாஷன் சடங்கு (இச்சடங்கால் இல்லம் தூய்மையாகிறது)

கால மாறுபாடுகள் தொகு

இப்பகுதி பார்சி காலண்டருக்கு வரையறுக்கப்பட்ட தகவல்களைத் தருகிறது. சமயம் சார்ந்த நோக்கங்களுக்காக ஜோரோஸ்ட்ரியர்கள் மூலமாக நாட்காட்டியில் உள்ள தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. வரலாறு மற்றும் அதன் மாற்றங்களைப் பற்றியத் தகவல்களும் அதில் இடம்பெற்றுள்ளன. பார்க்க ஜோரோஸ்ட்ரிய நாட்காட்டி.

சுமார் 12 ஆம் நூற்றாண்டு வரை அனைத்து ஜோரோஸ்ட்ரியர்களும் அதே 365-நாள் சமய நாட்காட்டியைப் பின்பற்றி வந்தனர். அர்ட்ஷிர் I (Ardashir I) நாட்காட்டியை திருத்தியதிலிருந்து மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது (r. 226-241 AD). பகுதி நாடுகளுக்கு நாட்காட்டி ஈடு செய்யாததில் இருந்து முழு சூரிய ஆண்டை நிறைவு செய்கிறது. இதன் நேரங்கள் பருவங்களுடன் ஒத்திசைவாக இருப்பதில்லை.

அதே சமயம் 1125 மற்றும் 1250 (cf. Boyce 1970, ப. 537) ஆம் ஆண்டுகளில் பார்சி இனத்தவர்கள் நாட்காட்டியில் பகுதி தினங்களை சரிகட்டுவதற்கு ஒரு எம்போலிஸ்மிக் மாதத்தை (embolismic month) சேர்த்துக் கொண்டனர். எனினும் பார்சியர்களான ஜோரோஸ்ட்ரியர்கள் மட்டுமே அதை பின்பற்றுகின்றனர் (ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது). இதன் விளைவாக அதிலிருந்து பார்சியர்கள் மற்றும் ஜோரோஸ்ட்ரியர்கள் மூலமாகப் பயன்படுத்தபடும் நாட்காட்டி மற்றவைகளுடன் முப்பது நாட்கள் வேறுபடுகிறது. அந்த நாட்காட்டிகள் நீண்ட காலத்திற்கு ஒரே மாதிரியே இருக்காது என்ற உண்மையை எவரும் அறிந்திருக்காத காரணத்தால் அந்த நாட்காட்டிகள் இன்னும் சாஹென்சாஹி (பேரரசுக்குரிய) என்ற அதே பெயரிலேயே உள்ளன.

 
1905 ஆம் ஆண்டில் பார்சி திருமணம்

1745 ஆம் ஆண்டில் சூரத்தை சுற்றி வாழ்ந்து கொண்டிருந்த பார்சியர்கள் அவர்களது மதகுருக்களின் பரிந்துரையின் பேரில் கட்மி அல்லது கடிமி நாட்காட்டிக்கு மாறிகொண்டனர். பண்டைய காலத்தில் 'தாயகத்தில்' பயன்படுத்தப்பட்ட நாட்காட்டியே சரியானது என அவர்கள் தங்களது மக்களை நம்பவைத்து விட்டனர். மேலும் அவர்கள் சாஹென்சாஹி நாட்காட்டியை "முடியரசுக் கோட்பாடு சார்ந்திருப்பதாக" அவதூறு பேசினர்.

1906 ஆம் ஆண்டில் இரண்டு வகைகளையும் ஒன்றாக இணைத்து (11 ஆம் நூற்றாண்டின் செல்ஜக் மாடலை சார்ந்து) மூன்றாவதாக ஒரு நாட்காட்டியை அறிமுகப்படுத்தும் முயற்சி நடந்தது: ஃபாஸிலி , அல்லது பாஸ்லி நாட்காட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளிலும் வரும் மிகுந்த நாட்களைக் கொண்டிருந்தது. மேலும் இளவேனிற் புள்ளியுடைய தினத்தில் புத்தாண்டும் அனுசரிக்கப்பட்டது. பருவங்களுடன் இணக்கமான நாட்காட்டியாக எப்போதும் இது மட்டுமே இருந்தாலும் பெரும்பாலான பார்சி இனத்தவர்கள் இதை புறக்கணித்தனர். இது ஜோரோஸ்ட்ரிய மரபை கட்டளைகளுடன் வெளிப்படுத்துவதாக இருந்தது (Dēnkard 3.419)[சான்று தேவை].

