புறக்கோட்டை
புறக்கோட்டை (Pettah) இலங்கையின் கொழும்பில் உள்ளதோர் நகர்ப்பகுதி ஆகும். இது கொழும்பின் மையப்பகுதியான கோட்டையிலிருந்து கிழக்கில் உள்ளது. இங்குள்ள திறந்தவெளிச் சந்தையும் கடைகளும் புகழ்பெற்றவை.[1] ஜாமி-உல்-அல்ஃபார் மசூதியும் கான் மணிக் கூண்டும் குறிப்பிடத்தக்க அடையாளங்களாகும்.
புறக் கோட்டை පිට කොටුව Pettah | |
---|---|
நகர்ப்பகுதி | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மேல் மாகாணம் |
மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
நேர வலயம் | இலங்கை சீர்தர நேர வலயம் (ஒசநே+5:30) |

மக்களியல் தொகு
இது பலதரப்பட்ட இனத்தவரும் சமயத்தவரும் வசிக்குமிடமாகும். சோனகர்களும் மெமோன்களும் கூடுதலாக உள்ளனர்.இருப்பினும் பெருமளவில் சிங்களவர்களும் தமிழர்களும் இங்கு வசிக்கின்றனர். பரங்கியர்கள்,இலங்கை மலேயர்கள் மற்றும் பிற இனத்தவரும் இங்குள்ளனர். பௌத்தம், இந்து சமயம், இசுலாம்,கிறித்தவம் முதன்மையான சமயங்களாகவும் மற்ற சமயங்களும் நம்பிக்கைகளும் சிறுபான்மையாகவும் கடைபிடிக்கப்படுகின்றன.
மேற்கோள்கள் தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-03-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130324090008/http://www.lankainfo.com/travelinformation/pettah.htm.