பாளையம் (திண்டுக்கல்)

இது தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓர் பேரூராட்சி ஆகும்

பாளையம் (ஆங்கிலம்:Palayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 15,336 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 25.10 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இது வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

அமைவிடம் தொகு

பாளையம் பேரூராட்சி, திண்டுக்கல் மாவட்டத் தலைமையிடமான திண்டுக்கல்லிருந்து 40 கிமீ தொலைவிலும்; கரூரிலிருந்து 35 கி.மீ தொலவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,686 வீடுகளும், 15,336 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 71.9% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 988 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 895 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,525 மற்றும் 1 ஆகவுள்ளனர்.[2]

ஆதாரங்கள் தொகு

  1. பாளையம் பேரூராட்சியின் இணையதளம்
  2. Palayam Town Panchayat Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாளையம்_(திண்டுக்கல்)&oldid=2710044" இலிருந்து மீள்விக்கப்பட்டது