இன்று பெரும்பாலான பார்சி இனத்தவர்கள் சாஹென்சாஹி நாட்காட்டியின் பார்சி பதிப்பையே கடைபிடிக்கின்றனர். சூரத் மற்றும் பவுரச்சில் வாழும் பல பார்சி சமுதாயத்தினர் கட்மி நாட்காட்டியைப் பின்பற்றுகின்றனர். ஃபாஸ்லி நாட்காட்டி பார்சி இனத்தவர்கள் பலருள் முக்கிய இடம் பிடிக்கவில்லை. ஆனால் தரத்தில் பாஸ்தானி நாட்காட்டியை (பாஸ்லி நாட்காட்டியாக அதே சிறப்புடைய ஈரானிய உருவாக்கம்) ஒப்பிடுகையில் ஈரானின் ஜோரோஸ்ட்ரியர்கள் பலருள் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.

நாட்காட்டி விவாதங்களின் விளைவு தொகு

அவெஸ்தா இறைவழிபாடுகளில் சில மாதங்களின் பெயர்களை மேற்கோள்களாகக் குறிப்பிட்டாலும் மற்ற இறைவழிபாடுகளில் குறிப்பிட்ட ஆண்டின் நேரத்தை மட்டுமே பயன்படுத்துகின்றன. வெளியிடப்பட்ட நாட்டிகாட்டியில் "சரியானதை" சமய இயலான கிளைத்தலும் கொண்டுள்ளது.

மேலும் சிக்கலான விசயங்களுக்கு 1700களின் பிற்பகுதியில் (அல்லது 1800களின் முற்பகுதியில்) மிகவும் செல்வாக்கு மிக்க தலைமை-அர்ச்சகர் மற்றும் கட்மி நாட்காட்டியின் நம்பிக்கையுறுதியான ஆதரவாளர்கள் - பம்பாயின் டாடிசெத் அடாஷ்-பெஹ்ராமுடைய பிலோஸ் கவுஸ் தாஸ்டுர் - ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டார். ஈரானிலிருந்து வருகை தந்தவர்களின் வழிபாடுகளில் உச்சரிப்புகள் சரியானதாகும். ஆனால் பார்சியர்கள் மூலமாக உச்சரிக்கப்படுபவை சரியானது அல்ல. அவர் இறைவழிபாடுகளில் சிலவற்றில் மாற்றங்கள் செய்ய முற்பட்டார் (அனைத்திலும் அல்ல). அவை மிகவும் பழைமையான கட்மி நாட்காட்டியைப் பின்பற்றுபவர்கள் மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன (ஆகையால் இது உண்மையெனக் கொள்ளும் பாங்குள்ளது). எனினும் அவெஸ்திய மொழியின் அறிஞர்கள் மற்றும் மொழியியல்கள் உயிரெழுத்து-மாறுவதற்கு உச்சரிப்பில் மாறுபாட்டின் இயற்பண்புகளை உரைக்கின்றனர். அது ஈரானில் மட்டுமே ஏற்படுகிறது. உண்மையில் கடமி கள் மூலம் பின்பற்றப்பட்ட ஈரானிய உச்சரிப்பு என்பது கடமி அல்லாத பார்சியர்கள் மூலமாகப் பயன்படுத்தப்பட்ட உச்சரிப்பைக் காட்டிலும் மிகவும் புதியதாகும்.

இந்த நாட்காட்டி எப்போதும் துல்லியமாக கல்வியாண்டைச் சார்ந்து இல்லை என்ற சர்ச்சையும் நிலவுகிறது. 1780களில் இந்த சச்சரவு காரணமாக எப்போதாவது அதிகப்படியான வன்முறைகளும் வெடித்தன. 1783 ஆம் ஆண்டில் பாருச்சில் வாழ்ந்த ஹோமாஜி ஜேம்ஸ்ஹெத்ஜி என்ற சாஹென்சாஹி யைப் பின்பற்றியவர் ஒரு இளம் கடமி பெண்ணை உதைத்ததில் அவளுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால் அவருக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது.

இந்தியாவில் எட்டு அடாஷ்-பெஹ்ராம்களில் (தீ கோவிலின் உயர்ந்த தரம்) மூவர் கடமி உச்சரிப்பு மற்றும் நாட்காட்டியையும் மற்ற ஐவர் சாஹென்சாஹி யையும் பின்பற்றினர். ஃபாஸாலி கள் தங்களுக்கு என சொந்தமாக அடாஷ்-பெஹ்ராமைக் கொண்டிருக்கவில்லை.

இலிம்-இ-ஷ்னோம் தொகு

இலிம்-இ-ஷ்னோம் (Ilm-e-Kshnoom) ('பரவச அறிவியல்' அல்லது 'பேரின்பம்') என்பது நேர்ச்சரியான, சமயம் சார்ந்த நூல்களின் பொருள் விளக்கத்தைக் காட்டிலும் இரகசியம் மற்றும் மறைபொருளாகக் கற்பவை சார்ந்த பார்சி-ஜோரோஸ்ட்ரிய தத்துவப் பள்ளியாகும். சமய உட்பிரிவு ஆதரவாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் சாஹேப்-இ-திலான் ('இதயத்தின் குருக்கள்') என அழைக்கப்படும் 2000 தனிநபர்களின் இனம் மூலமாக காக்கப்பட்ட ஜோரோஸ்ட்ரிய நம்பிக்கையின் ஆதரவாளர்கள் ஆவர். அவர்கள் காகசஸின் (Caucasus) மலைகள் நிறைந்த சரிவுகளில் முழுவது தனித்து வாழ்பவர்கள் ஆவர் (மாற்றாக தாமாவந்த் மலைப் பகுதிகளில் அல்போர்ஸ் எல்லையில் வாழ்கிறார்கள்).

பார்சியர்கள் ஷ்னோமைப் பின்பற்றுபவர்களாக இருக்கலாம் என்று சில தெளிவான குறிப்புகளும் உள்ளன. குஸ்தி இறைவழிபாடுகள் பாஸாலி கள் மூலம் பயன்படுபவை போன்றே இருந்தாலும் பார்சி சமுதாயத்தில் எஞ்சியவர்கள் ஷ்னோம் ஆதரவாளர்கள் என அவர்கள் அனுசரிக்கும் நாட்காட்டியுடன் தொடர்புபடுத்தி பிரித்தரியப்படுகின்றனர். நீண்ட இறைவழிபாடுகளில் சில பிரிவுகளை மீண்டும் கூறுதல் போன்ற பொது வழிபாட்டுமுறையில் அவர்களது ஒப்புவித்தலில் சிறிது மாறுபாடுகளும் உள்ளன. எனினும் ஷ்னோம் அவர்களது கொள்கையில் மிகவும் பழமையானதாக உள்ளது. மேலும் பிற பார்சியர்களுக்கு தொடர்புபடுத்துவதுடன் தனித்திருத்தலையும் தெரிவிக்கிறது.

பம்பாயின் புறநகர் பகுதியான ஜோகேஷ்வரியில் ஷ்னோம்களின் ஆதரவாளர்களின் மிகப்பெரிய சமுதாயம் வாழ்கின்றனர். அங்கு அவர்களுக்கு என சொந்தமாக தீ கோவிலும் (பெஹ்ராம்ஷா நவ்ரோஜி ஷெரோஃப் தாரேமெஹர்), குடியிருப்பு வசதிகளும் (பெஹ்ரம் பாக்), செய்தித்தாளும் (பார்சி புக்கர் ) உள்ளன. சூரத்தில் ஆதரவாளர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். 19 ஆம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் இங்கு சமய உட்பிரிவு நிறுவப்பட்டது.

 
ஜோரோஸ்ட்ரிய நம்பிக்கையினுள் ஏற்றுக்கொள்ளப்படும் பார்சி சடங்குகள்

வெளியேற்றமும் உள்ளடக்கமும் தொகு

முக்கியமாக சண்டை என்பது நூற்றாண்டுகள்-பழைய கவலைகளின் வெளிப்படுகை மற்றும் உளவியல் பயங்கள் மற்றும் அடையாளங்களை இழந்ததன் காரணமாக உருவாவதாகும்.

எனினும் வழக்கமான வினாக்களில் சண்டை என்பது (பெரும்பாலும்) தர்க்கரீதியானதாகும். பார்சி சமுதாயத்தினர் அதிகம் உள்ள நகரங்களில் குறைந்தது ஒரு தீ கோவிலாவது மத குருக்கள் மூலமாக நடத்தப்படுவது தவிர்க்க முடியாததாகும். எந்த நிகழ்விலும் ஜோரோஸ்ட்ரிய நம்பிக்கை தீ கோவிலை வழிபடுவதை குறிப்பிடவில்லை அதனால் — கொள்கையில் — ஒரு குறிப்பிட்ட கோவிலில் நுழைவதற்கு தடைசெய்யப்பட்ட ஜோரோஸ்ட்ரியர் அவரது வீட்டிலிருந்து வழிபடலாம்.

ஏராளமான சச்சரவுகள் வெளிவந்தாலும் அவை முதன்மையான பிரச்சினையாக இல்லாமலிருப்பது பார்சியர்களுக்கு குறைவான எண்ணிக்கையை வழங்குகிறது: குறைவான பிறப்பு விகிதம் உண்டாகிறது.

இறந்தவர்கள் சார்ந்த சிக்கல்கள் தொகு

மும்பை மற்றும் கராச்சியில் இறக்கும் பார்சியர்கள் டவர் ஆஃப் சைலன்ஸுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றனர். நகரத்தில் உள்ள பிணந்தின்னிக் கழுகுகள் மூலமாக பிணங்கள் விரைவாக சாப்பிடப்படுகின்றன. புவி, தீ மற்றும் நீர் அனைத்தும் புனிதமான மூலங்களாகக் கருதப்படுவதால் இறப்பின் மூலமாக அவை கலங்கமுறக்கூடாது என்பதற்காக இவ்வழக்கத்தை அவர்கள் கடைபிடிக்கின்றனர். ஆகையால் புதைத்தல் மற்றும் எரித்தல் போன்ற நடவடிக்கைகள் எப்போதுமே பார்சி கலாச்சாரத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன. மும்பை மற்றும் கராச்சி போன்ற நகரங்களில் விரிவான நகர்மயமாக்கல் காரணமாக பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது இன்று பிரச்சினையாக உள்ளது. அதே போன்று மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு உணர்வைத் தூண்டாமல் இருப்பதற்காக பெரும்பாலும் கொடுக்கப்படும் மருந்தான டிக்லொஃபெனக் (diclofenac) மூலமாக ஏற்படும் விஷத்தன்மையாலும் இவற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் விளைவாக இறந்தவர்களின் உடல் சிதைவுறுவதற்கு நீண்ட காலங்கள் எடுத்துக்கொள்கிறது. இந்நிலை குறிப்பிட்ட பிரிவுகளில் வாழும் சமுதாயத்தினருக்கு எரிச்சலை உண்டாக்குகிறது.[யார்?]. இதனால் சிதைவு வேகமாக நடைபெறுவதற்கு டவர் ஆஃப் சைலன்ஸில் சூரிய பலகைகள் (solar panels) பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இச்செயல்பாடு அரைகுறையாகவே வெற்றியடைந்துள்ளது. ஆனாலும் எரிப்பது புதைப்பது போன்றவற்றில் உள்ள தடையை கண்டிப்பாக அகற்றக்கூடாது என்று இச்சமுதாயத்தினர் பலர் மூர்க்கமான விவாதத்தில் உள்ளனர்.

மும்பையில் உள்ள மலபார் குன்றின் மீது இந்த டவர் ஆஃப் சைலன்ஸ் அமைந்துள்ளது. இந்த மலபார் குன்றிலும் அதைச்சுற்றிய பகுதிகளில் வசிப்பவர்களும் இந்தச் செயல்பாடுகளுக்கு எதிராகப் புகார்களையும் அளித்து வருகின்றனர். பார்சியர்கள் தற்போது எரிப்பதற்கு எதிராக டவர் ஆஃப் சைலன்ஸில் இறப்புச் சடங்குகளை செய்து வருகின்றனர்.

பிரபலமான பார்சியர்கள் தொகு

 
மெர்குரி அடிப்பகுதியில்லாத ஒலிப்பெருக்கி நிறுத்தத்துடன் நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்

இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் வரலாற்றிற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை பார்சி இனத்தவர்கள் அளித்துள்ளனர். குறைந்த எண்ணிக்கையிலேயே அவர்கள் அனைவரும் அறியப்படுகின்றனர். முதுமொழியாக "பார்சி உனது பெயர் அறப்பணிக்கு" என வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஏட்டில் உள்ளவாறே மனித நேயத்தில் அவர்களது பங்களிப்பு மிகவும் சிறப்பானதாகும் (சமஸ்கிருதத்தில் "பார்சி" என்பதன் அர்த்தம் "பொருளாகவோ அல்லது செய்கையிலோ உதவிகளை செய்பவர்" என்பதாகும்). "நான் எனது நாட்டை நினைத்து பெருமை கொள்கிறேன். இந்தியா ஏராளமான ஜோரோஸ்ட்ரியர்களை கொண்டுள்ளது. அவர்கள் குறைந்த எண்ணிக்கையிலிருந்தாலும் அறப்பணி மற்றும் மனித நேயம் போன்ற பண்புகளில் நிகரற்று சிறந்து விளங்குகின்றனர்" என மகாத்மா காந்தி அவரது கூற்றுகளில் குறிப்பிட்டுள்ளார் (Rivetna 2002).

பார்சி இனத்தவர்களின் உழைப்பு பம்பாய் நகரம் மற்றும் குறிப்பிட்ட ஒரு நபரின் பெயர் சூட்டப்பட்ட நார்மியன் பாயின்ட் போன்ற பல்வேறு குறிப்பிடத்தக்க இடங்களின் முகங்களை மாற்றியது. பெரோசெஷாஹ் மேத்தா (Pherozeshah Mehta), தாதாபாய் நௌரோஜி மற்றும் பிகாஜி காமா (Bhikaiji Cama) போன்றோர் இந்திய சுதந்திர இயக்கத்திலிருந்த பார்சியர்கள் ஆவர்.

அறிவியல் மற்றும் தொழிதுறைகளிலும் பாரிசிகள் சிறந்து விளங்குகின்றனர், குறிப்பாக இயற்பியல் வல்லுநர் ஹோமி பாபாவைக் குறிப்பிடலாம். மேலும் டாட்டா, கோத்ரேஜ் மற்றும் வாடியா ஆகியோர் தொழில்துறை பார்சியக் குடும்பங்கள் ஆவர். ஃப்ரெட்டி மெர்குரி, இசையமைப்பாளர் கைகோஸ்ரு ஷபுர்ஜி சோராப்ஜி (Kaikhosru Shapurji Sorabji) மற்றும் இசைக்குழு இயக்குனர் ஜுபின் மேத்தா ஆகியோர் இசையில் சிறந்து விளங்கிய பார்சி இனத்தவர்கள் ஆவர்.

எழுத்தாளர் மற்றும் புகைப்படக்கலைஞர் சோனி டாராபோரெவாலா; நூலாசிரியர்கள் ரோஹிண்டன் மிஸ்ட்ரி, பிரடஸ் கங்கா, பாகிஸ்தானி எழுத்தாளர் பாப்சி சித்வா, அர்டஷிர் வாகில் மற்றும் பாகிஸ்தானி புலன்விசாரணை செய்தியாளர் அர்டஷிர் கவ்வஸ்ஜி ஆகிய பார்சி இனத்தவர்கள் கலைசார்ந்த ஆய்வுகள் உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்குபவர்கள் ஆவர். இந்திய இராணுவத்தின் முதல் ஃபீல்டு மார்ஷல் (Field Marshal) சாம் மெனெக்‌ஷா பார்சி இனத்தவர் ஆவார்.

பிரபலக் கலாச்சாரத்தில் பிரதிநிதித்துவங்கள் தொகு

  • திரிட்டி உம்ரிகர் (Thrity Umrigar) எழுதிய 2005 ஆம் ஆண்டு புத்தகம் த ஸ்பேஸ் பிட்வீன் அஸ் ஒரு பார்சி பெண் மற்றும் அவரது பார்சி-அல்லாத பணியாளரின் வாழ்க்கையைக் கூறுகிறது. விருந்துகளின் விளக்கங்கள், ஈமச்சடங்குகள் மற்றும் மும்பையில் சமகாலத்திய பார்சி வாழ்க்கையில் வழங்கப்பட்டுள்ள மதிப்புகள் பற்றிய உரையாடல்களும் இதில் உள்ளன.
  • ஹெர்மன் மெல்வில்லி எழுதிய நாவலான மைபை-டிக் கில் கேப்டன் ஆஹாப்பின் இரகசிய திமிங்கல வேட்டைப் படகின் தலைவர் ஃபெடல்லா "பார்சி" இனத்தவராகக் குறிப்பிடப்படுகிறார். நிலையான ஜோரோஸ்ட்ரிய பாரம்பரியங்கள் வலியுறுத்திக் கூறப்படுவதில் குறிப்பாக தீக்கான மரியாதையும் குறிப்பிடப்படுகிறது.
  • ருடியார்டு கிப்லிங்கின் "ஹவ் த ரினோசெரொஸ் காட் ஹிஸ் ஸ்கின்"னின் (ஜஸ்ட் சோ ஸ்டோரிஸ்) வரும் ஒரே மனிதன் பார்சி இனத்தவர் ஆவார். ஆடென் வளைகுடாவில் உள்ள ஒரு தீவில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சூரியனின் ஒளிக்கதிர்களை வெறுப்பதால் கிழக்கத்திய ஒளியைக் காட்டிலும் அதிகமாக எதிரொளிக்கிறது.
  • 2006 ஆம் ஆண்டு திரைப்படம் பீயிங் சைரஸ் பன்ச்கானியில் வாழும் ஒழுங்கு நடத்தையற்ற பார்சி குடும்பத்தைப் பற்றியக் கதையாகும். இது ஆங்கில மொழியி அதிக வருவாயை ஈட்டிய இந்தியத் திரைப்படம் ஆகும். செய்தி ஊடகங்களாலும் வெளிநாட்டு திரைப்பட விழாக்களிலும் உயர்வாகப் பாராட்டப்பட்டாலும் இத்திரைப்படம் பார்சி சமுதாயத்தினர்கள் பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும் 1988 ஆம் ஆண்டின் நன்கு அறியப்பட்ட திரைப்படமான பெஸ்டோஜி யை மராத்தி மேடை இயக்குனர் விஜயா மேத்தா தயாரித்தார். இது பார்சி தம்பதியனரைப் பற்றியத் திரைப்படமாகும். இதில் பாலிவுட்டின் பிரபல நடிகர்கள் சபானா ஆஸ்மி , நஷ்ருதீன் ஷா மற்றும் அனுபம் கர் ஆகியோர் நடித்திருந்தனர்.
  • 1998 ஆம் ஆண்டு தீபா மேத்தா திரைப்படமான எர்த் தில் (1947 ஆக இந்தியாவில் வெளியானது) முக்கியப் பாத்திரமாக வரும் பெண் பார்சி குடும்பத்தை சேர்ந்தவள் ஆவார். இந்தியப் பிரிவினையின் போது (சமயம் சார்ந்த வேறுபாடுகளின் காரணமாக ஏற்பட்டது) இக்குடும்பம் வசித்ததாகக் கதைப் பின்னப்பட்டிருந்தது. பாப்சி சித்வா எழுதிய அரை-வரலாற்று நாவலான கிராக்கிங் இந்தியா வை (தொடக்கத்தில் ஐஸ் கேண்டி மேன் ) சார்ந்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.
  • சல்மான் ரஷ்தியின் நாவலான த கிரவுண்ட் பெனித் ஹெர் பீட் (The Ground Beneath Her Feet) பார்சி பின்னணியிலிருந்து வரும் இந்திய ராக் ஸ்டார் ஆர்மஸ் காமா உலகப் புகழ் பெறுவதைக் கூறுகிறது. மேலும் ரஷ்தியின் புத்தகமான மிட்நைட்'ஸ் சில்ட்ரனில் (Midnight's Children) வரும் இரண்டு சிறிய ஆனால் முக்கியப் பாத்திரங்களான சிப்ரஸ் துபாஷ் மற்றும் ஹோமி கேட்ராக் பார்சி இனத்தவர்கள் ஆவர்.
  • மேன் புக்கர் பிரைஸ்-பரிந்துரைக்கப்பட்ட பார்சி நூலாசிரியர் ரோஹிண்டன் மிஸ்ட்ரியின் புத்தகங்கள் முக்கியமாக பார்சி பாத்திரங்கள் மற்றும் சிறப்பான இந்திய சமுதாயத்துடன் அவர்களுக்கு இருக்கும் உறவுகளை வைத்தே பின்னப்பட்டிருந்தது. குறிப்பாக டேல்ஸ் ஃப்ரம் பிரோஷா பாக் (Tales from Firozsha Baag) (1987), சச் எ லாங் ஜர்னி (1991), எ ஃபைன் பேலன்ஸ் (1995) மற்றும் பேமிலி மேட்டர்ஸ் (2002) போன்ற புத்தகங்கள் இவ்வகையிலேயே எழுதப்பட்டன.
  • ஜூல்ஸ் வெர்னெயின் நாவலான அரவுண்ட் த வேர்ல்ட் இன் எய்ட்டி டேஸில் பிலெஸ் போக் மற்றும் பாஸேபோர்டவுட் இருவரும் ஒரு இந்தியப் பெண் அவுதாவை உடன்கட்டை ஏறுதலில் (sati) இருந்து காப்பாற்றுகின்றனர். அவளது கணவனின் (மஹாராஜா) ஈமச்சடங்கு சிதையில் அவள் தள்ளப்படுவதில் இருந்து அவர்கள் காப்பாற்றுகின்றனர். பின்னர் அவள் ஒரு பார்சி பெண்ணாகவும் அவளுடைய வணிகத் தந்தை அவளை மஹாராஜாவிற்கு திருமணம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
  • ஜான் இர்விங்கின் 1994 ஆம் ஆண்டு நாவல் எ சன் ஆஃப் த சர்கஸில் முக்கியப் பாத்திரம் டாக்டர் ஃபரோக் தரூவலா ஒரு பார்சி இனத்தவர் ஆவர். அவர் ஒரு ஆஸ்திரேலியரைத் திருமணம் செய்து கொள்கிறார்.
  • 2007 ஆம் ஆண்டு திரைப்படம் பர்ஜானியா - 2002 ஆம் ஆண்டு ஆண்டு அகமதாபாத் கலவரங்களில் குறுக்குப் பேச்சில் ஈடுபடும் பார்சி குடும்பத்தின் உண்மையைக் கதையை சார்ந்து எடுக்கப்பட்டதாகும். உடோப்பிய உலகத்தில் வரும் பாத்திரங்களின் பெயர்களின் ஒன்று இத்திரைப்படத்திற்கு சூட்டப்பட்டது. இவ்வுலகம் எப்போதும் கிரிக்கெட் மற்றும் ஐஸ் கிரீமை சுற்றியே சுழலுகிறது.
  • 2003 ஆம் ஆண்டு இந்தித் திரைப்படம் முன்னாபாய் MBBS இல் டாக்டர் ருஸ்டம் பவ்ரியாக நடித்த குருஷ் டெபோ மருத்துவத் தேர்வுகளில் சஞ்சய் தத் தேர்ச்சி பெற உதவுகிறார். இத்திரைப்படத்தில் ருஸ்டமின் வயதான தந்தை பார்சி பின்னணியிலிருப்பதைப் போன்று சித்தரிக்கப்பட்டது.
  • பாசு சாட்டர்ஜி இயக்கிய கட்டா மீட்டா பார்சி பின்னணியைக் கொண்டிருந்தது.
  • ராய் ஆப்ஸ் எழுதிய 'கொனான் டாயல் அண்ட் த எடல்ஜி கேஸ்' (Conan Doyle and The Edalji Case) ஒரு BBC வானொலி முழு நாடகம் ஆகும். இது பார்சி வழக்கறிஞரான ஜார்ஜ் எடல்ஜியைப் பற்றியக் கதையாகும். இதில் அவர் தவறுதலாக 'கால்நடை-மலட்டுத்தன்மையாக்கலில்' குற்றம் சாட்டப்படுகிறார்.

இதனையும் காண்க தொகு

குறிப்புதவிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Hodivala 1920, ப. 88
  2. Boyce 2001, ப. 148
  3. Lambton 1981, ப. 205
  4. Nigosian 1993, ப. 42
  5. Eliade, Couliano & Wiesner 1991, ப. 254.
  6. Palsetia 2001, ப. 1,n.1.
  7. Hinnells 2005, ப. 6.
  8. Palsetia 2001, ப. 1, n1.

இதனையும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்சி_மக்கள்&oldid=3707328" இலிருந்து மீள்விக்கப்பட்டது